தொகுப்பு

Archive for பிப்ரவரி, 2011

ஆஃப்டர் ஆல் ஆண்பிள்ளைதானே செத்தான்!

மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

செங்கல்பட்டு : திருமணமான ஆறு மாதத்தில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த வாலிபர் தூக்குப் போட்டு இறந்தார்.

செங்கல்பட்டு காண்டிபன் வேதாசலம் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் சண்முகம்(30); தனியார் ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். மங்கலட்சுமி (21) என்ற பெண்ணை காதலித்தார். ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். தனியாக குடும்பம் நடத்தினர். திருமணத்திற்கு பின் குடும்பப் பிரச்னை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த சண்முகம் நேற்று காலை வீட்டில் தூக்குப் போட்டு இறந்தார்.

செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமலர் – பிப்ரவரி 27,2011

இப்படியும் சில அசடுகள்!

மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் கணவர் தற்கொலை

திருவள்ளூர், பிப்.8-2011

திருவள்ளூரை சேர்ந்தவர் அன்பரசு (வயது 35). இவரது மனைவி ரம்யா (30). அன்பரசு தினமும் குடித்துவிட்டு வருவதாக தெரிகிறது. அதனால் மனைவி ரம்யா கணவரை கண்டித்தார். அதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. கணவர் மேல் கோபம் கொண்ட ரம்யா கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சில நாள் கழித்து அன்பரசு தன்னுடைய மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி ரம்யாவை குடும்பம் நடத்த வரும் படி அழைத்தார். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார்.

அதில் மனமுடைந்த அன்பரசு தன்னுடைய வீட்டில் தனியாக இருக்கும் போது விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவள்ளூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையில் முடிந்த “மிஸ்டு கால்” கள்ளக்காதல்

வடமதுரை அருகே பெண் இன்சூரன்ஸ் ஏஜன்ட் கொலையில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

செய்தி: தினமலர் (சுட்டி). நாள்: பிப்ரவரி 24,2011

மிஸ்டு கால் கள்ளக்காதல்திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கொம்பேறிபட்டியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் முருகேசன் மனைவி தனலட்சுமி(33). எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் ஏஜன்ட். கடந்த மாதம் 4ம் தேதி காந்திகிராமம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அய்யலூர் தீத்தாகிழவனூர் பாலத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை காணவில்லை. வாகனத்தில் கொண்டு வந்த பிணத்தை உருட்டிவிட்டதற்கான அடையாளம் சம்பவ இடத்தில் இருந்தது. தேர்தலுக்கான போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதால் எரியோடு இன்ஸ்பெக்டர் முத்துபாண்டியிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

அவரது தலைமையிலான தனிப்படையினர் விசாரணையில், நான்கு மாதங்களுக்கு முன் தனலட்சுமியின் தவறுதலான “மிஸ்டு கால்’ மூலம் அறிமுகமானவர் திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டைச் சேர்ந்த குமரேசன்(26). இவரது தந்தை மாரியப்பன் திண்டுக்கல் தாட்கோ அலுவலக உதவியாளர். 9ம் வகுப்பு வரை படித்த குமரேசன், தனது தந்தை வேலை செய்யும் அலுவலகம் அருகில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

தனலட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பினால், அவரது மனைவி பாத்திமா, இரண்டு குழந்தைகளும் குமரேசனிடம் கோபித்து கொண்டு சென்று விட்டனர். சம்பவத்தன்று குமரேசனுடன் தனலட்சுமி காரில் சுற்றி வரும் போது, தனலட்சுமி மொபைலுக்கு வேறொரு ஆண் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த குமரேசன், தனலட்சுமியின் மொபைலை பறிக்க முயற்சிக்க, அவர் தரமறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் தனலட்சுமியை காரினுள் வைத்து கொலை செய்து, அவரது நகைகளை எடுத்து கொண்டு அய்யலூர் பாலத்தில் பிணத்தை தள்ளிவிட்டு சென்றது தெரிந்தது.

இதனையடுத்து குமரேசனை கைது செய்த போலீசார் தனலட்சுமியின் நகைகளை மீட்டு, கொலைக்கு பயன்படுத்திய இண்டிகா காரையும் பறிமுதல் செய்தனர்.

கர்ப்பிணி டாக்டரை சித்திரவதை செய்த போலீஸ், பெண்கள் நல வாரியம் மௌனம் சாதிப்பது ஏன்?

எந்த ஒரு வழக்கிலும், ஒருவரை கைது செய்யும் போது, எந்த மாதிரியான நடைமுறைகளை போலீசார் பின்பற்ற வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எனினும், ஆந்திராவில் இருந்து கோவை வந்த தனிப்படை போலீசார், பெண் டாக்டரை கைது செய்து, அவரை சட்ட ரீதியான உதவிகளை பெற முடியாத அளவுக்கு துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மனிதாபிமான அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குடும்பத் தகராறு வழக்கில், கோவை பெண் டாக்டரை கைது செய்த, ஆந்திர மாநில தனிப்படை போலீசார், ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றனர். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, வழியிலேயே, “அபார்ஷன்’ ஆகி, ரத்தப்போக்கு ஏற்பட்ட போதிலும், கட்டாயப்படுத்தி ரயிலில் ஏற்றினர். தமிழக போலீசாரின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து, பாதி வழியிலேயே, பெண் டாக்டர் இறக்கி விடப்பட்டார்.

ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவ்ஜன்யா(35). திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கோவையை பூர்வீகமாகக் கொண்டு, லண்டனில் டாக்டராக பணியாற்றும் லட்சுமணன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில நாட்களில், கணவன் – மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். கணவர், தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, கம்மம் போலீசில், சவ்ஜன்யா புகார் அளித்தார் (Sec. 498A of IPC). எப்.ஐ.ஆர்., பதிவு செய்து போலீசார் விசாரிக்க துவங்கியதும், இவ்வழக்கில் லட்சுமணன் முன்ஜாமீன் பெற்றார்.

இதையடுத்து, சவ்ஜன்யா, மற்றொரு புகாரை, அதே போலீஸ் ஸ்டேஷனில் அளித்தார். அதில்,

“என் கணவரின் அண்ணனும், மனைவியும் கோவையில் வசிக்கின்றனர். குடும்ப பிரச்னை தொடர்பாக, சமீபத்தில் நாங்கள் சந்தித்த போது, அவர்கள் என்னை கையால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தனர்”

– என, தெரிவித்திருந்தார். லட்சுமணனின் அண்ணனும், அண்ணியும் கோவை, சிங்காநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மீது, வழிமறித்தல், கையால் அடித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கம்மம் தனிப்படை போலீசார், கோவை வந்தனர். சிங்காநல்லூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று, லட்சுமணனின் அண்ணன், அவரது மனைவியை தேடினர். பணியில் இருந்த பெண் டாக்டரை பிடித்த போலீசார், சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவரை ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.

இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த பெண் டாக்டர், கணவருடன் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்; உடனிருந்த போலீசார் மொபைல் போனை பறித்துக் கொண்டனர்.

ஈரோடு வரை ஜீப்பில் அழைத்துச் சென்றபோது, அதிர்ச்சி காரணமாக, பெண் டாக்டருக்கு, “அபார்ஷன்’ ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. தன் நிலையை போலீசாரிடம் தெரிவித்த பெண் டாக்டர், கடையில் “நாப்கின்’ வாங்கி கொள்ள அனுமதிக்குமாறு மன்றாடியும், போலீசார் மனம் இரங்கவில்லை.

ஈரோட்டில் இருந்து, ரிசர்வ் செய்யப்படாத ரயில் பெட்டியில் இவரை ஏற்றிய போலீசார், அமர்ந்து செல்ல இருக்கை வசதி கூட செய்து தராமல், அலட்சியம் காட்டினர். வயிற்று வலியால் மிகவும் துடித்த இவர், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

நிலைமை மோசமாவதை அறிந்த ஆந்திர போலீசார், அவரிடம் மொபைல் போனை கொடுத்து கணவரிடம் பேச அனுமதித்தனர். தகவலறிந்த கணவர், மனைவியின் உடல் நிலை மோசமாவது குறித்து, தமிழக போலீஸ் உயரதிகாரிகளிடம் முறையிட்டு உதவி கோரினார். விவரங்களை சேகரித்த போலீஸ் அதிகாரிகள், ஆந்திர மாநில போலீஸ் உயரதிகாரிகளை, போனில் தொடர்பு கொண்டனர். “பெண் டாக்டர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள், கைது செய்ததும் ஜாமீனில் விடக்கூடியதாக உள்ளன. அவ்வாறிருந்தும், கர்ப்பிணி பெண் டாக்டரை கைது செய்து போலீசார் துன்புறுத்துகின்றனர் என, அதிருப்தி வெளியிட்டனர். இதையடுத்து, தனிப்படை போலீசாரை தொடர்பு கொண்ட ஆந்திர போலீஸ் உயரதிகாரிகள், பெண் டாக்டரை வழியில் ஏதாவது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். இதன்படி, தங்களது கஸ்டடியில் இருந்த பெண் டாக்டரை, ஜோலார்பேட்டையில் இறக்கி, அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த ஆந்திர போலீசார், அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“எந்த ஒரு வழக்கிலும், ஒருவரை கைது செய்யும் போது, எந்த மாதிரியான நடைமுறைகளை போலீசார் பின்பற்ற வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எனினும், ஆந்திராவில் இருந்து கோவை வந்த தனிப்படை போலீசார், பெண் டாக்டரை கைது செய்து, அவரை சட்ட ரீதியான உதவிகளை பெற முடியாத அளவுக்கு துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மனிதாபிமான அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதிகாரி கூறினார்.”

செய்தி: தினமலர். பிப்ரவரி 23, 2011.

மேலதிக விரங்களுக்கு இந்த வலைப்பதிவிற்குச் செல்க.
———

மேட்டுக்குடி இளம் பெண்கள் குடித்து கும்மாளம் போட அனுமதி வேண்டும் ஏன்று வரிந்து கட்டி களத்தில் இறங்கிய “தேசிய பெண்கள் நல வாரியம்” (National Commission for Women (NCW) and State Commission for Women) இந்த பெண் டாகடருக்கு நிகழ்ந்த கொடுமை பற்றி வாய் திறக்காதது ஏன்? 498ஏ சட்டத்தின் துஷ்பிரயோகம் (தவறான பயன்படுத்தல்) பற்றிய விவரம் வெளிவந்துவிடுமோ என்ற பயமா?

மொபைலில் கணவர், அருகில் கள்ளக்காதலருடன் ஜல்ஸா – பூங்காவில் “தவித்த” அபலைப் பெண்!

கள்ளக்காதல்கள்ளக்காதலருடன் மேட்டூர் அணை பூங்காவுக்கு வந்த பெண்மணியை, கணவர் மொபைலில் தொடர்பு கொண்டு அழைத்தார். எங்கு செல்வது என, தெரியாமல் பரிதவித்த பெண்மணியை, செக்யூரிட்டிகள் வெளியேற்றினர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மற்றும் பூங்காவில் முன்னாள் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விடுமுறை நாளில் தமிழகம் முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மேட்டூர் அணை பூங்காவை சுற்றி பார்ப்பது வழக்கம்.

நேற்று, பூங்காவுக்கு 40 வயது பெண்மணி ஒருவரும், 32 வயது ஆண் ஒருவரும் ஜோடியாக வந்தனர். இருவரும் கைகோர்த்தவாறு பூங்காவில் வலம் வந்துள்ளனர். அப்போது, திடீரென பெண்ணின் மொபைலுக்கு அழைப்பு வந்துள்ளது. மொபைலை எடுத்த பெண்மணி, வெகுநேரமாக ஒரே இடத்தில் நின்று பேசியுள்ளார்.

உடன் வந்த ஆண், அந்த பெண்ணிடம் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு, தன்னுடன் வரும்படி சைகை செய்துள்ளார். ஆனால், மொபைலில் கணவருடன் காரசார வாக்குவாதத்தில் பெண்மணி ஈடுபட்டுள்ளார்.வெகுநேரம் மொபைலில் பெண் பேசி கொண்டிருப்பதையும், அருகில் நிற்கும் ஆண் சைகை மூலம் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் படி வற்புறுத்துவதும், ரோந்து பணியில் ஈடுபட்ட செக்யூரிட்டிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, செக்யூரிட்டி அருகில் சென்று, இருவரையும் விசாரித்துள்ளார். அதில், அந்த பெண்மணி கட்டுமான தொழிலுக்கு செல்பவர். கணவரிடம் கட்டுமான தொழிலுக்கு செல்வதாக கூறி விட்டு, அந்த பெண்மணி கொத்தனார் வேலை செய்யும் வாலிபருடன் பூங்காவுக்கு வந்ததுள்ளார். அப்போது, மொபைலில் பேசிய கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இருவரும் வெகுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக கள்ளக்காதலர், பெண்மணி இருவரையும் செக்யூரிட்டி பூங்காவில் இருந்து வெளியேற்றினார்.இந்த சம்பவம் பூங்கா ஊழியர்கள், செக்யூரிட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி: தினமலர். பிப்ரவரி 14,2011

சீதைக்கும் முருகனுக்கும் கள்ளக்காதல், முடிவு என்ன?

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கள்ளக்காதலியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலகுமிழங்குளத்தை சேர்ந்தவர் நாகேஷ் (41). இவரது மனைவி சீதை (32). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன்(28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதில் இருவரும் வெளியூருக்கு ஓடி விட்டனர்.

சில மாதங்களில் சீதை ஊர் திரும்பினார். முருகனும் ஊர் திரும்பி, வேறு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2007 ஜூன் 6ம் தேதி முருகனை சீதை சந்தித்தார். முருகன், “எனக்கு திருமணம் ஆகி விட்டது, நீ மருந்து குடித்து செத்து தொலை” எனக் கூறினார்.

வீடு திரும்பிய சீதை, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வழக்கில் முருகனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து அருப்புக்கோட்டை சப் கோர்ட் நீதிபதி ஜெசிந்தா மார்டின் தீர்ப்பளித்தார்.

செய்தி: தினமலர்
: பிப்ரவரி 10,2011

இதோ இன்னொரு தெய்வீக கள்ளக்காதல்!

கள்ளக்காதல் விவகாரம் : இளம் பெண் தற்கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்காதல் பிரச்னை காரணமாக இளம் பெண் தற்கொலை செய்து இறந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையத்தைச் சேர்ந்தவர் சாந்தி (27) , இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த 6 மாதங்களாக சாந்தி , அம்மம்பாளையத்தில் இருக்கும் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

அதே பகுதியில் இருக்கும் சண்முகம் என்பவருடன் சாந்திக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சாந்தியின் பெற்றோர்கள் அவரை கண்டித்தனர்.

இந்நிலையில் சாந்தி நேற்று அவர் படித்த கல்லூரிக்குச் சென்று வருவதாக சொன்னார். ஆனால் வீடு திரும்பவில்லை. தேடிப்பார்த்த போது சாந்தியும் , சண்முகமும் சென்னிமலை பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தனர். அரளி விதையை அரைத்து குடித்திருந்தனர். இருவரும் மருத்துவ‌மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சண்முகம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமலர் – பிப்ரவரி 09,2011

ஆகா, இதுவல்லவோ தெய்வீக கள்ளக்காதல்!

கள்ளக்காதலன் விஷம் குடித்தார் அதிர்ச்சியில் கள்ளக்காதலி தற்கொலை

தூத்துக்குடியில் பெற்றோர் கண்டித்ததால், கள்ளக்காதலன் விஷம் குடித்தார். இதையறிந்த, அவரது கள்ளக்காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி, ஜோதிபாசு நகரைச் சேர்ந்தவர் முருகன்(45). இவரது மனைவி அமுதலட்சுமி(35). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அமுதலட்சு மிக்கும், மகாராஜன்(25)என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.

இதையறித்த முருகன், அமுதலட்சுமியையும், மகாராஜனை அவரது பெற்றோரும் கண்டித்துள்ளனர். மனமுடைந்த மகாராஜன், பிப்., 4ல் விஷம் குடித்தார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அமுதலட்சுமி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாளமுத்துநகர் போலீசார் விசாரித்தனர்.

செய்தி: தினமலர். பிப்ரவரி, 7, 2011.

கள்ளக்காதலியுடன் உல்லாசம் வாலிபர் கொலை: காதலன் கைது

கொலையானதும் வாலிபன்; கைதானதும் வலிபன். உல்லாசம் யாருக்கு!!

1. இப்போது செய்திகள் (தினமலர்): நவம்பர் 28,2010.

குறிஞ்சிப்பாடி : கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை அடித்து கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

வடலூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் மனைவி அம்சவள்ளி (24). சசிகுமார் கடந்த ஆறு மாதத்துக்கு முன் இறந்தார்.அம்சவள்ளிக்கும் இறந்த கணவர் சசிகுமார் நண்பர் வானதிராயபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் வேதநாயகத்திற்கும் (28) தொடர்பு ஏற்பட்டது.இந்நிலையில் அம்சவள்ளி நெய்வேலியில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை கடையில் வேலைக்கு சேர்ந்தார்.அங்கு மேலாளராக உள்ள மும்முடிசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் மகன் பழனிவேல் (30) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பழனிவேல் அடிக்கடி அம்சவள்ளி வீட்டிற்கு சென்று வந்தார். இதனை அறிந்த வேதநாயகம், பழனிவேலை பலமுறை கண்டித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வேதநாயகம், அம்சவள்ளி வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு பழனிவேலுவை பார்த்ததும் ஆத்திரம் அடைந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். அதில் பழனிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கொலையை மறைக்க வேதநாயகமும், அம்சவள்ளியும் முடிவு செய்தனர். அதன்படி அம்சவள்ளி வடலூர் போலீசில் பழனிவேல் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியதில் வேதநாயகம் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த கிரிக்கெட் மட்டையை கைப்பற்றினர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து வேதநாயகத்தை கைது செய்தனர்.

2. அது கிடக்கட்டும். தினமலரில் இன்று வெளியான இந்த செய்தியின்கீழ் நம் மக்கள் சிந்தியுள்ள அறிவார்ந்த கருத்துக்களை (காமெண்ட்ஸ்) காணுங்கள் முதலில்:

rajkumar – sharjah,ஐக்கிய அரபு நாடுகள் 2010-11-30 04:15:15 IST

கள்ளக்காதலுக்கு துணை புரிந்த அம்சவல்லியும் தண்டிக்கப்பட வேண்டும். ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழய முடியும். இவள் போன்ற பெண்ணால்தான் சில ஆண்கள் தவறான வழிக்கு செல்கிறார்கள். கலி காலம் எப்போதுதான் மாறுமோ!!!…
—————
சிலம்பரசன் – சென்னை.,இந்தியா 2010-11-30 00:32:56 IST

ஏன்டா வேதநாயகம் அம்சவல்லி என்ன உன்னுடைய பெண்டாட்டியா? கள்ளக்காதலிதானே, ஆற்று தண்ணீர் என்றால் நாலு பேர் குடிக்கத்தான் செய்வான். நீ என்னவோ உன் வீட்டுக்கிணற்றில் தண்ணீர் எடுத்து குடிததுபோல பழனிவேல கொலை செய்துவிட்டாய்?…
—————-
ஆனந்த்ரூபன் கேரளா – mumbai,இந்தியா 2010-11-29 12:49:31 IST

வேதநாயகம் ஏன் அம்சவள்ளியை கல்யாணம் செய்து குடும்பம் நடத்த பயப்படுகிறாரோ? அல்லது Part Time Job போதும் என்று நினைகிரானா? என்ன கொடுமைடா சாமி…….
—————-
ஜோஜோ – சென்னை,இந்தியா 2010-11-29 11:41:16 IST

நாய் ஜென்மங்கள் !!!!!…
—————-
ஹபிப் – dubai,இந்தியா 2010-11-29 10:39:32 IST

ஏன் இந்த வேலை. உங்களுக்கு உப்பு தின்னா தண்ணி குடிக்கணும். அதை போல தப்பு செஞ்சால் தண்டனை அனுபவிக்கனும். கவலை வேண்டாம். ஜெயில் உள்ள பொய் அனுபவிக்கலாம். தண்டனையை சொன்னேன்…
——————
சரவணன் – சிங்கபூர்,இந்தியா 2010-11-29 05:42:27 IST

நாடு எங்கயோ போகுது இவர்கள் மட்டும் என் இப்படி இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த வரை தவறான வழியில் உறவு வைத்துக்கொள்ளும் ஆண் மற்றும் பெண் இருவரையும் சுட்டுக்கொல்ல வேண்டும். அப்பதான் நாடு உருப்புடும். மனிதர்களே முன்னேற பாருங்கள். முட்டாளாக இருக்காதீங்க….
——————
நல்லவன் – ஜெத்தாஹ்,சவுதி அரேபியா 2010-11-29 01:26:23 IST

கள்ளக்காதலால் பல குடும்பங்கள் அழிந்துள்ளன…
——————-

கொலையானவள் மீண்டும் தோன்றினாள்; கைதாகி சீரழிந்தவனுக்கு யார் பதில் சொல்வது?

ஒன்பது ஆண்டிற்கு முன் கொலை செய்யப்பட்டதாககருத்தப்பட்ட பெண், கலெக்டர் அலுவலகத்தில் ஆஜர்

Woman who was considered killed and men arrested as killers surfaces after 9 yearsதூத்துக்குடி அருகே ஒன்பது ஆண்டிற்கு முன் கொல்லப்பட்டதாக கருதப்பட்டு உயிரோடு வந்த பெண், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆஜரானார். பொய் வழக்கு போட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.திருப்பூர், செல்லம் நகர், ஆனந்தன் மனைவி மேகலா (எ) மணிமேகலா(28). 2002 ஏப்ரலில், கணவரோடு ஏற்பட்ட தகராறு காரணமாக இவர், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், பேரூரில் பெரியப்பா சண்முகராஜ் வீட்டிற்கு வந்தார். நீண்ட நாட்களாகியும் அவர் திருப்பூர் திரும்பாததால், அவரை காணவில்லை என ஆனந்தன், ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார். இதனிடையே, மேகலா தனதுபெரியப்பா வீட்டிலிருந்து மதுரைக்கு சென்று, பின், திருப்பூர் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2002 ஏப்., 5ம் தேதி, வல்லநாடு பகுதியில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுகிடந்தார். விசாரணை நடத்திய போலீசார், அது, மாயமான மேகலா உடல்தான் என முடிவு செய்தனர். சண்முகராஜனோடு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மேகலாவை கடத்தி எரித்துக் கொலை செய்ததாக அதே ஊரைச் சேர்ந்த கோயில்பிள்ளை(47) பாலசுப்பிரமணியன்(35) குருநாதன்(30) தாசன்(32) ஆகிய நால்வரை, முறப்பநாடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி விரைவு கோர்ட்டில் நடந்த அந்த கொலை வழக்கில் உரிய ஆதாரமில்லை எனக்கூறி, குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, அப்போது கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட மேகலா, தனது இரு குழந்தைகளுடன் பிப்., 8ம் தேதி ஸ்ரீவைகுண்டம், பேரூர், பெரியப்பா சண்முகராஜ் வீட்டிற்கு வந்தார். அவர் உயிருடன் இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்ட கிராமத்தினர், ஒன்பது ஆண்டிற்கு முன் கொலையுண்டதாக வெளியான தகவலை மேகலாவிடம் கூறினர். அதைக்கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் ஆஜர்:

இந்நிலையில், மேகலா நேற்று, குழந்தைகளுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆஜரானார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வியை சந்தித்து, தான் உயிருடன் இருப்பதாகவும், திருப்பூரில் மாமியார், மாமனாருடன் வசித்து வருவதாகவும், கணவர் சவுதியில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை: இந்நிலையில், கொலையுண்டு கிடந்த ஏதோ ஒரு பெண் உடலை பார்த்து,முறையாக விசாரிக்காமல் அதுமேகலாதான் என, அவசரகதியில் முடிவுக்கு வந்து, அந்த பொய் கொலை வழக்கில் தங்களை கைது செய்த சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்போது கைது செய்யப்பட்ட கோயில் பிள்ளை உள்ளிட்ட நால்வர், தமிழ்செல்வியிடம் மனு அளித்தனர். மேலும், அந்த போலீசார் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, நிவாரணத்தொகை பெற்றுத்தர வலியுறுத்தினர்.

“நிருபர்களை குழப்பிய மேகலா”

கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய மேகலா, தனது கணவர் ஆனந்தன், திருப்பூரில் உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவரது மனுவில் ஆனந்தன், சவுதியில் வேலை செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டதற்கு, கணவர், குழந்தைகள் பற்றி கேட்காதீர்கள் என்றார். ஒன்பது ஆண்டில் ஒருமுறை கூடவா, பேரூருக்கு போன் செய்யவில்லை என கேட்டதற்கு, மொபைல் போன் எண் தெரியாது என மழுப்பலாக கூறினார். தாய், தந்தையரை பற்றி கேட்டதற்கும் முறையான பதில் கூறவில்லை. மேகலாவின் மகன் பெயர் சவுக்கத் அலி(5), மகள் பெயர் நவுசீன்(3) என, தெரிவிக்கப்பட்டது.

அவர்களுக்கு அப்பெயர்கள் சூட்டப்பட்டதற்கான கேள்விக்கும் பதில் இல்லை.கடந்த 2002ல், வீட்டை விட்டு வந்து பலநாட்கள் கழித்து மீண்டும் திருப்பூர் திரும்பியதால், நான் காணாமல் போனதாக ஆனந்தன், போலீசில் கொடுத்த புகாரில், மேல்நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தவில்லை, என்றார். இப்பிரச்னை குறித்து எஸ்.பி., கபில்குமார் சரட்கரிடம் கேட்டதற்கு, “சம்பந்தப்பட்டவர்கள் எங்களிடம் மனு அளித்தவுடன், இதில் உரியமுறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

செய்தி: தினமலர் : பிப்ரவரி 11,2011