தொகுப்பு

Archive for மார்ச், 2011

போடுங்கம்மா கேசு, 498A சட்டத்தைப் பார்த்து!

விருதுநகர், அய்யனார் நகரை சேர்ந்தவர் தங்கவேல் மகள் காளீஸ்வரி(22). இவருக்கும் சிவகாசி, ஆறுமுகம் காலனி, ரிசர்வ் லைனை சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டனுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

வரதட்சணையாக 10 பவுன் மற்றும் 30 ஆயிரம் தரப்பட்டது.

மூன்று மாதத்திற்கு பின் மேலும் 15 பவுன் மற்றும் 2 லட்ச ரூபாய் கேட்டு கணவர் மணிகண்டன், மாமியார் சீதாலட்சுமி, செல்வி, மகேஸ்வரி, ஆறுமுகம், ஈஸ்வரன் ஆகியோர் கொடுமைபடுத்துவதாக விருதுநகர் ஜே.எம். கோர்டில் காளீஸ்வரி மனு தாக்கல் செய்தார்.

கோர்ட் உத்தரவு படி, ஆறு பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

செய்தி: தினமலர். மார்ச் 17,2011

கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு 498A புகார்

போட்டாய்ங்கய்யா, போட்டாங்கய்யா, 498ஏ கேசு போட்டாங்கய்யா!

இதுபோல் பெரிய மனுஷயங்கய்ய ரொம்பபேர் போட்டாத்தான், இந்த சட்டத்தோட முழு மகத்துவமும் மக்களுக்கும், ஆள்பவர்களுக்கும் புரியும்.

ஆனால் இது போதாது – அரசியர் பிரமுகர்கள், போலீஸ் உயரதிகாரிகள், பிரபல வக்கீல்கள், தீர்ப்பளிப்பவர்கள் – இவர்களையெல்லாம் இது போன்ற 498ஏ கேசுகள் பெருமளவில் என்று தீண்டுகிறதோ, அப்போதுதான் இதற்கு ஒரு விமோசனம் கிட்டும்.

அந்த நன்னாளுக்காக காத்திருப்போமாக!!

இப்போது செய்தி: (தினமலர்: மார்ச் 16,2011)

சிரஞ்சீவியின் மகள் போட்ட 498ஏ கேசுவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, போலீசில் புகார் செய்துள்ளார். மாமனார் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, ஐதராபாத் நகரைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஸ்ரீஜா தெரிவித்தார். பின்னர், ஐதராபாத் பஷீர்பாக் பகுதி மகளிர் காவல் நிலையத்திற்கு ரகசியமாக வந்த சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா, தன் புகாரை மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளரிடம் வழங்கினார்.

இதையடுத்து, ஸ்ரீஜாவின் கணவர் ஷிரிஸ் பரத்வாஜ், அவரது தாய், தந்தையை, போலீசார், 14ம் தேதி இரவு கைது செய்தனர். (அதானே பார்த்தேன், 498ஏ போடறதெ இந்த பட்டாபிஷேகத்திற்காகத்தானே!)

காதல் திருமணம்:

சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ஷிரிஸ் பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் கடும் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜா, பரத்வாஜ் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீஜாவிற்கு குழந்தை பிறந்த பின், சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி – ஷிரிஸ் பரத்வாஜ் ஆகிய இரு குடும்பத்தினரிடையே பேசியதால் எதிர்ப்பை கை விட்ட சிரஞ்சீவி, மகள் ஸ்ரீஜாவை தன் குடும்பத்தில் இணைத்து கொண்டார்.
(படம் நன்றி – தட்ஸ்தமிழ்)

முந்தைய செய்திகள்:

1. தட்ஸ்தமிழ்:

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா(21) தனது காதல் கணவர் ஸ்ரீரீஷ் பரத்வாஜ் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீஜா கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எனக்கும், பரத்வாஜூக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாகவே எனது கணவர் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துகிறார்.

திருமணத்தின்போதும், அதன் பிறகும் என இந்நாள் வரை பல கோடி ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளோம். அதெல்லாம் போதாது என்று தற்போது ரூ. 1.5 கோடி வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்துகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அவரது புகாரின்பேரில் ஸ்ரீஸ் பரத்வாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (ஐபி.சி 498 ஏ) பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
========

2. தினமலர்:

காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார்

மார்ச் 15,2011

ஐதராபாத்: ரூ.1.5 ‌கோடி கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக நடிகர் சிரஞ்சீவியின் மகள் தனது கணவர் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.. ஆந்திராவில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.இவரது இளைய மகள் ஸ்ரீஜா(21) , நேற்று மத்திய குற்றப்பிரிவு மகளிர் போலீசில் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றினை அளித்தார். தனக்கும் (ஸ்ரீஜா) கணவர் ஸ்ரீஸ்பரத்வாஜூக்கும், கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எ‌ன்னை ( கணவர் ஸ்ரீஸ்பரத்வாஜ்) குடித்து விட்டு அடித்து சித்ரவதை செய்கிறார். ஏற்கனவே திருமணத்தின் போதும், பிறகும் என இதுவரை ரூ. பல கோடி வரதட்சணையாக கொடுத்தும் போதாது என்றும், கூடுதலாக ரூ. 1.5 கோடி வரதட்சணை வேண்டு்ம் எனக் கோரியும் அடித்து துன்புறுத்தினார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீஸ்பரத்வாஜ், மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (ஐபி.சி 498-ஏ) பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்; பிளஸ்-2 மாணவி தூக்கு போட்டு சாவு

Girl commits suicide because of mother's adulteryகடலூர், மார்ச். 12, 2011செய்தி: மாலைமலர்

பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் அஞ்சாபுலி(வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி(34). இவர்களது மகள் ஆனந்தி (17). இவர் பேர்பெரியான்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இதற்கிடையே செல்விக்கு வேறு ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செல்வி கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை செல்வி முத்தாண்டிக் குப்பத்துக்கு வந்தார். அப்போது செல்வியை மீண்டும் வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என ஆனந்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அதனை மீறி செல்வி கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தி நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிபோதையில் தகராறு செய்த பெண் போலீஸ் கைது!

ஐயோ பாவம், இந்த அபலைப் பெண்கள்!

ஆண்கள்தான் அத்துணை அக்கிரமங்களும் செய்பவர்கள். அதனால்தன் ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே ஆண்களைக் கைது செய்து சிறையிலடைத்து, தண்டனையும் கொடுத்து விடுகிறார்கள். இந்தியாவில் ஒரு ஆண் தான் பிறந்த கணத்திலேயே ஒரு கிருமினல் ஆகிறான்!

இதோ பாருங்கள் இந்த அபலைப் பெண்ணின் கதையை!!

தினமலர் செய்தி:

“சரக்கு’ போதையில் ஆட்டம் போட்ட பெண் போலீஸ் : ஓசி, “சைடு டிஷ்’க்கு சண்டையிட்டதால், “சஸ்பெண்ட்”

சென்னை : குடி போதையில் ரகளை செய்து, ஓசி, “சைடு டிஷ்’க்கு கடை ஊழியரை தாக்கிய பெண் போலீஸ்,”சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

சென்னை, மயிலாப்பூர் எலைட் குடியிருப்பில் வசித்து வருபவர் ராணி(32); திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் கான்ஸ்டபிளாக உள்ளார். திருமணமாகாத நிலையில் இவர், குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினசரி குடித்துவிட்டு, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையில் உள்ள மிக்சர் கடையில், “இலவச சைடு டிஷ்’ வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இது போல், நேற்று முன்தினம் மாலை, அளவுக்கதிகமாக மது அருந்திய ராணி, ஒரு ஆட்டோ பிடித்து, லாயிட்ஸ் சாலை சென்றார். அங்குள்ள மிக்சர் கடையில், வழக்கமான, “சைடு டிஷ்’ கேட்டார். கடை ஊழியர் நடேசன் தர மறுக்கவே, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, நடேசனின் கையை முறுக்கிய ராணி, போலீஸ் பாணியில் ஒரு உதை கொடுத்தார். இதில், நடேசன் கீழே விழுந்த போது, கையில் கிடைத்த சிப்ஸ் மற்றும் காரத்தை அள்ளி, ஆட்டோவில் போட்டுக் கொண்டு புறப்பட்டார். அப்போது, நடேசன் சத்தம் போட்டதால், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, ஆட்டோவை நிறுத்தி, ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்த போலீசாரிடம், போலீஸ் உடையில் இருந்த ராணியை ஒப்படைத்தனர்.

போலீசார், உடனடியாக ராணியை, ராயப்பேட்டை மருத்துவமனை சென்று, மது அருந்தியதற்கான சான்றிதழ் பெற்று, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பெண் போலீஸ் ஒருவர், போலீஸ் உடையில் இருக்கும் போதே, மது அருந்தி கலாட்டா செய்த விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. ராணி மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்,” சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

கடந்த 1997ம் ஆண்டு போலீசில் சேர்ந்த ராணி, திருச்சியில் பணியாற்றி வந்தார். அங்கும், பணியின் போது மது அருந்தியதால், கோவைக்கு மாற்றப்பட்டார். கோவையிலும் அதே நிலை தொடர, அங்கிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

==========================

சென்னை: சென்னையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். (செய்தி: தட்ஸ்தமிழ்)

திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ராணி (38). திருமணமாகாத இவர், மைலாப்பூர் அப்பு தெருவில் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறார்.

நேற்று முன்தினம் தலைமைச் செயலக காவல் பணியில் இருந்த ராணி மாலை 3 மணியளவில் பணி முடிந்து விடுதிக்குச் சென்றார். மாலை 6 மணிக்கு மீண்டும் இரவு பணிக்காக புறப்பட்டு வந்தவர் ஐஸ் ஹவுஸ் மார்க்கெட்டில் உள்ள `காமாட்சி ஹாட் சிப்ஸ்’ என்ற பேக்கரிக்குச் சென்றார்.

பிஸ்கட், கேக், சிப்ஸ் என வேண்டியதை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றார். இதையடுத்து அவரைத் தடுத்த கடை ஊழியரான தமிழரசன் என்பவரை ராணி தாக்கினார்.

இதையடுத்து அக்கம் பக்கம் உள்ள கடைக்காரர்கள் ராணியைப் பிடித்து ஐஸ் ஹவுஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

அப்போது ராணி குடிபோதையில் இருந்தது தெரிய வந்ததால் உடனடியாக இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணி மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். ராணியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மது அருந்தியதற்கான சான்றிதழை போலீசார் வாங்கினர்.

பின்னர் ராணி மீது குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ராணியின் செயல் குறித்து விசாரணை நடத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ராணி போதையில் ரகளை செய்வது இது புதிதல்ல. அவர் ஏற்கனவே கரூரில் வேலை பார்க்கும் போதும், அதன் பிறகு கோவையில் வேலை பார்க்கும் போதும் போதை புகாரில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதலாகி அவர் சென்னை வந்தார். சென்னையிலும் அவரது பழைய போதை பழக்க வழக்கம் தொடர்ந்தது.

மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த அவர், சமீபத்தில் தான் மீண்டும் பணியில் வந்து சேர்ந்தார் என்றார்.