தொகுப்பு

Posts Tagged ‘கொலைவெறி’

கள்ளக்காதலுக்காக தன் குழந்தையையே கொன்ற தாய்

mother-kills-her-child-for-being-a-hindrance-to-adulteryசிவகாசி: ஜூன் 16,2011,23. செய்தை: தினமலர்.

தொட்டிலில் தூங்கிய குழந்தையை, கள்ளக் காதல் மோகத்தால்,கொலை செய்த தாய், கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மதுரை பாண்டிக்கும், அனுப்பங்குளம் நயினார் மகள் துர்காதேவிக்கும், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. துர்காதேவி கர்ப்பிணியான நான்கு மாதத்தில், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கோரி, கணவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு சம்மதிக்காத துர்காதேவி, சேர்ந்து வாழ்வதாக கூறி, பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், துர்காதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பேச்சு வார்த்தைக்கு பின், 9 மாத குழந்தை முகேஷ் பாண்டியுடன், துர்காதேவி, கணவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். மாலையில் வீடு திரும்பிய கணவர், தொட்டிலில் தூங்கிய மகனை தூக்கினார்.பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.பரிசோதித்த டாக்டர்,”குழந்தை இறந்துவிட்டது’ என்றார். சந்தேகம் அடைந்த மதுரை பாண்டி, சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார், துர்காதேவியிடம் விசாரித்தனர்.

விசாரணையில், திருமணத்திற்கு முன் அனுப்பங்குளத்தை சேர்ந்த குமாருடன் துர்காதேவிக்கு ஏற்பட்ட பழக்கம், திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்தது தெரிய வந்தது.மேலும், கணவருடன் வாழப் பிடிக்காமல், தந்தையுடன் வசித்த துர்காதேவியை, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ, குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்; “குழந்தை உயிருடன் இருப்பதால் தானே, கணவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்துகின்றனர்…’ என நினைத்த துர்காதேவி, தொட்டிலில் தூங்கிய குழந்தையை, மூச்சு திணறடித்து கொலை செய்தார் என்றும் தெரிந்தது.இதையடுத்து, துர்காதேவியை போலீசார் கைது செய்தனர்.

ஜோதிடம் மீது பழி போட்ட தாய்:

பெற்ற மகனை கொலை செய்த தாய், மகன் இறந்ததை நினைத்து அழுவது போல் நடித்தார். அப்போது,”அப்பாவிற்கும், மகனுக்கும் ஜாதகம் சரியில்லை; அப்பாவும், மகனும் நேருக்கு நேர் பார்த்தால் யாராவது ஒருவர் உயிருடன் இருக்க மாட்டார் என, ஜோதிடர் கூறியது, பலித்து விட்டதே’ எனக் கூறி, அழுது புலம்பினார்.

ஆனால், பச்சிளம் குழந்தையை கொலை செய்த அவர், சிறைக்கு போகும் முன், போலீசார் வாங்கி கொடுத்த மதிய உணவை ருசித்து சாப்பிட்டபடி, எந்தவித பதட்டமும் இல்லாமல் காணப்பட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=258917

கணவனுக்கு கொலை மிரட்டல் மனைவி, கள்ளக்காதலன் கைது

செஞ்சி : கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி, கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், முட்டத்தூரை சேர்ந்தவர் முத்து (27). இவரது மனைவி நித்யா (20). இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார். இவர்கள், கடந்த மாதம் திருப்பூர் அருகே உள்ள தாராபுரத்திற்கு, செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர். அங்கு முட்டத்தூரை சேர்ந்த எட்டியான் மகன் ராமராஜ் (22) என்பவருடன், நித்யாவிற்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இதனால் தலைமறைவான இருவரையும் தேடி, முத்து, முட்டத்தூர் வந்தார். ஊர் பெரியவர்கள் நித்யாவை மீண்டும் முத்துவுடன் சேர்த்து வைத்தனர். அடுத்த சில நாட்களில், நித்யா மீண்டும் ராமராஜனுடன் தலைமறைவானார். கடந்த 9ம் தேதி இரவு 7 மணிக்கு இவர்கள், அனந்தபுரம் கூட்ரோட்டில் நின்றிருந்தனர். இதை பார்த்த முத்து, நித்யாவை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆத்திரமடைந்த ராமராஜனும், நித்யாவும் சேர்ந்து, முத்துவை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப் பதிந்து ராமராஜ், நித்யா இருவரையும் கைது செய்தனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=203364

கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவர் கொலை :கூலிப்படையினருடன் மனைவியும் கைது

இப்போதெல்லாம் நம் நாட்டில் கள்ளக்காதல் குடிசைத் தொழில் அன்றாடம் ஜாம்ஜாமென்று நடந்தேறுகிறது. இதே ரீதியில் போனால் அனைத்து நாளிதழ்களும் “கள்ளக்காதல் சிறப்பு இதழ்கள்” தினந்தோறும் வெளியிடும் நிலை சீக்கிறமே வரலாம்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை போட்டுத் தள்ளும் கலையில் நம் பெண்குலத் திலகங்கள் முழுத் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம். மேலும் நம் பெண்ணியவாதிகள் இதை ஒரு மாபெரும் வெற்றியாகக் கூட கொண்டாடலாம்!

இதோ ஒரு லேட்டஸ்ட் செய்தி (நன்றி: தினமலர் – ஏப்ரல் 29, 2011 – சுட்டி):

wife kills husband for obstructing illicit relationshipதிருவள்ளூர்:கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கழுத்தறுத்துக் கொலை செய்த பாசக்கார மனைவியை, கூலிப் படையினருடன் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(45); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி(38). இவர்களுக்கு திருமணமாகி அபிலாஷ்(15), அஜீத்(12) என இரண்டு மகன்களும், பிரீத்தா(10) என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை செல்வகுமார் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஜோதி செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை திருவள்ளூர் எஸ்.பி., வனிதா அமைத்தார். விசாரணையில், செல்வகுமாரின் சொந்த ஊரான பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்த தைரியநாதன், அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றதும், செல்வகுமாரின் இறுதிச்சடங்கில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டுச் சென்றதும் தெரிந்தது.

மேலும்,தைரியநாதன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை செல்வகுமாருக்கு கடன் கொடுத்திருந்ததும், அதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததும், இங்கு வந்து செல்லும்போது செல்வகுமார் மனைவி ஜோதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும் தெரிந்தது.செல்வகுமார் மனைவி ஜோதியை கைது செய்து விசாரித்தபோது, தைரியநாதனுடன் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாலும், கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், தைரியநாதன் உதவியோடு கணவரை கொலை செய்ய முடிவு செய்ததாக, அவர் போலீசாரிடம் கூறினார்மேலும் செல்வகுமாரை கொலை செய்வதற்காக தைரியநாதன், புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினரிடம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி, ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, செல்வகுமார் மனைவி ஜோதி ஒத்துழைப்போடு 20ம் தேதி இரவு வேப்பம்பட்டு அம்பேத்கர் நகர் வந்தனர்.
அன்று இரவு செல்வகுமார் கீழ் தளத்தில் படுத்துறங்கியதும், வீட்டின் தெரு கதவை திறந்து வைத்துவிட்டு, பிள்ளைகளுடன் மாடியில் படுத்துக் கொண்ட ஜோதி, தைரியநாதனுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அங்கு கூலிப்படையுடன் வந்த தைரியநாதன், தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தியால் கழுத்தை அறுத்தும், முதுகு, வயிற்றுப் பகுதியில் அறுத்தும் கொலை செய்ததாக தைரியநாதன் போலீசாரிடம் கூறினார்.இதையடுத்து தைரியநாதன் அடையாளம் காட்ட, சென்னையில் பதுங்கியிருந்த கூலிப்படையினரான அகரம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(24), ஜானகிராமன்(24) ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேலு, தங்கமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலை நேரில் பார்த்த கல்லூரி மாணவியை எரித்துக் கொலை செய்த தாய்

Mother murders daughterகடையநல்லூர்: தாயின் கள்ளக் காதலை கண்டித்த கல்லூரி மாணவியை தாயாரும், அவரது கள்ளக் காதலனும் சேர்ந்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.

கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன் இவரது மனைவி செண்பகவல்லி இவர்களது மகள் பத்மினி (18).என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினி மர்மமான முறையில் உடல் கருகி இறந்தார்.

இது தொடர்பாக அவரது தாயார் செண்பகவல்லியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கள்ளக்காதலனான கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்த சுந்தரையா என்பவருடன் சேர்ந்து பத்மினியை தீவைத்து எரித்துக் கொன்றது தெரியவந்தது.

சுந்தரையா செண்பகவல்லியின் உறவினரும் ஆவார். செண்பகவல்லியின் கணவர் இல்லாத சமயத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை பத்மினி நேரில் பார்த்து பலமுறை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொன்று பின்னர் அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர்.

போலீசாரிடம் பத்மினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினர். போலீசார் விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டனர்.

சுந்தரையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி: தட்ஸ்தமிழ்.

English summary
Mother and her lover were arrested for murdering daughter for opposing their illicit relationship in Kadayanallur town

கள்ளக்காதலால் கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த வழக்கில், மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், ஆத்தூர் அருகில் உள்ள சிறுவாச்சியூர் சாலைஅம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. அவரது மனைவி பழனியம்மாள்(42). அதே பகுதியை சேர்ந்த பூமாலை(57). இவருக்கும் பழனியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளத்தொடர்பு, கணவன் பொன்னுசாமிக்கு தெரியவந்துள்ளது. 2008 ஜூலையில், மனைவி பழனியம்மாளை கொல்ல, அரிவாளுடன் பொன்னுசாமி துரத்தியுள்ளார். பொதுமக்கள் சமாதானப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2008 ஆக.,11ம் தேதி இரவு, பொன்னுசாமி, தன் வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த கள்ளக்காதலன் பூமாலை, பழனியம்மாள் இருவரும் சேர்ந்து, இரும்பு கம்பி மற்றும் கற்களால் பொன்னுசாமியின் தலை, மர்ம உறுப்பு உள்ளிட்ட இடங்களில் நசுக்கியுள்ளனர். இதனால், பொன்னுசாமி உயிரிழந்துள்ளார்.

பொன்னுசாமியின் பிணத்தை இருவரும் சாக்கு மூட்டையில் கட்டி, குப்பையில் வீசினர். பின் நடந்த சம்பவத்தை, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி சீதா(57) என்பவரிடம் கூறியுள்ளனர். அதை கேட்ட சீதா, “குப்பை தொட்டியில் வீசினால் போலீஸார் கண்டுபிடித்து விடுவர். குழிதோண்டி புதைத்துவிடுங்கள்’ என, யோசனை கூறியுள்ளார்.

அதனால், இருவரும் மீண்டும் குப்பை தொட்டியில் வீசப்பட்ட பொன்னுசாமியின் பிணத்தை எடுத்து வந்து, பூமாலைக்கு சொந்தமான நிலத்தில் புதைத்தனர். இந்த தகவல் தலைவாசல் போலீஸாருக்கு கிடைத்து. பொன்னுசாமியின் உடலை மீட்டு, பூமாலை, பழனியம்மாள் மற்றும் சீதா ஆகியோரை கைது செய்தனர்.இவ்வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராகவன், கொலை செய்த குற்றத்துக்காக பழனியம்மாள் மற்றும் பூமாலைக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சடலத்தை மறைக்க முயன்ற குற்றத்துக்கு பழனியம்மாள், பூமாலை, சீதா ஆகிய மூவருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை மற்றும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

செய்தி: தினமலர் : பிப்ரவரி 05,2011.

2 கணவர்களை விவாகரத்து செய்த அபலைப் பெண் 3-வது கணவரை கொன்று கால்வாயில் வீசினாள்

ஐயா, இந்தியப் பெண்களிடன் உஷாராக இருங்க; போட்டுத் தள்ளிடுவாங்க. பீகார் எம்.எல்.ஏ கதியை பார்த்திருப்பீங்க! அwத கொலைகார பொம்பளை படத்தை பாத்திருப்பீங்க; அன்த எம்.எல்.ஏ படத்தையும் பாத்திருப்பீங்க; அவிங்களை இவரு “கற்பழி’ச்சாராம்!

பயங்கரம். பேசாம ஆப்பிரிக்காவில போய் கல்யாணம் கட்டிக்கலாம்! அவிங்க பரவாயில்லை!!

சரி, இந்த புதுமைப் பெண் செய்தியை படிச்சு நொந்து போங்க!

———————
புதுடெல்லி, ஜன.9- 2011. செய்தி: மாலை மலர்

டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்த பெண் ஷேனாஸ் (வயது 35). இவர் திருமணமான சில வருடங்களிலேயே கணவரை விவாகரத்து செய்தாள்.

அதன்பறகு 2-வது திருமணம் செய்தாள். அவருடனும் சில வருடங்களே குடும்பம் நடத்தி அவரையும் விவாகரத்து செய்தாள். 2 கணவர்கள் மூலம் அவளுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகளுக்கு 14 வயதும், 3-வது மகளுக்கு 5 வயதும் ஆகிறது. இந்த நிலையில் 35 வயதான ஷேனாஸ் தன்னை விட 6 வயது குறைந்த 29 வயதான ராகேஷ்குப்தா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் கடந்த 3 வருடங்களாக கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர்.இதற்கிடையே ராகேஷ் குப்தாவை கடந்த அக்டோபர் மாதம் திடீர் என்று காணவில்லை. இதுபற்றி ஷேனாஸ் போலீசில் புகார் செய்தாள். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

ஷேனாசுக்கு சகீல், சாகித் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எந்த துப்பும் கிடைக்கவில்லை. இவர்கள் ஷேனாஸ் குடியிருக்கும் பகுதியிலேயே வசித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.

இதில் சாகித் பழைய குற்றவாளி என தெரியவந்தது. சந்தேகப்பட்டு அவனது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது சாகித்தின் வீட்டு “செப்டிக் டேங்கில் இருந்து துர்நாற்றம் அடித்தது. சந்தேகப்பட்டு பார்த்த போது அங்கே ஒரு பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அது காணாமல் போன ராகேஷ் குப்தா என தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ஷேனாசை பிடித்து விசாரித்தபோது அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சம்பவத்தன்று ராகேஷ் குப்தாவிடம் ஷேனாஸ் பணம் கேட்டாள். ஆனால் ராகேஷ் குப்தா டெய்லர் தொழில் பார்த்து வந்ததால் ஷேனாஸ் கேட்ட தொகையை கொடுக்க முடியவில்லை.

இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது கிரிக்கெட் மட்டையால் ஷேனாஸ், ராகேஷ்குப்தாவை தலையில் அடித்தாள். இதில் அவர் செத்துப் போனார். பிணத்தை 24 மணி நேரம் தனது வீட்டிலேயே வைத்து இருந்தாள். மறுநாள் சகோதரர்கள் மூலம் பிணத்தை அங்கிருந்து எடுத்துச் சென்று செப்டிக் டேங்குக்குள் போட்டு விட்டனர்.

கொலையை மூடி மறைக்க ராகேஷ்குப்தா காணாமல் போய்விட்டதாக ஷேனாஸ் போலீசில் புகார் செய்து நாடகமாடினாள். ஆனால் போலீசார் துப்பு துலக்கி ஷேனாசையும், அவளது சகோதரர் சகீல் ஆகியோரை கைது செய்தனர். சாகித் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.

———

இந்த செய்திக்கு வ்சகர்ர்கள் எழுதிய்யுள்ள கமெண்டுகளைப் பார்ப்போம்:

Sunday, January 09,2011 04:09 PM, இரா குமரன் said:

காந்தி கனவு கண்ட நாட்டில் இப்படியும் ஒரு பெண். பெண்களுக்கு 33 % வேண்டும் என்று சட்டம் வேறு இந்த நாட்டில் கேடின்றனர்.

Sunday, January 09,2011 03:58 PM, mysha said:

எப்படிதான் மனசு வந்துச்சோ இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் காலம் கலி காலம் ஆகிபோச்சுங்கோ

Sunday, January 09,2011 03:29 PM, நல்லவன் said:

அடங்காபிடறியே……….

Sunday, January 09,2011 02:54 PM, MANIKANDAN said:

அவல துக்குள போட வேண்டும்

Sunday, January 09,2011 01:51 PM, நாஞ்சில் நசீர் said:
இவளது வீட்டில் செப்டிக் டேங் கால்வாயாக ஓடுகிறது..! குளிப்பதற்கு இறங்கி இருப்பான்.. பாவம் கால் வழுக்கி விழுந்து விட்டான் என்று கதையை முடிக்க போகிறார்கள்..!

இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை : கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?

செய்தி: தினமலர்

ராமநாதபுரம் : மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளக்காதலர்களின் மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு(24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம்(7) அஜிராபானு(5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

வேலைக்காக முத்துச்சாமி மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன், தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், நேற்று அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்.

கொலை சம்பவத்தில், கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவதால், இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கதறி அழுத காதல் கணவர் :

மனைவி, குழந்தைகள் இறந்த தகவலை மலேசியாவில் உள்ள முத்துச்சாமிக்கு அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்ட அவர், போனில் கதறி அழுதுள்ளார். “”இறந்தவர்களை பார்க்கும் இடத்தில் கூட நான் இல்லையே,” என, கதறியுள்ளார்.

மைனர் காதல் மங்கியது :

தனது 16வது வயதில் வேறுபிரிவை சேர்ந்த முத்துச்சாமியை ஆதிலா பானு காதலித்ததற்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மறைந்த மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சீனிக்கட்டியின் கார் டிரைவராக முத்துச்சாமி பணியாற்றினார். சீனிகட்டியின் தாய் பசீர் அம்மாள் இவர்களது திருமணத்தை நடத்திவைத்தார். மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்தது. கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

——-

Update: நவம்பர் 13, 2010:

இறந்த பெண்ணின் மொபைலில் நிரம்பி வழிந்த எஸ்.எம்.எஸ்.,கள் : “க்ளூ’ கிடைப்பதில் பின்னடைவு

ராமநாதபுரம் : குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்.,கள் குவிந்துள்ளதால், “க்ளூ’ கிடைப்பதில் பின்னடைவு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், குப்பான்வலசையை சேர்ந்த முத்துச்சாமி, சாத்தான்குளம் ஆதிலாபானு(24) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முத்துச்சாமி மாதம் மாறிய நிலையில், இவர்களுக்கு முகமது அஸ்லம்(7), அஜிராபானு(5) என்ற குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக முத்துச்சாமி, மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால், தம்பதியினரிடையே பிரச்னை ஏற்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன், தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ஆதிலாபானு, ராமநாதபுரம் பாரதிநகரில் குடியேறினார். கடந்த நவ., 8ல் குழந்தைகளுடன் மாயமான பானு, மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. “இந்த கொலை சம்பவத்தில் கள்ளக்காதலர்கள் இடையேயான மோதல் ஏற்பட்டிருக்கலாம்’ என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு நான்கு பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில், இறந்த பெண்ணின் மொபைல் போனை சோதனை செய்தபோது, அவருக்கு பலர் எஸ்.எம்.எஸ்., அனுப்பியது தெரியவந்தது. குறிப்பிட்ட நபர் ஒருவர் மட்டும் சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பி உள்ளார். இதனால், அந்த மொபைலின் “இன் பாக்ஸ்’ நிரம்பிவழிந்தது. போலீசார் பெரிதும் எதிர்பார்த்த மொபைல் போனில், உரிய “க்ளூ’ கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதும், ஆதிலாபானுவுக்கு வந்த மொபைல் அழைப்புகள் குறித்த விசாரணையில் நம்பிக்கை கிடைத்திருப்பதாக தெரிகிறது.

அரசு வேலை, ஓய்வூதியத்திற்காக தாய், மகளை கொன்ற பெண்மணி

சிவகங்கை : அரசு வேலை, ஓய்வூதியத்திற்காக தாய், மகளை கொன்ற பெண் உட்பட ஐந்து பேரை, சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே இளங்குடி கண்மாயில், கடந்த 27ம் தேதி, எரிந்த நிலையில் இரு பெண் உடல்கள் கிடந்தன. நாச்சியாபுரம் போலீசார் விசாரித்தனர். இறந்தவர்கள் மதுரை தனியாமங்கலம் அந்தோணி மனைவி ராமதிலகம்(40) மகள் விஜயலட்சுமி (28) என தெரிந்தது.

கொலைக்கான காரணம்:

மேலூர் அருகே கீழையூரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மாரிமுத்து. இவருக்கு மாரியம்மாள் (40) சீதாலட்சுமி (35) என இரு மனைவி. பணியின் போது இறந்ததால், வாரிசு வேலை பெறுவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சீதாலட்சுமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இறந்தார்.வழக்கை அவரது தாய் ராமதிலகம், சகோதரி விஜயலட்சுமி நடத்தினர்.

இதில் ஆத்திரமுற்ற மாரியம்மாள் கொல்ல திட்டமிட்டார். இதன்படி, அவர்களுடைய வக்கீல் பேசுவது போல், ராமதிலகத்தை போனில் தொடர்பு கொண்டனர். கடந்த 27ம் தேதி காலை மேலூர் கோர்ட்டிற்கு வருமாறு கூறினர். ராமதிலகம், விஜயலட்சுமி, அவரது நான்கு மாத ஆண் குழந்தையுடன் வந்தனர்.அங்கு இருந்த மாரியம்மாள், உறவினர்கள் அழகர்சாமி (30) பாண்டித்துரை (24) முருகேசன் (33) ஆகியோர் சமரசம் பேச வருமாறு கூறி, இருவரையும் சுமோ காரில் (டி.என்.37-எம்:4525) அழைத்து சென்றனர். திருப்புத்தூர் செல்லும் வழியில் காரிலேயே இருவரையும், கழுத்தை நெரித்து கொன்றனர். திருப்புத்தூரில் பெட்ரோல் வாங்கி, கண்மாய்க்குள் உடல்களை எரித்தனர். விஜயலட்சுமியின் குழந்தையை மதுரை பாண்டி கோவிலில் வைத்து விட்டு தப்பினர்.

பிடிபட்டது எப்படி?

இன்ஸ்பெக்டர்கள் சேது, சாந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மனைவி, மகளை காணவில்லை என கீழையூரைச் சேர்ந்த அந்தோணி, போலீசில் புகார் செய்தது, விசாரணையில் தெரிந்தது. அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர், “கொலையான இருவரையும் மேலூர் கோர்ட்டில் பார்த்தேன்’ என தெரிவித்தார். இதை வைத்து கார் டிரைவர் அருள்மதியை கைது செய்தனர். அவர் தகவல்படி, மாரியம்மாள் உட்பட மற்ற நான்கு பேரையும் கைது செய்தனர்.

பாராட்டு:விசாரணையில் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி., அமல்ராஜ், ராஜசேகரன் எஸ்.பி., வெகுமதி வழங்கினார். கூடுதல் எஸ்.பி., கண்ணன், டி.எஸ்.பி.,க்கள் முருகேசன், பத்மாவதி உடனிருந்தனர்.

செய்தி: தினமலர்

சொத்து பிரிப்பதில் தகராறு: மாமனாரை கொன்ற மருமகள்

செய்தி: தினமலர் – செப்டம்பர் 09,2010

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில், சொத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மாமனாரை கட்டையால் அடித்து மருமகள் கொலை செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விஸ்வநாதநகரைச் சேர்ந்தவர் குமார் (75). இவருக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த விபத்தில் மகன் தர்மராஜ் இறந்தார். தர்மராஜின் மனைவி பாக்கியலட்சுமி (30), இவர்களுடைய மகள் நித்யா (4), குமார் வீட்டிலேயே வசித்து வந்தனர். தன்னுடைய சொத்துக்களை ஆறு பங்குகளாக பிரித்து, 5 பங்குகளை மகள்களுக்கும், மீதி ஒரு பங்கை பேத்தி நித்யா மேஜர் ஆனதும் கிடைக்கும் வகையில் மாமனார் உயில் எழுதி வைத்திருந்தார். மாமனார் தன்னுடைய மகள்களுக்கு சொத்து கொடுத்தது பாக்கியலட்சுமிக்கு பிடிக்கவில்லை. இது சம்பந்தமாக இருவருக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இது தொடர்பாக மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மாமனார் உயிரோடு இருந்தால் தனது மகளான நித்யாவிற்கு எழுதி வைத்த சொத்துக்களையும், அவரது மகள்களுக்கே பிரித்து கொடுத்து விடுவார் எனக்கருதிய பாக்யலட்சுமி, அருகிலிருந்த கட்டையால் மாமனாரின் தலையில் அடித்து கொலை செய்தார். பாக்கியலட்சுமியை ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயராமன் கைது செய்தார்.

எட்டு மாதத்தில் 224 பேர் கொலை: கள்ளக்காதலில் தீர்த்துக்கட்டியது அதிகம்

செய்தி – தினமலர்: செப்டம்பர் 08,2010

கோவை : “”தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த எட்டு மாதங்களில் 224 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு மற்றும் கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பு காரணமாக நிகழ்ந்துள்ளன,” என்று, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.

224 பேர் கொலை: மேற்கு மண்டலத்தில் கடந்த 2007ம் ஆண்டில் 331 கொலைகளும், 2008ல் 335 கொலைகளும், 2009ல் 333 கொலைகளும் நடந்துள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை 224 கொலைகளும் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளன. அடுத்ததாக காதல், கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பாகவும், கொள்ளையடிக்கும் நோக்கத்துடனும், வாய்த்தகராறு காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டனர். விசாரணை நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளிலும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.

Comments:

ஜெயக்குமார் – திருவில்லிபுத்தூர்,இந்தியா
2010-09-09 12:40:14 IST
காலமெல்லாம் கள்ளக்காதல் வாழ்க…… இந்த காலத்து பெண்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்கிறார்கள்…. எல்லாம் வளர்ப்புக் கோளாறு… அதீத செல்லம்……..
c.ramasamy – tup,இந்தியா
2010-09-09 11:17:15 IST
ஓருடல் ஈருயிர்…இது காதல்….குத்துயிர்…கொலையுயிர் இது கள்ளக்காதல்….இந்த அசிங்கத்திக்கு கள்ளக்காதல் என்று சொல்லி காதலை அசிங்கப்படுத்தாதீர்…கள்ள தொடர்பு என்று எழுதுங்கள்……
சாணக்கியன் – துபாய்,இந்தியா
2010-09-09 11:16:29 IST
மர்ம டெலிபோன் செய்யும் ஆசாமிகளை மர்மமான முறையில் மர்மஸ்தானத்தை மர்மம் செய்ய வேண்டும் என்பது துபாய் சாணக்கியனின் தீர்ப்பு !…
c.ramasamy – tup,இந்தியா
2010-09-09 10:41:24 IST
விரைவில் கள்ளக்காதலுக்கு ஒரு தனி துறையை ஏற்படுத்தி…கண்காணித்து அவர்களுக்கு [நல்ல புத்திமதி] கள்ள புத்திமதி சொல்லி திருத்துங்கள்…….
சிவகாமி – Chennai,இந்தியா
2010-09-09 10:40:24 IST
கள்ள தொடர்பில் ஈடுபட்டு கணவனையும், கல்யாணம் என்ற புனிதமான பந்தத்தையும் கேவலபடித்திய பெண்கள்தான், கையும் களவுமாக பிடிபட்ட பின்னர், பெரிய பத்தினிகள் போல, கணவன் & அவரின் பெற்றோர் மீது பொய்யான வரதட்சனை கொடுமை & குடும்ப வன்முறை கேஸ்களை போட்டு, தங்கள் தவறுகளை மறைக்க நாடகம் ஆடுகிறார்கள். தங்களின் பொய்களை மறைக்க, நடத்தையை மறைக்க போலீஸ் & சட்டத்துறையை பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்த உண்மையை அறிய, கூகிள் தளத்தில் 498a + tamil மற்றும் 498a + marumagal என தேடு சொற்களை வைத்து தேடிப்பார்க்கவும்….
ஜி.பன்னாடை பாண்டியன் – wuxi,சீனா
2010-09-09 10:28:33 IST
சட்டம் ஒழுங்கு சூப்பரோ சூப்பர். இருக்கற போலிஸ் எல்லாம் கோபாலபுரம், cit காலனி, அண்ணா அறிவாலயம், புதல்வர்கள், புதல்வி, பேரன், பேத்திகளுக்கு அடை காவுங்கள். மீதி இருக்கற போலிஸ் மந்திரி பின் கொள்ளை அடிக்க காவல் காவுங்கள், சட்டம் ஒழுங்கு உருப்படும். இருங்க, இருங்க …. கொஞ்ச நாளுல எல்லாம் தலை கீழா மாறும்; அப்போது உங்களை அம்மா சுளுக்கு எடுப்பார்….
mano – nz,நிக்கர்குவா
2010-09-09 10:13:48 IST
எந்த ஒரு தவறான செயலையும், முதல் முறை செய்யும் போது, பயங்கரமான தப்பாக தோன்றும்….. அதுவே ஒரு தடவை செய்துவிட்டால், அடுத்த முறை தப்பை செய்ய…. தவறாக தோன்றாது……! ஏற்கனவே, இதை செய்திருக்கிறோமே…. என தோன்றும்……! இப்படியே, ஒவ்வொரு செயலையும் பார்த்தால்…. எதுவுமே தப்பில்லை என தோன்றும்….! குழப்பமாக இருக்கிறதா…..? வாழ்கையில் சரியான வழிகாட்டிகள் தற்பொழுது இல்லாததால் தான் இந்த பிரச்சினைகள்…… வாழ்க்கை என்பது என்ன….. அதில் நம்முடைய கேரக்டர் என்ன….. அதில் நம்முடைய வரைமுறை (லிமிட்) என்ன…. .. என்ன செய்யலாம்….என்ன செய்யக்கூடாது….. என்பதில் மிக மிக மிக கவனமாக இருக்க வேண்டும்……… ஒரு ஸ்கூல் பையன் புகை பிடித்தால் என்ன நேரும்….? அடுத்து வேறு என்ன செய்யலாம் என யோசிப்பான்…… முதலில் புகை பிடிப்பதை, புகை பிடிக்க தோன்றுவதை….. தடுத்தாலே போதும்…..! இதுக்கு என்ன வழி என்பதை….. பெரியவர்கள் தெரிவிக்க வேண்டும்….. இது காலத்தின் கட்டாயம்……! சரியான வழிகாட்டுதல் இல்லாவிட்டால், ஐ.ஜி., சிவனாண்டி அவர்கள் சொன்ன புள்ளி விபரம் கூடிய விரைவில் பல மடங்கு உயரக்கூடும்…….. எச்சரிக்கை…….!…
ராஜ் – மும்பை,இந்தியா
2010-09-09 10:09:05 IST
கைப்புள்ள… ஒன்று கவனித்தீரா? இந்த மாதிரி சம்பவங்களும், சைபர் க்ரைம் களும் நடப்பது கொங்கு மண்டலத்தில் தான் அதிகம்… ஜாதி பெயரால் காதல் மறுக்கப்படும் இடங்களில் கள்ளகாதல் நிகழ்வது அதிகம் நிகழ்கிறது… இன்னும் தன சொந்த பொண்ணையே கொளுத்தற கொடுமையும் அங்க தான் அதி(சிங்)கம்….
Divaharan – Tirunelveli,இந்தியா
2010-09-09 09:59:36 IST
எய்ட்ஸ் நோயை கண்டு கூட இவர்கள் பயப்படவில்லை . இவர்களை யார் தான் திருத்த முடியும்? கொலை கூட இவர்களால் சாதாரணமாக செய்ய முடிகிறதே ….
அம்பானி – n,இந்தியா
2010-09-09 08:18:27 IST
இதை கொண்டு போய் முதல்வரிடம் காட்டுங்கள் ….அவர்தான் சட்டம் ,ஒழுங்கு சூப்பர் ஆக உள்ளது என்று புரளி கிளப்பி கொண்டு உள்ளார் ……..
H.Lakshminarayanan – Chennai,இந்தியா
2010-09-09 07:55:15 IST
Yes you are correct mr. kaipulla, but here you can suggest how india can overcome these kind of problem. One thing i wish to ask you guys appreciation is good but donot ask why to dinamalar itself, you can suggest to those officials to over see the problems behind it. Which gives a solution to the problem. Why all increased after 2003 woman has given more power and her father and her lawyer and the law behind herself makes the situation very bad. The intension of the woman is she has to delay the divorce and her lawyer writes all ilegal and wrong items not a genine lawyer will do that. Her father also need to revenge the male family. The law is helping them indirectly to do that, inthat case the ilegal murder will increase in india who was very good and example for the world culture and traditional. any one will oppose me if i say we are the example for the culture and traditional and most oldest society and civilisation we has. So to stop this fasten your divorce cases whether the woman like or not, once you faster with in one year the father of woman and her lawyer will stop doing revenge and they will sure come for commpromise of life not for a property or money. The only looser is the male who will give his life age and property and money to the government supported woman law woman. finally he will see all and take his own decision. The public lost their trust against law. Now you know in this election congress the possiblility is very less to win….
snakebabu – london,இந்தியா
2010-09-09 07:39:48 IST
அய்யா தினமலர் ஆசிரியர் அவர்களே, தமிழகத்தின் மொத்த 8 மாத கணக்கையும் போட்டுட்டீங்க. நம்ம சட்டம் காவல்துறை எல்லார் நிலைமையும் என்னென்னு பொதுமக்களுக்கு தெரியும்…
SAKTHI – Japan,இந்தியா
2010-09-09 06:13:35 IST
Congratulations I.G. Your service to our Tamil Nadu public is VERY MUCH appreciable. I have heard your talks personally in few occassions & read in newspaper. I could understand your dedication for improving the QUALITY of LIFE of Tamil Nadu people. Your service to SAVE the ignored senior citizens of Tamil Nadu, esp. at Covai is the Remarkable Service. Now on reading this articel of DINAMALAR, I feel proud & happy that there are some good TOP LEVEL Police personnels to SAVE Tamil Nadu from Crime, Road accidents. Also help to SAVE the RICH CULTURE of Tamil Nadu & STOP the illegal sexual crimes!! which are increasing now-a-days!!in Tamil Nadu!!!!! (IG my kind request KINDLY insist media -TV : even Police can to give novelty programmes to create awareness for our young generation on road rules, regulations, manoveuring methods by following the road traffic rules, TV prog to encoruage DRIVERS to be PATIENT enough & save human lives & NEVER to ignore ROAD rules. I could see here in Japan, how every human maintains PATIENCE while driving. ONLY eminent top level officers in Tamil Nadu can SAVE INDIA & let Tamil Nadu be role model as FIRST WELL Developed STATE in INDIA. YOU CAN ACHIEVE it respected I.G. BEST WISHES. We are behind you to lift our State to such high level. SAKTHI from JAPAN…
கே.கைப்புள்ள – nj,இந்தியா
2010-09-09 01:18:25 IST
சித்ரவதை செய்த கணவரை அடித்து கொன்ற மனைவி கைது. பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, “முதிய’ கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது. மனைவியை எரித்து கொன்று கணவர் தற்கொலை: அடிக்கடி மொபைல் போனில் பேசியதால் ஆத்திரம். தினமலர் சம்பவம் பக்கத்தை புரட்டவே பயமாக இருக்கிறது. மக்கள் ஏன் இப்படி போய் விட்டார்கள்? மக்கள் மேலும் மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்….