தொகுப்பு

Posts Tagged ‘கொலை’

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி பிரவசத்திற்குப்பின் கைது

திருநெல்வேலி : தினமலர் – செப்டம்பர் 10, 2011 :: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=310751

நெல்லை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி இரு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

நெல்லை அருகே குறிச்சிக்குளம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாபு(35). டயர் கம்பெனியில் பணியாற்றினார். இவர் மனைவி உச்சிமாகாளி என்ற உமா(28). கடந்த ஜூலையில் பாபு வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தினர். பாபு சாவில் மர்மம் இருப்பதாக அவர் உறவினர்கள் கூறினர். பாபு உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. மூச்சு திணறி பாபு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் பாபுவின் மனைவி உமாவிற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உமாவிற்கும், தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்த லாரிஷெட் உரிமையாளர் நல்லசாமிக்கும் இடையே “கள்ளத்தொடர்பு’ இருந்துள்ளது. பாபு ஊரில் இல்லாத நாட்களில் இருவரும் ஜாலியாக இருந்தனர். இதை பாபு கண்டித்தார். இதுதொடர்பான தகராறில் சம்பவத்தன்று பாபுவின் முகத்தில் தலையணையை அமுக்கி நல்லசாமியும், உமாவும் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் நல்லசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். கணவன் உடலை படுக்கையில் போட்டு விட்டு எதுவும் தெரியாதது போல உமா கதறி நாடகமாடியுள்ளார்.

இச்சம்பவத்தின் போது உமா கர்ப்பிணியாக இருந்தார். சில நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை போலீசார் உமாவை கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் உமா கொக்கிரக்குளம் பெண்கள் சிறையில் தன் குழந்தையுடன் அடைக்கப்பட்டார். நல்லசாமியை போலீசார் தேடி வருகின்றனர். உமாவிற்கு சொந்த ஊர் மானூர்.

கள்ளக்காதலுக்காக தன் குழந்தையையே கொன்ற தாய்

mother-kills-her-child-for-being-a-hindrance-to-adulteryசிவகாசி: ஜூன் 16,2011,23. செய்தை: தினமலர்.

தொட்டிலில் தூங்கிய குழந்தையை, கள்ளக் காதல் மோகத்தால்,கொலை செய்த தாய், கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மதுரை பாண்டிக்கும், அனுப்பங்குளம் நயினார் மகள் துர்காதேவிக்கும், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. துர்காதேவி கர்ப்பிணியான நான்கு மாதத்தில், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கோரி, கணவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு சம்மதிக்காத துர்காதேவி, சேர்ந்து வாழ்வதாக கூறி, பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், துர்காதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பேச்சு வார்த்தைக்கு பின், 9 மாத குழந்தை முகேஷ் பாண்டியுடன், துர்காதேவி, கணவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். மாலையில் வீடு திரும்பிய கணவர், தொட்டிலில் தூங்கிய மகனை தூக்கினார்.பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.பரிசோதித்த டாக்டர்,”குழந்தை இறந்துவிட்டது’ என்றார். சந்தேகம் அடைந்த மதுரை பாண்டி, சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார், துர்காதேவியிடம் விசாரித்தனர்.

விசாரணையில், திருமணத்திற்கு முன் அனுப்பங்குளத்தை சேர்ந்த குமாருடன் துர்காதேவிக்கு ஏற்பட்ட பழக்கம், திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்தது தெரிய வந்தது.மேலும், கணவருடன் வாழப் பிடிக்காமல், தந்தையுடன் வசித்த துர்காதேவியை, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ, குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்; “குழந்தை உயிருடன் இருப்பதால் தானே, கணவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்துகின்றனர்…’ என நினைத்த துர்காதேவி, தொட்டிலில் தூங்கிய குழந்தையை, மூச்சு திணறடித்து கொலை செய்தார் என்றும் தெரிந்தது.இதையடுத்து, துர்காதேவியை போலீசார் கைது செய்தனர்.

ஜோதிடம் மீது பழி போட்ட தாய்:

பெற்ற மகனை கொலை செய்த தாய், மகன் இறந்ததை நினைத்து அழுவது போல் நடித்தார். அப்போது,”அப்பாவிற்கும், மகனுக்கும் ஜாதகம் சரியில்லை; அப்பாவும், மகனும் நேருக்கு நேர் பார்த்தால் யாராவது ஒருவர் உயிருடன் இருக்க மாட்டார் என, ஜோதிடர் கூறியது, பலித்து விட்டதே’ எனக் கூறி, அழுது புலம்பினார்.

ஆனால், பச்சிளம் குழந்தையை கொலை செய்த அவர், சிறைக்கு போகும் முன், போலீசார் வாங்கி கொடுத்த மதிய உணவை ருசித்து சாப்பிட்டபடி, எந்தவித பதட்டமும் இல்லாமல் காணப்பட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=258917

அன்னையர் தினம் ஸ்பெஷல்!

சொல் பேச்சை கேட்காததால் தலையில் கல்லை போட்டு மாணவியை கொலை செய்த தாய் கைது

துடியலூர், மே. 6- 2011. செய்தி: தட்ஸ்தமிழ் [சுட்டி]

கோவை அருகே உள்ள கூடலூர் பேரூராட்சி செல்வபுரம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. வீரபாண்டி பிரிவில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஷீலா (வயது 14) என்ற மகள் இருந்தார். இவர் ஜோதி புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8 – ம் வகுப்பு படித்து விட்டு விடுமுறையில் இருந்தார்.

தாய் – மகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. காளியம்மாளின் சொல் பேச்சை ஷீலா கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மகள் மீது ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மாலை ஷீலா வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

அப்போது அவரது தாய் காளியம்மாள் அருகில் இருந்த கல்லை எடுத்து ஷீலாவின் தலையில் போட்டார். இதில் ஷீலா சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. மாடசாமி, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

ஷீலாவின் பிணததை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகளை கொன்ற காளியம்மாளை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் தனது சொல் பேச்சை கேட்காததால் மகளை கொன்றதாக தெரிவித்துள்ளார். பெற்ற தாயே மகளை கொன்ற சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவனுக்கு கொலை மிரட்டல் மனைவி, கள்ளக்காதலன் கைது

செஞ்சி : கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி, கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், முட்டத்தூரை சேர்ந்தவர் முத்து (27). இவரது மனைவி நித்யா (20). இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார். இவர்கள், கடந்த மாதம் திருப்பூர் அருகே உள்ள தாராபுரத்திற்கு, செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர். அங்கு முட்டத்தூரை சேர்ந்த எட்டியான் மகன் ராமராஜ் (22) என்பவருடன், நித்யாவிற்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இதனால் தலைமறைவான இருவரையும் தேடி, முத்து, முட்டத்தூர் வந்தார். ஊர் பெரியவர்கள் நித்யாவை மீண்டும் முத்துவுடன் சேர்த்து வைத்தனர். அடுத்த சில நாட்களில், நித்யா மீண்டும் ராமராஜனுடன் தலைமறைவானார். கடந்த 9ம் தேதி இரவு 7 மணிக்கு இவர்கள், அனந்தபுரம் கூட்ரோட்டில் நின்றிருந்தனர். இதை பார்த்த முத்து, நித்யாவை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆத்திரமடைந்த ராமராஜனும், நித்யாவும் சேர்ந்து, முத்துவை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப் பதிந்து ராமராஜ், நித்யா இருவரையும் கைது செய்தனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=203364

கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவர் கொலை :கூலிப்படையினருடன் மனைவியும் கைது

இப்போதெல்லாம் நம் நாட்டில் கள்ளக்காதல் குடிசைத் தொழில் அன்றாடம் ஜாம்ஜாமென்று நடந்தேறுகிறது. இதே ரீதியில் போனால் அனைத்து நாளிதழ்களும் “கள்ளக்காதல் சிறப்பு இதழ்கள்” தினந்தோறும் வெளியிடும் நிலை சீக்கிறமே வரலாம்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை போட்டுத் தள்ளும் கலையில் நம் பெண்குலத் திலகங்கள் முழுத் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம். மேலும் நம் பெண்ணியவாதிகள் இதை ஒரு மாபெரும் வெற்றியாகக் கூட கொண்டாடலாம்!

இதோ ஒரு லேட்டஸ்ட் செய்தி (நன்றி: தினமலர் – ஏப்ரல் 29, 2011 – சுட்டி):

wife kills husband for obstructing illicit relationshipதிருவள்ளூர்:கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கழுத்தறுத்துக் கொலை செய்த பாசக்கார மனைவியை, கூலிப் படையினருடன் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(45); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி(38). இவர்களுக்கு திருமணமாகி அபிலாஷ்(15), அஜீத்(12) என இரண்டு மகன்களும், பிரீத்தா(10) என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை செல்வகுமார் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஜோதி செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை திருவள்ளூர் எஸ்.பி., வனிதா அமைத்தார். விசாரணையில், செல்வகுமாரின் சொந்த ஊரான பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்த தைரியநாதன், அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றதும், செல்வகுமாரின் இறுதிச்சடங்கில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டுச் சென்றதும் தெரிந்தது.

மேலும்,தைரியநாதன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை செல்வகுமாருக்கு கடன் கொடுத்திருந்ததும், அதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததும், இங்கு வந்து செல்லும்போது செல்வகுமார் மனைவி ஜோதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும் தெரிந்தது.செல்வகுமார் மனைவி ஜோதியை கைது செய்து விசாரித்தபோது, தைரியநாதனுடன் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாலும், கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், தைரியநாதன் உதவியோடு கணவரை கொலை செய்ய முடிவு செய்ததாக, அவர் போலீசாரிடம் கூறினார்மேலும் செல்வகுமாரை கொலை செய்வதற்காக தைரியநாதன், புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினரிடம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி, ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, செல்வகுமார் மனைவி ஜோதி ஒத்துழைப்போடு 20ம் தேதி இரவு வேப்பம்பட்டு அம்பேத்கர் நகர் வந்தனர்.
அன்று இரவு செல்வகுமார் கீழ் தளத்தில் படுத்துறங்கியதும், வீட்டின் தெரு கதவை திறந்து வைத்துவிட்டு, பிள்ளைகளுடன் மாடியில் படுத்துக் கொண்ட ஜோதி, தைரியநாதனுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அங்கு கூலிப்படையுடன் வந்த தைரியநாதன், தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தியால் கழுத்தை அறுத்தும், முதுகு, வயிற்றுப் பகுதியில் அறுத்தும் கொலை செய்ததாக தைரியநாதன் போலீசாரிடம் கூறினார்.இதையடுத்து தைரியநாதன் அடையாளம் காட்ட, சென்னையில் பதுங்கியிருந்த கூலிப்படையினரான அகரம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(24), ஜானகிராமன்(24) ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேலு, தங்கமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலை நேரில் பார்த்த கல்லூரி மாணவியை எரித்துக் கொலை செய்த தாய்

Mother murders daughterகடையநல்லூர்: தாயின் கள்ளக் காதலை கண்டித்த கல்லூரி மாணவியை தாயாரும், அவரது கள்ளக் காதலனும் சேர்ந்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.

கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன் இவரது மனைவி செண்பகவல்லி இவர்களது மகள் பத்மினி (18).என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினி மர்மமான முறையில் உடல் கருகி இறந்தார்.

இது தொடர்பாக அவரது தாயார் செண்பகவல்லியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கள்ளக்காதலனான கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்த சுந்தரையா என்பவருடன் சேர்ந்து பத்மினியை தீவைத்து எரித்துக் கொன்றது தெரியவந்தது.

சுந்தரையா செண்பகவல்லியின் உறவினரும் ஆவார். செண்பகவல்லியின் கணவர் இல்லாத சமயத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை பத்மினி நேரில் பார்த்து பலமுறை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொன்று பின்னர் அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர்.

போலீசாரிடம் பத்மினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினர். போலீசார் விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டனர்.

சுந்தரையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி: தட்ஸ்தமிழ்.

English summary
Mother and her lover were arrested for murdering daughter for opposing their illicit relationship in Kadayanallur town

கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

சாணார்பட்டி – ஏப்ரல் 02,2011 : கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமேடையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(40).விவசாயக்கூலி. இவரது மனைவி வெள்ளையம்மாள்(40).இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வெள்ளையம்மாளுக்கும், இதே ஊரைச்சேர்ந்த ஆரோக்கியசாமிக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்தது. வெள்ளைச்சாமி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற வெள்ளைச்சாமியை, வெள்ளையம்மாளும் கள்ளக்காதலன் ஆரோக்கியச்சாமியும் சேர்ந்து கொலை செய்து, உடலை சிறுமலை அடிவாரம் பகுதியில் ஒரு பள்ளத்தில் மூடி, விட்டனர். பின், வெள்ளையம்மாளே சாணார்பட்டி போலீசில் தனது கணவர் வெள்ளைச்சாமி காணவில்லை என புகார் செய்தார்.போலீசாருக்கு வெள்ளையம்மாள் மீது சந்தேகம் ஏற்பட்டது. வெள்ளையம்மாளை விசாரித்ததில், அவர், “நானும் எனது கள்ளக்காதலன் ஆரோக்கியசாமியும் சேர்ந்து வெள்ளைச்சாமியை கொன்றோம்,” என ஒப்புக்கொண்டார்.

இறந்த வெள்ளைச்சாமி உடல் மதுரைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. போலீசார் வெள்ளையம்மாள், ஆரோக்கியசாமியை கைது செய்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=217101

கொலையில் முடிந்த “மிஸ்டு கால்” கள்ளக்காதல்

வடமதுரை அருகே பெண் இன்சூரன்ஸ் ஏஜன்ட் கொலையில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

செய்தி: தினமலர் (சுட்டி). நாள்: பிப்ரவரி 24,2011

மிஸ்டு கால் கள்ளக்காதல்திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கொம்பேறிபட்டியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் முருகேசன் மனைவி தனலட்சுமி(33). எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் ஏஜன்ட். கடந்த மாதம் 4ம் தேதி காந்திகிராமம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அய்யலூர் தீத்தாகிழவனூர் பாலத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை காணவில்லை. வாகனத்தில் கொண்டு வந்த பிணத்தை உருட்டிவிட்டதற்கான அடையாளம் சம்பவ இடத்தில் இருந்தது. தேர்தலுக்கான போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதால் எரியோடு இன்ஸ்பெக்டர் முத்துபாண்டியிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

அவரது தலைமையிலான தனிப்படையினர் விசாரணையில், நான்கு மாதங்களுக்கு முன் தனலட்சுமியின் தவறுதலான “மிஸ்டு கால்’ மூலம் அறிமுகமானவர் திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டைச் சேர்ந்த குமரேசன்(26). இவரது தந்தை மாரியப்பன் திண்டுக்கல் தாட்கோ அலுவலக உதவியாளர். 9ம் வகுப்பு வரை படித்த குமரேசன், தனது தந்தை வேலை செய்யும் அலுவலகம் அருகில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

தனலட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பினால், அவரது மனைவி பாத்திமா, இரண்டு குழந்தைகளும் குமரேசனிடம் கோபித்து கொண்டு சென்று விட்டனர். சம்பவத்தன்று குமரேசனுடன் தனலட்சுமி காரில் சுற்றி வரும் போது, தனலட்சுமி மொபைலுக்கு வேறொரு ஆண் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த குமரேசன், தனலட்சுமியின் மொபைலை பறிக்க முயற்சிக்க, அவர் தரமறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் தனலட்சுமியை காரினுள் வைத்து கொலை செய்து, அவரது நகைகளை எடுத்து கொண்டு அய்யலூர் பாலத்தில் பிணத்தை தள்ளிவிட்டு சென்றது தெரிந்தது.

இதனையடுத்து குமரேசனை கைது செய்த போலீசார் தனலட்சுமியின் நகைகளை மீட்டு, கொலைக்கு பயன்படுத்திய இண்டிகா காரையும் பறிமுதல் செய்தனர்.

கொலையானவள் மீண்டும் தோன்றினாள்; கைதாகி சீரழிந்தவனுக்கு யார் பதில் சொல்வது?

ஒன்பது ஆண்டிற்கு முன் கொலை செய்யப்பட்டதாககருத்தப்பட்ட பெண், கலெக்டர் அலுவலகத்தில் ஆஜர்

Woman who was considered killed and men arrested as killers surfaces after 9 yearsதூத்துக்குடி அருகே ஒன்பது ஆண்டிற்கு முன் கொல்லப்பட்டதாக கருதப்பட்டு உயிரோடு வந்த பெண், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆஜரானார். பொய் வழக்கு போட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.திருப்பூர், செல்லம் நகர், ஆனந்தன் மனைவி மேகலா (எ) மணிமேகலா(28). 2002 ஏப்ரலில், கணவரோடு ஏற்பட்ட தகராறு காரணமாக இவர், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், பேரூரில் பெரியப்பா சண்முகராஜ் வீட்டிற்கு வந்தார். நீண்ட நாட்களாகியும் அவர் திருப்பூர் திரும்பாததால், அவரை காணவில்லை என ஆனந்தன், ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார். இதனிடையே, மேகலா தனதுபெரியப்பா வீட்டிலிருந்து மதுரைக்கு சென்று, பின், திருப்பூர் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2002 ஏப்., 5ம் தேதி, வல்லநாடு பகுதியில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுகிடந்தார். விசாரணை நடத்திய போலீசார், அது, மாயமான மேகலா உடல்தான் என முடிவு செய்தனர். சண்முகராஜனோடு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மேகலாவை கடத்தி எரித்துக் கொலை செய்ததாக அதே ஊரைச் சேர்ந்த கோயில்பிள்ளை(47) பாலசுப்பிரமணியன்(35) குருநாதன்(30) தாசன்(32) ஆகிய நால்வரை, முறப்பநாடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி விரைவு கோர்ட்டில் நடந்த அந்த கொலை வழக்கில் உரிய ஆதாரமில்லை எனக்கூறி, குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, அப்போது கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட மேகலா, தனது இரு குழந்தைகளுடன் பிப்., 8ம் தேதி ஸ்ரீவைகுண்டம், பேரூர், பெரியப்பா சண்முகராஜ் வீட்டிற்கு வந்தார். அவர் உயிருடன் இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்ட கிராமத்தினர், ஒன்பது ஆண்டிற்கு முன் கொலையுண்டதாக வெளியான தகவலை மேகலாவிடம் கூறினர். அதைக்கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் ஆஜர்:

இந்நிலையில், மேகலா நேற்று, குழந்தைகளுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆஜரானார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வியை சந்தித்து, தான் உயிருடன் இருப்பதாகவும், திருப்பூரில் மாமியார், மாமனாருடன் வசித்து வருவதாகவும், கணவர் சவுதியில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை: இந்நிலையில், கொலையுண்டு கிடந்த ஏதோ ஒரு பெண் உடலை பார்த்து,முறையாக விசாரிக்காமல் அதுமேகலாதான் என, அவசரகதியில் முடிவுக்கு வந்து, அந்த பொய் கொலை வழக்கில் தங்களை கைது செய்த சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்போது கைது செய்யப்பட்ட கோயில் பிள்ளை உள்ளிட்ட நால்வர், தமிழ்செல்வியிடம் மனு அளித்தனர். மேலும், அந்த போலீசார் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, நிவாரணத்தொகை பெற்றுத்தர வலியுறுத்தினர்.

“நிருபர்களை குழப்பிய மேகலா”

கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய மேகலா, தனது கணவர் ஆனந்தன், திருப்பூரில் உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவரது மனுவில் ஆனந்தன், சவுதியில் வேலை செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டதற்கு, கணவர், குழந்தைகள் பற்றி கேட்காதீர்கள் என்றார். ஒன்பது ஆண்டில் ஒருமுறை கூடவா, பேரூருக்கு போன் செய்யவில்லை என கேட்டதற்கு, மொபைல் போன் எண் தெரியாது என மழுப்பலாக கூறினார். தாய், தந்தையரை பற்றி கேட்டதற்கும் முறையான பதில் கூறவில்லை. மேகலாவின் மகன் பெயர் சவுக்கத் அலி(5), மகள் பெயர் நவுசீன்(3) என, தெரிவிக்கப்பட்டது.

அவர்களுக்கு அப்பெயர்கள் சூட்டப்பட்டதற்கான கேள்விக்கும் பதில் இல்லை.கடந்த 2002ல், வீட்டை விட்டு வந்து பலநாட்கள் கழித்து மீண்டும் திருப்பூர் திரும்பியதால், நான் காணாமல் போனதாக ஆனந்தன், போலீசில் கொடுத்த புகாரில், மேல்நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தவில்லை, என்றார். இப்பிரச்னை குறித்து எஸ்.பி., கபில்குமார் சரட்கரிடம் கேட்டதற்கு, “சம்பந்தப்பட்டவர்கள் எங்களிடம் மனு அளித்தவுடன், இதில் உரியமுறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

செய்தி: தினமலர் : பிப்ரவரி 11,2011

கள்ளக்காதலால் கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த வழக்கில், மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், ஆத்தூர் அருகில் உள்ள சிறுவாச்சியூர் சாலைஅம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. அவரது மனைவி பழனியம்மாள்(42). அதே பகுதியை சேர்ந்த பூமாலை(57). இவருக்கும் பழனியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளத்தொடர்பு, கணவன் பொன்னுசாமிக்கு தெரியவந்துள்ளது. 2008 ஜூலையில், மனைவி பழனியம்மாளை கொல்ல, அரிவாளுடன் பொன்னுசாமி துரத்தியுள்ளார். பொதுமக்கள் சமாதானப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2008 ஆக.,11ம் தேதி இரவு, பொன்னுசாமி, தன் வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த கள்ளக்காதலன் பூமாலை, பழனியம்மாள் இருவரும் சேர்ந்து, இரும்பு கம்பி மற்றும் கற்களால் பொன்னுசாமியின் தலை, மர்ம உறுப்பு உள்ளிட்ட இடங்களில் நசுக்கியுள்ளனர். இதனால், பொன்னுசாமி உயிரிழந்துள்ளார்.

பொன்னுசாமியின் பிணத்தை இருவரும் சாக்கு மூட்டையில் கட்டி, குப்பையில் வீசினர். பின் நடந்த சம்பவத்தை, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி சீதா(57) என்பவரிடம் கூறியுள்ளனர். அதை கேட்ட சீதா, “குப்பை தொட்டியில் வீசினால் போலீஸார் கண்டுபிடித்து விடுவர். குழிதோண்டி புதைத்துவிடுங்கள்’ என, யோசனை கூறியுள்ளார்.

அதனால், இருவரும் மீண்டும் குப்பை தொட்டியில் வீசப்பட்ட பொன்னுசாமியின் பிணத்தை எடுத்து வந்து, பூமாலைக்கு சொந்தமான நிலத்தில் புதைத்தனர். இந்த தகவல் தலைவாசல் போலீஸாருக்கு கிடைத்து. பொன்னுசாமியின் உடலை மீட்டு, பூமாலை, பழனியம்மாள் மற்றும் சீதா ஆகியோரை கைது செய்தனர்.இவ்வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராகவன், கொலை செய்த குற்றத்துக்காக பழனியம்மாள் மற்றும் பூமாலைக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சடலத்தை மறைக்க முயன்ற குற்றத்துக்கு பழனியம்மாள், பூமாலை, சீதா ஆகிய மூவருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை மற்றும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

செய்தி: தினமலர் : பிப்ரவரி 05,2011.