தொகுப்பு

Posts Tagged ‘கொலை’

கூடு விட்டுக் கூடு பாயும் சுந்தரி!

இளஞ்செம்பூர் அருகே வீரம்பலில் முதல் கணவரை பிரிந்த நிலையில், இரண்டாவதாக மணமுடித்த கணவர் ஓட்டம் பிடித்ததால், கர்ப்பிணி மனைவி ஐகோர்ட் உத்தரவுபடி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இளஞ்செம்பூர் அருகே வீரம்பலை சேர்ந்த முத்துக்குமாரி (23) அதே ஊரை சேர்ந்த ஞானராஜ் என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். குழுந்தை ஒன்றும் பிறந்தது. வேலைக்காக ஞானராஜ் வெளிநாட்டுக்கு சென்ற நிலையில், முத்துகுமாரிக்கும் அதே ஊரை சேர்ந்த இருதயராஜுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இதற்கு முத்துக்குமாரி வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்காமல், இருவரையும் கணவன் மனைவியாக சேர்த்து, இருதயராஜிடம் 50 ரூபாய் பத்திரத்தில் , முத்துகுமாரியை பிரியமாட்டேன் என எழுதி வாங்கி கொண்டு, சென்னைக்கு அனுப்பி வைத்தனர். (அது சரி ஐயா, அந்த முதல் கணவன் கதி என்ன? சட்டப்படி விவாக ரத்து செய்யாமல் இன்னொருவனுடன் இவள் எப்படி இருக்கலாம்? இதையே அந்த முதல் கணவன் செய்திருந்தால் உடனே அவனை கைது செய்திருப்பார்களே! இப்போது தெரிகிறதா இந்திய சட்டங்களின் ஒருதலைப் பட்சம்!!!)

ஐந்து மாதங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த இருதயராஜ், முத்துக்குமாரியை கர்ப்பிணியாக்கி விட்டு தலைமறைவானார். தலைமறைவான இருதயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ,மதுரை ஐகோர்ட் கிளையில் முத்துக்குமாரியின் தந்தை ஞானஒளிவு மனு செய்தார். அதன்படி தலைமறைவான இருதயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ,இளஞ்செம்பூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

செய்தி: தினமலர் : ஜனவரி 11,2011

அவள் இருந்தாலும் சிறை, இறந்தாலும் சிறை – அவனுக்கு!

இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளித்து பெரம்பலூர் முதன்மை அமர்வு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் செந்தூரைச் சேர்ந்தவர் வெள்ளமுத்து. இவரது பேத்தி வேம்பு. இதே பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சிலம்பரசன். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

ஆனால் திடீர் என்று சிலம்பரசன் வேம்புவை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த வேம்பு கடந்த 11.06.2006 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் பெரம்பலூர் முதன்மை அமர்வு கோர்ட் தீர்ப்பளித்தது. சிலம்பரசனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் அளித்து நீதிபதி தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.

செய்தி: தினமலர் : ஜனவரி 19,2011

ஆனால், இதே போல் அந்த ஆண் தற்கொலை செய்து கொண்டிருந்தால்? ஒன்றும் ஆகியிருக்காது; அது செய்திப் பத்திரிக்கையில் கூட இடம் பெற்றிருக்காது. ஏனெனில் இன்றைய சமுதாயத்தில் ஆணினம் தேவையற்றது, காயடிக்கப்பட்ட காளைமாடுகள் போல்!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைகொல்ல முயன்ற பெண் கைது

தூத்துக்குடி:தூத்துக்குடியில், கள்ளக்காதலனோடு சேர்ந்து, கணவர் முகத்தை தலையணையால் அழுத்தி, கொல்ல முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி, தாளமுத்துநகரை அடுத்த அய்யர்விளையைச் சேர்ந்தவர் நடராஜன்(49); மளிகை கடை வியாபாரி. இவரது மனைவி பால்கனி(40). இவர்களுக்கு குழந்தையில்லை. இந்நிலையில், பால்கனிக்கும், உறவினர் பழனிக்கும்(43), கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதை, நடராஜன் கண்டித்தார்.நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில், பால்கனி வீட்டிற்கு வந்த பழனி, அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, தூக்கத்தில் இருந்து திடீரென கண் விழித்த நடராஜன், அதை பார்த்து விட்டார். அதனால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.உடனே பால்கனியும், பழனியும் சேர்ந்து, தலையணையை எடுத்து, நடராஜன் முகத்தில் அழுத்தினர். அதில், அவர் மூச்சுத்திணறி இறந்தது போல நடித்ததால், அவர் இறந்துவிட்டதாக கருதி, இருவரும் வீட்டை விட்டுவெளியேறினர்.சிறிது நேரம் கழித்து எழுந்த நடராஜன், நடந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அவரை கொலை செய்ய முயன்ற மனைவி பால்கனி, கள்ளக்காதலன் பழனியை போலீசார் கைது செய்தனர்.

ஜனவரி 07,2011

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=160998

ஆகையினால் திருமணம் செய்வீர் ஆண் மக்களே!

கணவனை உருட்டுகட்டையால் தாக்கி கொன்ற மனைவி கைது!

பல்லடம்: கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன் (38); கூலி தொழிலாளி. இவரது மனைவி கருப்பாத்தாள் (35). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இருவருக்கும் இடையே குடும்ப தகராறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசம் அடைந்த கருப்பாத்தாள், அருகில் கிடந்த உருட்டு கட்டையால் கணவனை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த ராஜனுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது; மேல் சிகிச்சைக்காக நள்ளிரவு 12.00 மணிக்கு கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனை செல்லும் வழியில் ராஜன் உயிரிழந்தார். கருப்பாத்தாளை, பல்லடம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

செய்தி: தினமலர்

எட்டு வயது மகள் கொலை : தாயார், கள்ளக்காதலன் கைது

கள்ள தொடர்பு அம்பலமாகி விடுமோ என்ற பயத்தில், எட்டு வயது மகளை அணைக்கட்டில் தள்ளி கொலை செய்த தாயாரும், கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு அருகே தலகட்டபுராவில் வசித்து வந்த நாகராஜ் – சரிதா தம்பதிக்கு, தனுஸ்ரீ (8)என்ற மகளும், மூன்று வயதில் மகனும் இருந்தனர். இதற்கிடையில், தாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் சிவுவுடன், சரிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. கணவனுக்கு தெரியாமல் சிவுவுடன் செல்ல நினைத்த அவர், தன்னுடன் மகள் தனுஸ்ரீயையும் அழைத்து சென்றார். ஆனால், தனுஸ்ரீயை அழைத்து வந்தது சிவுவுக்கு பிடிக்கவில்லை. நம் உறவை தெரிந்து கொண்ட தனுஸ்ரீ, ஊர் திரும்பினால் அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுவார் என்று கருதிய சரிதா, மகளை கொல்ல முடிவு செய்தார். அதன்படி, இகலூர் அணைக்கட்டுக்கு சுற்றுலா செல்வதாக கூறி அழைத்து சென்றவர், தனுஸ்ரீயை அணைக்கட்டிலிருந்து கீழே தள்ளி, காதலனுடன் சென்று விட்டார்.

இதற்கிடையில், தன் மனைவியையும், மகளையும் காணவில்லை என, சரிதா கணவர் நாகராஜ், போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில், சரிதாவுக்கும், சிவுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பு தெரியவந்தது. சிவுவும் ஊரில் இல்லாததால், போலீசின் சந்தேகம் ஊர்ஜிதமானது. மொபைல் போன் தொடர்புகளை, போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். அவர்கள் இருவரும், ஷிமோகாவில் தங்கியிருப்பது தெரியவந்தது. லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த அவர்களை கைது செய்து விசாரித்த போது, தனுஸ்ரீயை பற்றி தனக்கு எதுவும் தெரியாது. தன் கணவர் தான் அவரை கொன்றிருக்கலாம் என்று உளறி வைக்க, போலீசார், “முறைப்படி’ விசாரித்தனர். இதையடுத்து, தனுஸ்ரீயை அணைக்கட்டிலிருந்து தள்ளி கொலை செய்ததை, சரிதா ஒப்புக்கொண்டார். தர்மஸ்தலாவுக்கு சென்று தாலியை விற்று புதிய தாலி வாங்கி, சிவுவை திருமணம் செய்து கொண்டதையும், ஷிமோகா வந்து தங்கியதையும் கூறினார். அணைக்கட்டில் தனுஸ்ரீயை தள்ளி கொலை செய்த பகுதியை பார்வையிட்ட போலீசார், அவரது உடலை தேடினர். சிம்சா நதியில் அடித்து செல்லப்பட்ட தனுஸ்ரீயின் அழுகிய உடலை, சென்னபட்டணா அருகில் இருபாறைகளுக்கிடையே அவர் அணிந்திருந்த பள்ளி சீருடையுடன் கண்டெடுத்தனர். தலகட்டபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி தினமலர்.

2 கணவர்களை விவாகரத்து செய்த அபலைப் பெண் 3-வது கணவரை கொன்று கால்வாயில் வீசினாள்

ஐயா, இந்தியப் பெண்களிடன் உஷாராக இருங்க; போட்டுத் தள்ளிடுவாங்க. பீகார் எம்.எல்.ஏ கதியை பார்த்திருப்பீங்க! அwத கொலைகார பொம்பளை படத்தை பாத்திருப்பீங்க; அன்த எம்.எல்.ஏ படத்தையும் பாத்திருப்பீங்க; அவிங்களை இவரு “கற்பழி’ச்சாராம்!

பயங்கரம். பேசாம ஆப்பிரிக்காவில போய் கல்யாணம் கட்டிக்கலாம்! அவிங்க பரவாயில்லை!!

சரி, இந்த புதுமைப் பெண் செய்தியை படிச்சு நொந்து போங்க!

———————
புதுடெல்லி, ஜன.9- 2011. செய்தி: மாலை மலர்

டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்த பெண் ஷேனாஸ் (வயது 35). இவர் திருமணமான சில வருடங்களிலேயே கணவரை விவாகரத்து செய்தாள்.

அதன்பறகு 2-வது திருமணம் செய்தாள். அவருடனும் சில வருடங்களே குடும்பம் நடத்தி அவரையும் விவாகரத்து செய்தாள். 2 கணவர்கள் மூலம் அவளுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகளுக்கு 14 வயதும், 3-வது மகளுக்கு 5 வயதும் ஆகிறது. இந்த நிலையில் 35 வயதான ஷேனாஸ் தன்னை விட 6 வயது குறைந்த 29 வயதான ராகேஷ்குப்தா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் கடந்த 3 வருடங்களாக கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர்.இதற்கிடையே ராகேஷ் குப்தாவை கடந்த அக்டோபர் மாதம் திடீர் என்று காணவில்லை. இதுபற்றி ஷேனாஸ் போலீசில் புகார் செய்தாள். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

ஷேனாசுக்கு சகீல், சாகித் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எந்த துப்பும் கிடைக்கவில்லை. இவர்கள் ஷேனாஸ் குடியிருக்கும் பகுதியிலேயே வசித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.

இதில் சாகித் பழைய குற்றவாளி என தெரியவந்தது. சந்தேகப்பட்டு அவனது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது சாகித்தின் வீட்டு “செப்டிக் டேங்கில் இருந்து துர்நாற்றம் அடித்தது. சந்தேகப்பட்டு பார்த்த போது அங்கே ஒரு பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அது காணாமல் போன ராகேஷ் குப்தா என தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ஷேனாசை பிடித்து விசாரித்தபோது அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சம்பவத்தன்று ராகேஷ் குப்தாவிடம் ஷேனாஸ் பணம் கேட்டாள். ஆனால் ராகேஷ் குப்தா டெய்லர் தொழில் பார்த்து வந்ததால் ஷேனாஸ் கேட்ட தொகையை கொடுக்க முடியவில்லை.

இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது கிரிக்கெட் மட்டையால் ஷேனாஸ், ராகேஷ்குப்தாவை தலையில் அடித்தாள். இதில் அவர் செத்துப் போனார். பிணத்தை 24 மணி நேரம் தனது வீட்டிலேயே வைத்து இருந்தாள். மறுநாள் சகோதரர்கள் மூலம் பிணத்தை அங்கிருந்து எடுத்துச் சென்று செப்டிக் டேங்குக்குள் போட்டு விட்டனர்.

கொலையை மூடி மறைக்க ராகேஷ்குப்தா காணாமல் போய்விட்டதாக ஷேனாஸ் போலீசில் புகார் செய்து நாடகமாடினாள். ஆனால் போலீசார் துப்பு துலக்கி ஷேனாசையும், அவளது சகோதரர் சகீல் ஆகியோரை கைது செய்தனர். சாகித் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.

———

இந்த செய்திக்கு வ்சகர்ர்கள் எழுதிய்யுள்ள கமெண்டுகளைப் பார்ப்போம்:

Sunday, January 09,2011 04:09 PM, இரா குமரன் said:

காந்தி கனவு கண்ட நாட்டில் இப்படியும் ஒரு பெண். பெண்களுக்கு 33 % வேண்டும் என்று சட்டம் வேறு இந்த நாட்டில் கேடின்றனர்.

Sunday, January 09,2011 03:58 PM, mysha said:

எப்படிதான் மனசு வந்துச்சோ இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் காலம் கலி காலம் ஆகிபோச்சுங்கோ

Sunday, January 09,2011 03:29 PM, நல்லவன் said:

அடங்காபிடறியே……….

Sunday, January 09,2011 02:54 PM, MANIKANDAN said:

அவல துக்குள போட வேண்டும்

Sunday, January 09,2011 01:51 PM, நாஞ்சில் நசீர் said:
இவளது வீட்டில் செப்டிக் டேங் கால்வாயாக ஓடுகிறது..! குளிப்பதற்கு இறங்கி இருப்பான்.. பாவம் கால் வழுக்கி விழுந்து விட்டான் என்று கதையை முடிக்க போகிறார்கள்..!

ஆண் பாவம் பொல்லாதுங்க!

ஆண்களுக்கு எதிராக இழக்கப்படும் சட்ட மீறல்கள், போலியாக கொடுக்கப்படும் வரதட்சணை புகார்கள், மற்றும் பல அவமதிப்புகளுக்கு எதிராக ஆண்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலக ஆண்கள் தினமான நவம்பர் 19, 2010 அன்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மெமோரியல் ஹால் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Men in distress

நன்றி: தினமலர்

விமானத்தில் குழந்தை பெற்று கழிவறை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற பெண்

Gulf Air babyமணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு வந்த கல்ப் ஏர் வி்மானத்தில் பயணித்த ஒரு பெண், விமான கழிப்பறையில் வைத்து குழந்தை பெற்று, அதை காகிதத்தில் சுற்றி கழிவறை குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


(ஆனால் நம் நாட்டில் கோர்ட்டுகள் அனைத்திலும் பெண்கள் வசம் தான் குழந்தைகளின் கஸ்டடியை கொடுப்பார்கள். ஏனெனில் ஆண்கள் குழந்தைப் பாசமே இல்லாதவர்களாம்; பெண்கள் மட்டும்தான் குழந்தைகளை ஒன்றுமே செய்யமாட்டார்களாம்! என்ன கஒடுமையடா இது!!)

விமானத்தை சுத்தம் செய்ய வந்த பணியாளர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஈவு இரக்கமற்ற அந்தப் பெண்ணைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அந்த விமானம் சவூதி அரேபியாவிலிருந்து மணிலாவுக்கு வந்தது. விமானம் வந்து சேர்ந்து அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் விமான துப்புறவாளர்கள் உள்ளே சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அந்த விமானம் பஹ்ரைன் செல்லத் தயாரானது. அப்போதுதான் விமானக் கழிப்பறையில் குழந்தை காகிதத்தால் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அதை மீட்டனர்.

பின்னர் விமான நிலைய டாக்டர்கள் விரைந்து வந்து குழந்தையை சோதித்துப் பார்த்தனர். அது நல்ல நிலையில் இருப்பதாக அறிவித்தனர். இதையடுத்து கல்ப் ஏர் நிறுவனத்தினர் கூடி அக்குழந்தைக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் என பெயரிட்டனர். பின்னர் நினோய் அகினோ மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அக்குழந்தையின் தாயார் யார், எந்த நாட்டவர் என்பது தெரியவில்லை. அவரைப் பிடிக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அந்தப் பெண் எப்படி கழிப்பறைக்குப் போய் குழந்தை பெற்றார், எந்தவித சுவடும் இல்லாமல் எப்படி வந்து இருக்கையில் அமர்ந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் குழந்தை பெற்றபோது எந்தவித சப்தத்தையும் சக பயணிகள் கேட்கவில்லையாம்.

இக்குழந்தை குறித்து டாக்டர் மரியா தெரசா அகோரஸ் கூறுகையில், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன், சரியான எடையுடன் உள்ளது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. விமான நிலைய ஊழியர்களே சேர்ந்து பெயரும் சூட்டியுள்ளனர் என்றார் புன்னகையுடன். அக்குழந்தைக்கு விமான நிலைய ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு புத்தாடைகளையும் வாங்கிக் குவித்து விட்டனர். மேலும் கிலுகிலுப்பை உள்ளிட்ட பொம்மைகளும் வாங்கி குழந்தையை கண்டு களித்து வருகின்றனராம்.

கடந்த ஜூலை மாதம் இதேபோல இந்தியப் பெண் ஒருவர் விமானத்தில் குழந்தை பெற்று அதை விமான டாய்லெட்டில் போட்டு கொல்ல முயற்சித்துப் பிடிபட்டார் என்பது நினைவிருக்கலாம்.

செய்தி; தட்ஸ் தமிழ்

மேல் விவரங்களுக்கு:

1. http://www.abs-cbnnews.com/lifestyle/09/14/10/netizens-mad-want-adopt-gulf-air-baby
2. Indian woman tries to flush newborn down plane toilet. Infant found stuck in the toilet after the plane landed in Amritsar, northern India, and was rushed to hospital.

வாசகர் கருத்துக்கள்:

#
20 October 2010 17:18
This is repulsive. How can people do that? This woman deserves to be flushed down the toilet of an airplane and then free-fall her way to an ocean… and splat. Perhaps then she can have an idea of what she tried to do
#
Ipstac 13 September 2010 10:04
Strange! Thought that airlines would not allow women more than seven months pregnant to fly. Wonder how did this woman manage to get on board.

இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை : கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?

செய்தி: தினமலர்

ராமநாதபுரம் : மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளக்காதலர்களின் மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு(24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம்(7) அஜிராபானு(5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

வேலைக்காக முத்துச்சாமி மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன், தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், நேற்று அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்.

கொலை சம்பவத்தில், கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவதால், இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கதறி அழுத காதல் கணவர் :

மனைவி, குழந்தைகள் இறந்த தகவலை மலேசியாவில் உள்ள முத்துச்சாமிக்கு அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்ட அவர், போனில் கதறி அழுதுள்ளார். “”இறந்தவர்களை பார்க்கும் இடத்தில் கூட நான் இல்லையே,” என, கதறியுள்ளார்.

மைனர் காதல் மங்கியது :

தனது 16வது வயதில் வேறுபிரிவை சேர்ந்த முத்துச்சாமியை ஆதிலா பானு காதலித்ததற்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மறைந்த மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சீனிக்கட்டியின் கார் டிரைவராக முத்துச்சாமி பணியாற்றினார். சீனிகட்டியின் தாய் பசீர் அம்மாள் இவர்களது திருமணத்தை நடத்திவைத்தார். மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்தது. கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

——-

Update: நவம்பர் 13, 2010:

இறந்த பெண்ணின் மொபைலில் நிரம்பி வழிந்த எஸ்.எம்.எஸ்.,கள் : “க்ளூ’ கிடைப்பதில் பின்னடைவு

ராமநாதபுரம் : குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்.,கள் குவிந்துள்ளதால், “க்ளூ’ கிடைப்பதில் பின்னடைவு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், குப்பான்வலசையை சேர்ந்த முத்துச்சாமி, சாத்தான்குளம் ஆதிலாபானு(24) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முத்துச்சாமி மாதம் மாறிய நிலையில், இவர்களுக்கு முகமது அஸ்லம்(7), அஜிராபானு(5) என்ற குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக முத்துச்சாமி, மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால், தம்பதியினரிடையே பிரச்னை ஏற்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன், தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ஆதிலாபானு, ராமநாதபுரம் பாரதிநகரில் குடியேறினார். கடந்த நவ., 8ல் குழந்தைகளுடன் மாயமான பானு, மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. “இந்த கொலை சம்பவத்தில் கள்ளக்காதலர்கள் இடையேயான மோதல் ஏற்பட்டிருக்கலாம்’ என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு நான்கு பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில், இறந்த பெண்ணின் மொபைல் போனை சோதனை செய்தபோது, அவருக்கு பலர் எஸ்.எம்.எஸ்., அனுப்பியது தெரியவந்தது. குறிப்பிட்ட நபர் ஒருவர் மட்டும் சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பி உள்ளார். இதனால், அந்த மொபைலின் “இன் பாக்ஸ்’ நிரம்பிவழிந்தது. போலீசார் பெரிதும் எதிர்பார்த்த மொபைல் போனில், உரிய “க்ளூ’ கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதும், ஆதிலாபானுவுக்கு வந்த மொபைல் அழைப்புகள் குறித்த விசாரணையில் நம்பிக்கை கிடைத்திருப்பதாக தெரிகிறது.

அரசு வேலை, ஓய்வூதியத்திற்காக தாய், மகளை கொன்ற பெண்மணி

சிவகங்கை : அரசு வேலை, ஓய்வூதியத்திற்காக தாய், மகளை கொன்ற பெண் உட்பட ஐந்து பேரை, சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே இளங்குடி கண்மாயில், கடந்த 27ம் தேதி, எரிந்த நிலையில் இரு பெண் உடல்கள் கிடந்தன. நாச்சியாபுரம் போலீசார் விசாரித்தனர். இறந்தவர்கள் மதுரை தனியாமங்கலம் அந்தோணி மனைவி ராமதிலகம்(40) மகள் விஜயலட்சுமி (28) என தெரிந்தது.

கொலைக்கான காரணம்:

மேலூர் அருகே கீழையூரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மாரிமுத்து. இவருக்கு மாரியம்மாள் (40) சீதாலட்சுமி (35) என இரு மனைவி. பணியின் போது இறந்ததால், வாரிசு வேலை பெறுவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சீதாலட்சுமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இறந்தார்.வழக்கை அவரது தாய் ராமதிலகம், சகோதரி விஜயலட்சுமி நடத்தினர்.

இதில் ஆத்திரமுற்ற மாரியம்மாள் கொல்ல திட்டமிட்டார். இதன்படி, அவர்களுடைய வக்கீல் பேசுவது போல், ராமதிலகத்தை போனில் தொடர்பு கொண்டனர். கடந்த 27ம் தேதி காலை மேலூர் கோர்ட்டிற்கு வருமாறு கூறினர். ராமதிலகம், விஜயலட்சுமி, அவரது நான்கு மாத ஆண் குழந்தையுடன் வந்தனர்.அங்கு இருந்த மாரியம்மாள், உறவினர்கள் அழகர்சாமி (30) பாண்டித்துரை (24) முருகேசன் (33) ஆகியோர் சமரசம் பேச வருமாறு கூறி, இருவரையும் சுமோ காரில் (டி.என்.37-எம்:4525) அழைத்து சென்றனர். திருப்புத்தூர் செல்லும் வழியில் காரிலேயே இருவரையும், கழுத்தை நெரித்து கொன்றனர். திருப்புத்தூரில் பெட்ரோல் வாங்கி, கண்மாய்க்குள் உடல்களை எரித்தனர். விஜயலட்சுமியின் குழந்தையை மதுரை பாண்டி கோவிலில் வைத்து விட்டு தப்பினர்.

பிடிபட்டது எப்படி?

இன்ஸ்பெக்டர்கள் சேது, சாந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மனைவி, மகளை காணவில்லை என கீழையூரைச் சேர்ந்த அந்தோணி, போலீசில் புகார் செய்தது, விசாரணையில் தெரிந்தது. அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர், “கொலையான இருவரையும் மேலூர் கோர்ட்டில் பார்த்தேன்’ என தெரிவித்தார். இதை வைத்து கார் டிரைவர் அருள்மதியை கைது செய்தனர். அவர் தகவல்படி, மாரியம்மாள் உட்பட மற்ற நான்கு பேரையும் கைது செய்தனர்.

பாராட்டு:விசாரணையில் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி., அமல்ராஜ், ராஜசேகரன் எஸ்.பி., வெகுமதி வழங்கினார். கூடுதல் எஸ்.பி., கண்ணன், டி.எஸ்.பி.,க்கள் முருகேசன், பத்மாவதி உடனிருந்தனர்.

செய்தி: தினமலர்