தொகுப்பு

Archive for ஒக்ரோபர், 2010

மனைவி கணவனை போடான்னா போகணும், வாடான்னா வரணும்.

ஆனால் மனைவி புகார் கொடுத்தால் கணவன் தன் வீட்டிலிருந்தே வெளியேற்றப்படுவான்!

இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொள்பவன் முட்டாள். அப்படியென்றால் இப்படிப்பட்ட சினிமா நடிகையை திருமணம் செய்து கொண்டவனை எப்படி அழைப்பது!!

இனி செய்தி (தட்ஸ்தமிழ்);

Actress Kavya Madhavanகாவ்யா மாதவன், குடும்பத்தினரை தொந்தரவு செய்யக் கூடாது-கணவர் வீட்டாருக்கு உத்தரவு

மலையாள நடிகை காவ்யா மாதவன் வீட்டுக்கோ அல்லது அவர் படப்பிடிப்பில் இருக்கும் இடத்திற்கோ சென்று எந்தவகையிலும் தொந்தரவு செய்யக் கூடாது என்று காவ்யா மாதவனின் கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிஷால் சந்திராவை கடந்த ஆண்டு மணந்தார் காவ்யா. ஆனால் போன வேகத்திலேயே தனது பிறந்த வீட்டுக்குத் திரும்பி விட்டார்.இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில், தனது கணவர், மாமனார் சந்திர மோகன், மாமியார் மணிமோகன், கணவரின் சகோதரர் தீபன் ஆகியோர் மீது எர்ணாகுளம் குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் காவ்யா மாதவன் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தார்.

அதில், நானும் நிஷால் சந்திராவும் பிரிந்து வாழ்கிறோம். இதனால் என்னை அவருடைய குடும்பத்தினர் வீடு புகுந்து துன்புறுத்துவார்கள் என அச்சப்படுகிறேன். என்னை தொலைபேசி மூலமாகவோ அல்லது வீடு புகுந்தோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, காவ்யா மாதவனை எந்த இடத்திலும் குறிப்பாக வீட்டிலோ அல்லது படப்பிடிப்பு தளத்திலோ சென்று கணவர் குடும்பத்தினர் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Comments on the Thatstamil.com web site:

பதிவு செய்தவர்: ஈவிரா நாயக்கன்
பதிவு செய்தது: 02 Sep 2010 7:05 pm
இது என்னடா அநீதி ? கணவனுக்கு செக்ஸ் வேண்டுமென்றால் மனைவியிடம் போகாமல் வேற யாருகிட்ட போவான் ? கோர்ட் அவனுக்கு ஒரு வைப்பாட்டி கொடுக்குமா ? வெங்காயம்…

பதிவு செய்தவர்: Kavya ardent fan
பதிவு செய்தது: 02 Sep 2010 4:47 pm
Can I get the contact detaisl of Kavya. I am ready to marry her and give a new life. – Kavya’s ardent fan

மொபைல் போனில் கூலாக பேசி வாலிபர்களை காதலில் விழ வைக்கும் பெண்கள்

பாவம் அபலைப் பெண்கள், அவர்கள் என்ன செய்வார்கள் – இயற்கை படுத்தும் பாடு!
ஆனால் இதையே ஆண்கள் செய்தால் – அவனை கைது செய்து ஜெயிலில் தள்ளு!!

இதோ இன்றைய தினமலர் செய்தி:

கோவை :மொபைல் போனில் பொழுதுபோக்காக வாலிபர்களிடம் பேசி, காதலில் விழ அலைய வைக்கும் பெண்கள் மீது வரும் புகாரின் எண்ணிக்கை கூடி வருவதாக, கோவை சைபர் க்ரைம் போலீசார் “அதிர்ச்சி’ தகவல் தெரிவிக்கின்றனர்.

cell-phone-luring-damselsகோவை மாநகர குற்றப்பிரிவின் கீழ் செயல்படும், “சைபர் க்ரைம்’ பிரிவுக்கு வரும் புகார்களில், மொபைல்போன் மூலம் ஆபாச அழைப்பு விடுத்தல், “செக்ஸ் மெசேஜ்’ மற்றும் ஆபாச படங்கள் அனுப்பி, “டார்ச்சர்’ கொடுப்பது தான் அதிகம்.பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மட்டுமன்றி, முன் பின் அறிமுகமில்லாத மாணவியர், வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்களுக்கும் அனுப்பி தங்களுக்குள் சந்தோஷம் கொள்கின்றனர்.தொடர்ந்து பெறப்படும் ஆபாச அழைப்புகளால் மனவேதனை அடையும் பெண்கள், மாணவியர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தரும் புகாரின் எண்ணிக்கை கூடியுள்ளன.சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, “டார்ச்சர்’ கொடுக்கும் ஆசாமிகளை வளைத்து பிடிக்கின்றனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஜாலிக்காகவும், ஆர்வ கோளாறு காரணமாகவும் மெசேஜ் அனுப்புவதாகக் கூறி, மன்னிப்பு கேட்டு மன்றாடி தங்களை விடுவித்துக் கொள்கின்றனர்.
சமீபத்தில், கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த 160க்கும் மேற்பட்ட புகார்கள், புகார்தாரரின் வேண்டுகோளின்படி எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில், போலீசாரையே திடுக்கிட வைத்துள்ள சில சம்பவங்களும் நடந்துள்ளன. முன் பின் பார்த்திராத வாலிபரை காதல் வலையில் விழ வைத்த திருமணமான பெண், தங்கைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய அக்கா, ஒருதலைக் காதல் வசப்பட்டு, ஆபாச மெசேஜ் அனுப்பிய தனியார் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஆகியோரை, சைபர் க்ரைம் போலீசார் பிடித்துள்ளனர்.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வீட்டி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், பெற்றோருடன் வசிக்கிறார். தனக்கு தெரிந்த வாலிபர் ராகுலுடன் (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மொபைல் போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு குழையக் குழைய பேசியுள்ளார். அவளது பேச்சில் தன்னை பறிகொடுத்த வாலிபர், நேரில் சந்திக்க வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பிடி கொடுக்காமல் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என காலம் கடத்தியுள்ளார். தன்னுடன் பேசுவது யார் என்று தெரிந்து கொள்ளாமலே காதலில் விழுந்த வாலிபர், திருமணம் செய்தே ஆக வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றுள்ளார். இதை உறுதி செய்த ஸ்வீட்டி தன்னை பெண் பார்க்க வருமாறு சென்னைக்கு அழைத்துள்ளார்.

ஆர்வத்தில் தன் பெற்றோரையும், பக்கத்து வீட்டு நண்பரின் பெற்றோரையும் சென்னை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற போது, ஸ்வீட்டியின் தோழி ஒருவர் போனில் தொடர்பு கொண்டு, “ஸ்வீட்டிக்கு உடல் நலமில்லை. அவளது தோழி வீட்டில் இருக்கிறார். பெண் பார்க்கும் நிகழ்ச்சியை இன்னொரு நாளைக்கு வைத்து கொள்ளலாம்’ என்று தெரிவிக்க, ராகுல் மற்றும் குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் கோவை திரும்பினார்.

அடுத்தடுத்து அவள் யார் என்று தெரிந்து கொள்ள ராகுல் பல முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. சில மாதங்களுக்கு முன், சூலூர் போலீசுக்கு வந்த போனில், தனது பெயர் ஸ்வீட்டி என்றும், தன்னை காதலிக்கும் ராகுல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் புகார் செய்ததோடு, தன் காதலனின் மெபைல் எண்ணையும் கொடுத்து இணைப்பை துண்டித்து விட்டாள். போலீசார் விசாரித்ததில் ஸ்வீட்டி கொடுத்த மொபைல் எண்ணுக்கு, சொந்தக்காரர் காதலில் விழுந்த வாலிபர் தான் என தெரிந்தது. ஆத்திரமடைந்த ராகுல், “அவள் யாரென்று தெரியாது. முன் பின் முகத்தை பார்த்ததில்லை. ஆனால், என்னை காதலிப்பதாக கூறி அலைய விட்டு அசிங்கப்படுத்தி விட்டாள். அவளை கண்டுபிடித்து கொடுங்கள்’ என, புகார் தெரிவித்துள்ளார்.இது சைபர் க்ரைம் விசாரணைக்கு வந்தது. தீவிர தேடுதலில் ஸ்வீட்டி சிக்கினாள். அவள் வேறு யாருமல்ல. காதலில் விழுந்த ராகுலின் பக்கத்து வீட்டு குடும்ப நண்பரின் மருமகள்; திருமணமானவர். மேலும், அப்பெண்ணிடம் 10 சிம்கார்டுகள் இருந்ததாகவும், ஒவ்வொரு முறை பேசும் போதும் வெவ்வேறு எண்களில் இருந்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.காதலில் ஆண்கள் எப்படி விழுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள, ஜாலிக்காக இதில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இரு வீட்டாரும் கேட்டுக் கொண்டதால் வழக்குப் பதிவு செய்யவில்லை.

மற்றொரு வழக்கு:

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் விற்பனை மையத்தில் வேலை. இவரது கடைக்கு பொருள் வாங்க வரும் வாலிபரும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தான். இவரது மொபைல் போனை தெரிந்து கொண்ட செல்வி, தொடர்ந்து போன் செய்து, தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.காதல் மெசேஜ், ஆபாச படங்களுடன் கூடிய மெசேஜை தொடர்ந்து அனுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர், சைபர் க்ரைமில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்ததில் செல்வி பிடிபட்டார். விசாரணையில், தினமும் ஒரே பஸ்சில் பயணிக்கும் வாலிபரின் அழகை ரசிப்பதற்காகவே இச்செய்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். வாலிபரின் வேண்டுகோள் காரணமாக செல்வி மன்னிக்கப்பட்டாள்.
இதை விட, மிக மோசமான, தரமில்லாத மெசேஜ் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வந்ததால், மனநிம்மதி இழந்த ஒரு பெண், போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்தனர். அந்த வீட்டில் அக்கா, தங்கை இருவர். தங்கை அழகானவர். இதனால் ஆபாச படங்கள், ஆபாச அழைப்புகள் தங்கைக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து பார்த்த போது, அக்காவே தங்கைக்கு மெசேஜ் அனுப்பியது தெரிந்தது. விசாரணையில் பொறாமை தான் காரணம் என தெரிய வந்தது. இதுவும் சமாதானத்தில் முடிந்துள்ளது.

தற்போதைய சூழலில் ஆண்களுக்கு நிகராக, மொபைல் போனில் மெசேஜ், ஆபாச அழைப்பு விடுத்து பெண்களும் சிக்கிக் கொள்கின்றனர் என்பது வெளிப்படையாக நடக்கிறது. போலீசுக்கு வரும் புகார் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.

ஜன்னல் வழியே பெற்ற குழந்தையை தூக்கி எறி்ந்த தாய் : மும்பையில் கொடூரம்

எத்தகைய கொலைகாரிகளாக இருந்தாலும் தாயார் வசம்தான் இந்தியாவில் குழந்தைகளை ஒப்படைப்பார்கள். ஏனெனில் அனைத்து தந்தைமார்களும் குழந்தைகளை கொடுமை செய்வார்களாம்!!
(காண்க: Children’s Rights Initiative for Shared Parenting)
—————————–

மும்பையில் மருத்துவமனையில் இருந்த ஜன்னல் வழியாக பெண் சிசுவை தூக்கி எறிந்த தாயின் கொடூர செய்கை சி.சி.டி.வியில் வெளியாகியுள்ளது.

மும்பையில் மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் நலப்பிரிவில் தீபிகா என்ற பெண் ஒன்றரை மாதமே ஆன தனது இரட்டைக் குழுந்தைகளை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இந்நிலையில் தீபிகா திடீரென தனது பெண் குழந்தையை காணவில்லை என புகார் கூறினார். திகைத்துப் போன மருத்துவமனை நிர்வாகம் சி.சி.டி. வி கேமரா பதிவை பார்த்துள்ளது.

அப்போது தீபிகா வார்டில் இருந்து தனது பெண் குழந்தையை டவலில் சுற்றி எடுத்துக் கொண்டு கழிப்பறைக்குள் நுழைவது பதிவாயியிருந்தது. ஆனால் வெளியில் வரும் போது தீபிகா கையில் குழந்தை இல்லை.

சுதாரித்துக் கொண்ட நிர்வாகம் தீபிகாவி‌டம் தீவிரமாக விசாரிக்க பெண் குழந்தையை தான் ஜன்னல் வழியாக ‌வெளியே தூக்கி எறிந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீபிகாவின் மற்றொரு குழந்தை சிகிச்சை பெற்று வருவதால், சிகிச்சை முடிந்ததும் தீபிகா கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

போன ஜன்மத்தில் என்னை மானபங்கப்படுத்தினார்!

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ஒரு அழகியை (!) மானபங்கப்படுத்தி செக்ஸ் தொந்திரவு செய்தாராம். இப்போது புகார் கொடுத்துள்ளார் ஒரு பெண்மணி. (செய்தி)

இதுபோல் பல கேசுகள்.

40-க்கும் அதிகமான ஒருதலைப்பட்சமாக இயற்றப்பட்டிருக்கும் சட்டங்கள், ஒட்டுமொத்த ஆண்களையும் பிறவியிலேயே கிரிமினல்களாக கருதி, ஒரு பெண் புகார் ஒன்றைக் கொடுத்த மாத்திரத்தில் கைது செய்து சிறையிலடைக்கும் வகையில் கட்டமைத்திருக்கும் நிலையில் இதுபோன்ற புகார்கள், கைதுகள் நாள் தோறும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன.

இனிமேல் ஒரு மேலதிகாரி ஒரு பெண்ணை சரியாக பணியாற்றவில்லை என்று கடிந்து கொண்டாலோ, அந்தப் பெண் கேட்ட சலுகையை கொடுக்காமலிருந்தாலோ, ஒரு இயக்குனர் ஒரு நடிகை கேட்கும் ரோலை கொடுக்க மறுத்தாலோ, ஒரு பேராசிரியர் மாணவியை கடிந்து கொண்டாலோ அவர்கள் மேல் இத்தகைய செக்ஸ் புகார்கள் பாயும் அபாயம் இருக்கிறது. இதுபோல் நிகழ்ந்துகொண்டும் இருக்கின்றதை செய்தித்தாள்களில் காண்கிறோம்.

இந்திய கோர்ட்டுக்கள் சமீப காலங்களில் வழங்கியுள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் ஒரு ஆணை தண்டிக்க ஒரு பெண்ணின் வாக்குமூலம் மட்டுமே போதுமானது; எவ்வித சோதனையோ, சாட்சியமோ தேவையில்லை. ஏனென்றால் பெண்கள் பொய்யே சொல்ல மாட்டார்களாம்; ஆண்கள்தான் அனைத்து குற்றங்களையும் செய்வார்களாம்.

நல்லா இருக்குங்க நியாயம்!