தொகுப்பு

Posts Tagged ‘dv act’

கள்ளக்காதலுக்காக தன் குழந்தையையே கொன்ற தாய்

mother-kills-her-child-for-being-a-hindrance-to-adulteryசிவகாசி: ஜூன் 16,2011,23. செய்தை: தினமலர்.

தொட்டிலில் தூங்கிய குழந்தையை, கள்ளக் காதல் மோகத்தால்,கொலை செய்த தாய், கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மதுரை பாண்டிக்கும், அனுப்பங்குளம் நயினார் மகள் துர்காதேவிக்கும், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. துர்காதேவி கர்ப்பிணியான நான்கு மாதத்தில், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கோரி, கணவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு சம்மதிக்காத துர்காதேவி, சேர்ந்து வாழ்வதாக கூறி, பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், துர்காதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பேச்சு வார்த்தைக்கு பின், 9 மாத குழந்தை முகேஷ் பாண்டியுடன், துர்காதேவி, கணவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். மாலையில் வீடு திரும்பிய கணவர், தொட்டிலில் தூங்கிய மகனை தூக்கினார்.பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.பரிசோதித்த டாக்டர்,”குழந்தை இறந்துவிட்டது’ என்றார். சந்தேகம் அடைந்த மதுரை பாண்டி, சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார், துர்காதேவியிடம் விசாரித்தனர்.

விசாரணையில், திருமணத்திற்கு முன் அனுப்பங்குளத்தை சேர்ந்த குமாருடன் துர்காதேவிக்கு ஏற்பட்ட பழக்கம், திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்தது தெரிய வந்தது.மேலும், கணவருடன் வாழப் பிடிக்காமல், தந்தையுடன் வசித்த துர்காதேவியை, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ, குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்; “குழந்தை உயிருடன் இருப்பதால் தானே, கணவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்துகின்றனர்…’ என நினைத்த துர்காதேவி, தொட்டிலில் தூங்கிய குழந்தையை, மூச்சு திணறடித்து கொலை செய்தார் என்றும் தெரிந்தது.இதையடுத்து, துர்காதேவியை போலீசார் கைது செய்தனர்.

ஜோதிடம் மீது பழி போட்ட தாய்:

பெற்ற மகனை கொலை செய்த தாய், மகன் இறந்ததை நினைத்து அழுவது போல் நடித்தார். அப்போது,”அப்பாவிற்கும், மகனுக்கும் ஜாதகம் சரியில்லை; அப்பாவும், மகனும் நேருக்கு நேர் பார்த்தால் யாராவது ஒருவர் உயிருடன் இருக்க மாட்டார் என, ஜோதிடர் கூறியது, பலித்து விட்டதே’ எனக் கூறி, அழுது புலம்பினார்.

ஆனால், பச்சிளம் குழந்தையை கொலை செய்த அவர், சிறைக்கு போகும் முன், போலீசார் வாங்கி கொடுத்த மதிய உணவை ருசித்து சாப்பிட்டபடி, எந்தவித பதட்டமும் இல்லாமல் காணப்பட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=258917

இதோ இன்னொரு 498-A கேசு!

Sec 498A of IPCவரதட்சணை கேட்டு இளம்பெண் சித்திரவதை: மாப்பிள்ளை வீட்டார் கைது

திங்கள்கிழமை, மே 23, 2011, செய்தி: தட்ஸ்தமிழ்

கோவை: வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்திரவதை செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரை போலீசார் கைது செய்தனர்.

திருமணம்

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த சந்தியாவிற்கும், செளரிபாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரனுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாஸ்கரன் செளரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராகப் பணியாற்றி வருகிறார்.

திருமணத்தின் போதே 25 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் மணமகனுக்கு பைக் ஆகியன சந்தியாவின் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது.

கருவை அழி

திருமணம் ஆன சில நாட்களிலேயே பாஸ்கரனின் தாயும், தந்தையும் மருமகள் சந்தியாவை கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இந்நிலையில் சந்தியா கர்ப்பம் தரித்தார்.

அவரது கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை தான் என்பதை அறிந்து கொண்ட இருவரும் கருவைக் கலைக்கச் சொல்லி தொடர்ந்து இம்சை செய்துள்ளனர். இதனால் கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார் சந்தியா. அங்கேயே தங்கி பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.

குடும்பத்தோடு கைது

இந்நிலையில் கணவரோடு சேர்ந்து வாழ சந்தியா கூடுதலாக ரூ. 2 லட்சம் வரதட்சணை தரவேண்டும் என பாஸ்கரனின் வீட்டிலிருந்து தொடர்ந்து துன்புறுத்தல்கள் வந்து கொண்டிருந்ததால், சந்தியா கோவை மாநகர போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து பாஸ்கரன், அவரது பெற்றோர் மற்றும் தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

———–

498ஏ கேசுகளின் பேரில் கைது நடவடிக்கை கூடாது என்று உயர்நீதிமன்றமும், டிஜிபியும் அறிவுறுத்திய பிறகும் கூட இது போன்ற கைதுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கூடிய சீக்கிறம் நம் நாட்டில் திருமணம் ஆகிய அனத்து ஆண்களும் 498ஏ கேசில் உள்ளே போகும் நிலை கட்டாயம் வரும்!

நீதிமன்றங்கள் நிரபராதிகளை பாதுகாக்குமா?

Stop husband suicideஇந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம். செய்தி மடல். 5 (மே, 2011)

“வரதட்சணை வழக்குகளைப் பொறுத்தவரை, புகார் பதிவு செய்யப்பட்டவுடன் எவ்வித புலன் விசாரணையும் செய்யாமல், கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகாரை அப்படியே நகலாக்கி, அதனையே இறுதி அறிக்கையாக (குற்றப் பத்திரிக்கையாக) நீதி மன்றங்களுக்கு அனுப்பிவிடும் வழக்கம் பல காலமாக காவல் துறையில் இருந்து வருகிறது.

இதுபோல் புலன் விசாரணை என்னும் நடைமுறையே இல்லாமல், வெறும் புகாரின் அடிப்படையிலேயே பல அப்பாவி ஆண்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவதால், ‘பொய் வரதட்சணை வழக்குகள் குப்பையைப் போல காவல் துறையால் தினம் தினம் நீதி மன்றங்களில் கொட்டப்படுகின்றன’ என்று டில்லி உயர்நீதி மன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது.

மேலும் வாசிக்க:

குடும்பப் பாதுகாப்பு இயக்க செய்தி மடல் எண் – 5

ஆண்கள் நலம் காக்க முற்படுவீர் அரசியல் கட்சிகளே!

Aimwa Logoஅகில இந்திய ஆண்கள் நல இயக்கம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கைகள் அடங்கிய வேண்டுகோளை இங்கு காணலாம்:

அரசியல் கட்சிகளுக்கு AIMWA முன்வைத்துள்ள கோரிக்கைகள்

AIMWA கோரிக்கைகள் - பக்கம்-2

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பிடிஎஃப் வடிவத்தில் பெற (to download the above letter in PDF format) இங்கே கிளிக் செய்யவும்.

தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்; பிளஸ்-2 மாணவி தூக்கு போட்டு சாவு

Girl commits suicide because of mother's adulteryகடலூர், மார்ச். 12, 2011செய்தி: மாலைமலர்

பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் அஞ்சாபுலி(வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி(34). இவர்களது மகள் ஆனந்தி (17). இவர் பேர்பெரியான்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இதற்கிடையே செல்விக்கு வேறு ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செல்வி கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை செல்வி முத்தாண்டிக் குப்பத்துக்கு வந்தார். அப்போது செல்வியை மீண்டும் வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என ஆனந்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அதனை மீறி செல்வி கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தி நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிபோதையில் தகராறு செய்த பெண் போலீஸ் கைது!

ஐயோ பாவம், இந்த அபலைப் பெண்கள்!

ஆண்கள்தான் அத்துணை அக்கிரமங்களும் செய்பவர்கள். அதனால்தன் ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே ஆண்களைக் கைது செய்து சிறையிலடைத்து, தண்டனையும் கொடுத்து விடுகிறார்கள். இந்தியாவில் ஒரு ஆண் தான் பிறந்த கணத்திலேயே ஒரு கிருமினல் ஆகிறான்!

இதோ பாருங்கள் இந்த அபலைப் பெண்ணின் கதையை!!

தினமலர் செய்தி:

“சரக்கு’ போதையில் ஆட்டம் போட்ட பெண் போலீஸ் : ஓசி, “சைடு டிஷ்’க்கு சண்டையிட்டதால், “சஸ்பெண்ட்”

சென்னை : குடி போதையில் ரகளை செய்து, ஓசி, “சைடு டிஷ்’க்கு கடை ஊழியரை தாக்கிய பெண் போலீஸ்,”சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

சென்னை, மயிலாப்பூர் எலைட் குடியிருப்பில் வசித்து வருபவர் ராணி(32); திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் கான்ஸ்டபிளாக உள்ளார். திருமணமாகாத நிலையில் இவர், குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினசரி குடித்துவிட்டு, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையில் உள்ள மிக்சர் கடையில், “இலவச சைடு டிஷ்’ வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இது போல், நேற்று முன்தினம் மாலை, அளவுக்கதிகமாக மது அருந்திய ராணி, ஒரு ஆட்டோ பிடித்து, லாயிட்ஸ் சாலை சென்றார். அங்குள்ள மிக்சர் கடையில், வழக்கமான, “சைடு டிஷ்’ கேட்டார். கடை ஊழியர் நடேசன் தர மறுக்கவே, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, நடேசனின் கையை முறுக்கிய ராணி, போலீஸ் பாணியில் ஒரு உதை கொடுத்தார். இதில், நடேசன் கீழே விழுந்த போது, கையில் கிடைத்த சிப்ஸ் மற்றும் காரத்தை அள்ளி, ஆட்டோவில் போட்டுக் கொண்டு புறப்பட்டார். அப்போது, நடேசன் சத்தம் போட்டதால், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, ஆட்டோவை நிறுத்தி, ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்த போலீசாரிடம், போலீஸ் உடையில் இருந்த ராணியை ஒப்படைத்தனர்.

போலீசார், உடனடியாக ராணியை, ராயப்பேட்டை மருத்துவமனை சென்று, மது அருந்தியதற்கான சான்றிதழ் பெற்று, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பெண் போலீஸ் ஒருவர், போலீஸ் உடையில் இருக்கும் போதே, மது அருந்தி கலாட்டா செய்த விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. ராணி மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்,” சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

கடந்த 1997ம் ஆண்டு போலீசில் சேர்ந்த ராணி, திருச்சியில் பணியாற்றி வந்தார். அங்கும், பணியின் போது மது அருந்தியதால், கோவைக்கு மாற்றப்பட்டார். கோவையிலும் அதே நிலை தொடர, அங்கிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

==========================

சென்னை: சென்னையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். (செய்தி: தட்ஸ்தமிழ்)

திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ராணி (38). திருமணமாகாத இவர், மைலாப்பூர் அப்பு தெருவில் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறார்.

நேற்று முன்தினம் தலைமைச் செயலக காவல் பணியில் இருந்த ராணி மாலை 3 மணியளவில் பணி முடிந்து விடுதிக்குச் சென்றார். மாலை 6 மணிக்கு மீண்டும் இரவு பணிக்காக புறப்பட்டு வந்தவர் ஐஸ் ஹவுஸ் மார்க்கெட்டில் உள்ள `காமாட்சி ஹாட் சிப்ஸ்’ என்ற பேக்கரிக்குச் சென்றார்.

பிஸ்கட், கேக், சிப்ஸ் என வேண்டியதை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றார். இதையடுத்து அவரைத் தடுத்த கடை ஊழியரான தமிழரசன் என்பவரை ராணி தாக்கினார்.

இதையடுத்து அக்கம் பக்கம் உள்ள கடைக்காரர்கள் ராணியைப் பிடித்து ஐஸ் ஹவுஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

அப்போது ராணி குடிபோதையில் இருந்தது தெரிய வந்ததால் உடனடியாக இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணி மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். ராணியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மது அருந்தியதற்கான சான்றிதழை போலீசார் வாங்கினர்.

பின்னர் ராணி மீது குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ராணியின் செயல் குறித்து விசாரணை நடத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ராணி போதையில் ரகளை செய்வது இது புதிதல்ல. அவர் ஏற்கனவே கரூரில் வேலை பார்க்கும் போதும், அதன் பிறகு கோவையில் வேலை பார்க்கும் போதும் போதை புகாரில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதலாகி அவர் சென்னை வந்தார். சென்னையிலும் அவரது பழைய போதை பழக்க வழக்கம் தொடர்ந்தது.

மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த அவர், சமீபத்தில் தான் மீண்டும் பணியில் வந்து சேர்ந்தார் என்றார்.

ஆஃப்டர் ஆல் ஆண்பிள்ளைதானே செத்தான்!

மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

செங்கல்பட்டு : திருமணமான ஆறு மாதத்தில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த வாலிபர் தூக்குப் போட்டு இறந்தார்.

செங்கல்பட்டு காண்டிபன் வேதாசலம் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் சண்முகம்(30); தனியார் ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். மங்கலட்சுமி (21) என்ற பெண்ணை காதலித்தார். ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். தனியாக குடும்பம் நடத்தினர். திருமணத்திற்கு பின் குடும்பப் பிரச்னை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த சண்முகம் நேற்று காலை வீட்டில் தூக்குப் போட்டு இறந்தார்.

செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமலர் – பிப்ரவரி 27,2011

இதோ இன்னொரு தெய்வீக கள்ளக்காதல்!

கள்ளக்காதல் விவகாரம் : இளம் பெண் தற்கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்காதல் பிரச்னை காரணமாக இளம் பெண் தற்கொலை செய்து இறந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையத்தைச் சேர்ந்தவர் சாந்தி (27) , இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த 6 மாதங்களாக சாந்தி , அம்மம்பாளையத்தில் இருக்கும் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

அதே பகுதியில் இருக்கும் சண்முகம் என்பவருடன் சாந்திக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சாந்தியின் பெற்றோர்கள் அவரை கண்டித்தனர்.

இந்நிலையில் சாந்தி நேற்று அவர் படித்த கல்லூரிக்குச் சென்று வருவதாக சொன்னார். ஆனால் வீடு திரும்பவில்லை. தேடிப்பார்த்த போது சாந்தியும் , சண்முகமும் சென்னிமலை பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தனர். அரளி விதையை அரைத்து குடித்திருந்தனர். இருவரும் மருத்துவ‌மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சண்முகம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமலர் – பிப்ரவரி 09,2011

கள்ளக்காதலியுடன் உல்லாசம் வாலிபர் கொலை: காதலன் கைது

கொலையானதும் வாலிபன்; கைதானதும் வலிபன். உல்லாசம் யாருக்கு!!

1. இப்போது செய்திகள் (தினமலர்): நவம்பர் 28,2010.

குறிஞ்சிப்பாடி : கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை அடித்து கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

வடலூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் மனைவி அம்சவள்ளி (24). சசிகுமார் கடந்த ஆறு மாதத்துக்கு முன் இறந்தார்.அம்சவள்ளிக்கும் இறந்த கணவர் சசிகுமார் நண்பர் வானதிராயபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் வேதநாயகத்திற்கும் (28) தொடர்பு ஏற்பட்டது.இந்நிலையில் அம்சவள்ளி நெய்வேலியில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை கடையில் வேலைக்கு சேர்ந்தார்.அங்கு மேலாளராக உள்ள மும்முடிசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் மகன் பழனிவேல் (30) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பழனிவேல் அடிக்கடி அம்சவள்ளி வீட்டிற்கு சென்று வந்தார். இதனை அறிந்த வேதநாயகம், பழனிவேலை பலமுறை கண்டித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வேதநாயகம், அம்சவள்ளி வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு பழனிவேலுவை பார்த்ததும் ஆத்திரம் அடைந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். அதில் பழனிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கொலையை மறைக்க வேதநாயகமும், அம்சவள்ளியும் முடிவு செய்தனர். அதன்படி அம்சவள்ளி வடலூர் போலீசில் பழனிவேல் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியதில் வேதநாயகம் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த கிரிக்கெட் மட்டையை கைப்பற்றினர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து வேதநாயகத்தை கைது செய்தனர்.

2. அது கிடக்கட்டும். தினமலரில் இன்று வெளியான இந்த செய்தியின்கீழ் நம் மக்கள் சிந்தியுள்ள அறிவார்ந்த கருத்துக்களை (காமெண்ட்ஸ்) காணுங்கள் முதலில்:

rajkumar – sharjah,ஐக்கிய அரபு நாடுகள் 2010-11-30 04:15:15 IST

கள்ளக்காதலுக்கு துணை புரிந்த அம்சவல்லியும் தண்டிக்கப்பட வேண்டும். ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழய முடியும். இவள் போன்ற பெண்ணால்தான் சில ஆண்கள் தவறான வழிக்கு செல்கிறார்கள். கலி காலம் எப்போதுதான் மாறுமோ!!!…
—————
சிலம்பரசன் – சென்னை.,இந்தியா 2010-11-30 00:32:56 IST

ஏன்டா வேதநாயகம் அம்சவல்லி என்ன உன்னுடைய பெண்டாட்டியா? கள்ளக்காதலிதானே, ஆற்று தண்ணீர் என்றால் நாலு பேர் குடிக்கத்தான் செய்வான். நீ என்னவோ உன் வீட்டுக்கிணற்றில் தண்ணீர் எடுத்து குடிததுபோல பழனிவேல கொலை செய்துவிட்டாய்?…
—————-
ஆனந்த்ரூபன் கேரளா – mumbai,இந்தியா 2010-11-29 12:49:31 IST

வேதநாயகம் ஏன் அம்சவள்ளியை கல்யாணம் செய்து குடும்பம் நடத்த பயப்படுகிறாரோ? அல்லது Part Time Job போதும் என்று நினைகிரானா? என்ன கொடுமைடா சாமி…….
—————-
ஜோஜோ – சென்னை,இந்தியா 2010-11-29 11:41:16 IST

நாய் ஜென்மங்கள் !!!!!…
—————-
ஹபிப் – dubai,இந்தியா 2010-11-29 10:39:32 IST

ஏன் இந்த வேலை. உங்களுக்கு உப்பு தின்னா தண்ணி குடிக்கணும். அதை போல தப்பு செஞ்சால் தண்டனை அனுபவிக்கனும். கவலை வேண்டாம். ஜெயில் உள்ள பொய் அனுபவிக்கலாம். தண்டனையை சொன்னேன்…
——————
சரவணன் – சிங்கபூர்,இந்தியா 2010-11-29 05:42:27 IST

நாடு எங்கயோ போகுது இவர்கள் மட்டும் என் இப்படி இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த வரை தவறான வழியில் உறவு வைத்துக்கொள்ளும் ஆண் மற்றும் பெண் இருவரையும் சுட்டுக்கொல்ல வேண்டும். அப்பதான் நாடு உருப்புடும். மனிதர்களே முன்னேற பாருங்கள். முட்டாளாக இருக்காதீங்க….
——————
நல்லவன் – ஜெத்தாஹ்,சவுதி அரேபியா 2010-11-29 01:26:23 IST

கள்ளக்காதலால் பல குடும்பங்கள் அழிந்துள்ளன…
——————-

கள்ளக்காதலால் கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த வழக்கில், மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், ஆத்தூர் அருகில் உள்ள சிறுவாச்சியூர் சாலைஅம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. அவரது மனைவி பழனியம்மாள்(42). அதே பகுதியை சேர்ந்த பூமாலை(57). இவருக்கும் பழனியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளத்தொடர்பு, கணவன் பொன்னுசாமிக்கு தெரியவந்துள்ளது. 2008 ஜூலையில், மனைவி பழனியம்மாளை கொல்ல, அரிவாளுடன் பொன்னுசாமி துரத்தியுள்ளார். பொதுமக்கள் சமாதானப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2008 ஆக.,11ம் தேதி இரவு, பொன்னுசாமி, தன் வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த கள்ளக்காதலன் பூமாலை, பழனியம்மாள் இருவரும் சேர்ந்து, இரும்பு கம்பி மற்றும் கற்களால் பொன்னுசாமியின் தலை, மர்ம உறுப்பு உள்ளிட்ட இடங்களில் நசுக்கியுள்ளனர். இதனால், பொன்னுசாமி உயிரிழந்துள்ளார்.

பொன்னுசாமியின் பிணத்தை இருவரும் சாக்கு மூட்டையில் கட்டி, குப்பையில் வீசினர். பின் நடந்த சம்பவத்தை, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி சீதா(57) என்பவரிடம் கூறியுள்ளனர். அதை கேட்ட சீதா, “குப்பை தொட்டியில் வீசினால் போலீஸார் கண்டுபிடித்து விடுவர். குழிதோண்டி புதைத்துவிடுங்கள்’ என, யோசனை கூறியுள்ளார்.

அதனால், இருவரும் மீண்டும் குப்பை தொட்டியில் வீசப்பட்ட பொன்னுசாமியின் பிணத்தை எடுத்து வந்து, பூமாலைக்கு சொந்தமான நிலத்தில் புதைத்தனர். இந்த தகவல் தலைவாசல் போலீஸாருக்கு கிடைத்து. பொன்னுசாமியின் உடலை மீட்டு, பூமாலை, பழனியம்மாள் மற்றும் சீதா ஆகியோரை கைது செய்தனர்.இவ்வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராகவன், கொலை செய்த குற்றத்துக்காக பழனியம்மாள் மற்றும் பூமாலைக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சடலத்தை மறைக்க முயன்ற குற்றத்துக்கு பழனியம்மாள், பூமாலை, சீதா ஆகிய மூவருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை மற்றும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

செய்தி: தினமலர் : பிப்ரவரி 05,2011.