தொகுப்பு

Archive for ஓகஸ்ட், 2009

கோவையில் குடும்பப் பாதுகாப்பு இயக்கப் பொதுக்கூட்டம்

“இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்” (SAVE INDIAN FAMILY FOUNDATION) வரும் சனிக்கிழமை வெள்ளிக்கிழமை அன்று (செப்டம்பர் (5) 4-ம் தேதி, 2009) கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பும், ஒரு பொதுக்கூட்டமும் நிகழ்த்த இருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவராலேயே “சட்டபூர்வ பயங்கரவாதம்” (Legal terrorism) என்று வர்ணிக்கப்பட்ட IPC 498A சட்டப்பிரிவு (வரதட்சணை கொடுமை சட்டம்), மற்றும் ஆண்களை மட்டும் குற்றவாளியாகக் கருதும் குடும்ப வன்முறைச் சட்டம் (D.V.Act) போன்ற பொய் வழக்குச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவதற்காகவும் மற்றும் திருமணத்தை எதிர் நோக்கியிருப்போருக்கும் இதுபோன்ற சட்டங்களைப் பற்றிய புரிதலை உணர்த்துவதற்காகவும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

நேரம்: காலை 11 மணி.
இடம்: பிரஸ் கிளப்,
5, மாநகராட்சி வணிக வளாகம்,
தண்டு மாரியம்மன் கோயில் எதிரில், அவிநாசி சாலை,
கோயம்புத்தூர் 641018

தொடர்புக்கு — 9790019658

அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இன்றைக்கு இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் அனைவரும் இதைப் பற்றிய பொது அறிவு இல்லாமல் இருந்ததால்தான் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் திருமணத்தின் போது இப்படி ஆகுமென்றா எதிர் பார்த்தார்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதற்காக அத்தகைய பொய்க் கேசுகள் போடாமல் இருக்கிறார்களா என்ன? நம் நாட்டில் ஆண்டுக்கு 76,000 பொய்க் கேசுகள் (498A) போடப்பட்டு ஒரு பாவமும் அறியாத வயதான தாய்மார்களும் இளம் பெண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் 2% கேசுகள்தான் நிரூபிக்கப்படுகின்றன.

சட்டத்தில் ஓட்டை இருக்கலாம்; ஆனால் ஓட்டையே சட்டமானால்?

இந்த அறிவிப்பை பாதிக்கப்பட்டோருக்கும் தங்கள் நண்பர்களுக்கும் பரவலாக அனுப்பி வையுங்கள். நம்மாலான பொதுத் தொண்டு!

மிஸ்டு காலுக்கு மயங்காதே!

ஆண்டிப்பட்டி,ஆக.28- 2008. தினத்தந்தி

செல்போனில் `மிஸ்டு கால்’ கொடுத்து அழைத்ததால் ஏற்பட்ட காதலில் சிக்கிய வாலிபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

மிஸ்டுகால் காதல்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சி சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் அறிவழகன்(வயது22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அடிக்கடி செல் போனில் `மிஸ்டு கால்’ வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண்ணில் அறிவழகன் பேசத்தொடங்கினார். எதிர்முனையில் ஒரு பெண் பேசியதை தொடர்ந்து அடிக்கடி இருவரும் செல்போனில் பேசினார்கள்.

தொடர்ந்து `மிஸ்டு கால்’ மூலம் பேசியதில் அந்த பெண்ணுக்கும் அறிவழகனுக்கும் காதல் மலர்ந்தது. அப்போது தான் அந்த பெண் வேலூர் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள அப்துல்லா புரத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகள் உஷா(16) என்பது தெரிய வந்தது. பின்னர் இருவரும் சென்னையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் காதலனை சந்திக்க சென்னைக்கு சென்ற உஷாவை வாலிபர் அறிவழகன் தனது சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு கடத்தி வந்து விட்டதாக கூறப்படுகிறது. மகளை காணாததால் தேடிய தனபால் மகள் ஆண்டிப் பட்டியில் இருப் பதை அறிந்து இங்கு வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் டி.சுப்புலாபுரத்தில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அறிவழகனையும், உஷாவையும் போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுந்தரய்யா குற்றம் சாட்டப்பட்ட அறிவழகனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இளம் பெண் உஷாவை மருத்துவ பரிசோதனை செய்து அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் அவரை அரசு பெண்கள் காப்பகத்தில் வைக்கவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தி இருக்கிறார்.

பிரிவுகள்:கள்ளக்காதல் குறிச்சொற்கள்:, , , , ,

கள்ளக்காதலில் உள்ள ரிஸ்குகள்

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 57,500 மணமான ஆண்கள் குடும்பச் சச்சரவின் காரணமாக, அதாவது மனைவியின் நடத்தைகளின் காரணமாக, தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள். ஆனால் ஆண்டொன்றுக்கு மணமான பெண்கள் தற்கொலை அளவு 30,000 தான். இந்தத் தரவு இந்திய அரசே வெளியிட்டது (National Crime Records Bureau).

ஆனால் தாங்கள் கொள்ளை அடிப்பதற்காக இந்த உண்மையை மறைத்து ஏதோ இன்னமும் இந்தியாவில் மணமான பெண்கள் வரதட்சணைக்காக அன்றாடம் கொலை செய்யப்படுவது போன்ற பிரமையை உண்டாக்கி அந்தப் புனைசுருட்டை நாளிதழகள் மற்றும் ஊடகங்கள் மூலம் பரப்பி வருகிறார்கள் ஒரு கூட்டத்தினர். அவர்கள் ஏன் அப்படிச் செய்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் ராக்கெட் தொழில்நுட்பம் பயில வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் “vested interests” என்று அழைக்கப்படும் அதிசுயநல ஆர்வம்தான்!

தேசிய பெண்கள் வாரியம் (National Commission for Women) என்னும் தனி அமைப்பு உள்ளது. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிலவுக்கு பல கோடி ரூபாய்களை அரசு ஒதுக்குகிறது. தவிர ஐக்கிய நாடுகள் சபை (UNIFEM) மூலம் பல கோடி டாலர்கள் கொட்டுகின்றன. மேலும் பல வக்கீல்களுக்கு இத்தகைய கேசுகள் மூலம் ஏராளமான வருமானம் கிட்டுகிறது. தவிர All India Democratic Women Association போன்ற அரசியல் கட்சி சார்ந்த அமைப்புகள் பல பெண்கள் பெயரைச் சொல்லி பகல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன. வரதட்சணைக் கொடுமைப் பிரச்னை இன்னும் இருக்கிறது என்று தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்தால் தானே இவர்களின் உண்டியல் நிரம்பிக் கொண்டிருக்கும்! அதனால் இந்த மேட்டுக்குடி ரவிக்-டை-லிப்ஸ்டிக் பெண்மணிகள் “ஐயகோ, நம் நாட்டில் இன்னமும் பல கோடி பெண்கள் ஆண்களாலும் அவர்களுடயை பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளாலும் வரதட்சணைக் கொடுமையால் எரிக்கப் படுகிறார்களே, அவர்களைத் தண்டிக்க இன்னமும் கடுமையான சட்டங்கள் தேவையாயிற்றே” என்று கோஷ்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய சட்டங்களில் ஒன்றுதான் இபிகோ 304-B என்னும் “வரதட்சணைச் சாவு” சட்டம். அதாவது சாதாரண மனிதர்கள் செத்தால் சாதாரணச் சட்டம்; மணமாகி 7 வருடங்களுக்குள் மனைவி செத்தால் அது சிறப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மனைவியின் பெற்றோரோ உறவினர்களோ, அந்த மனைவியின் சாவுக்கு வரதட்சணைதான் காரணம் என்று சொன்னால் பொதும், as an afterthought. யாதொரு சாட்சியமோ, நிரூபணமோ தேவையில்லை. மற்ற எல்லாவித வழக்குகளுக்கும் பொருந்தும் Evidence Act இந்தச் சட்டத்திற்குப் பொருந்தாது. எவ்வித தடயமோ, சாட்சியமோ, ஆதாரமோ தேவையில்லாமல் விசாரணையுமில்லால் அந்த கணவனையும் அவனது பெற்றோரையும் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை போட்டுத் தள்ளி விடுவார்கள் அதற்கு இந்தச் சட்டம் வழி செய்கிறது. அதற்குத் தேவை அந்த மனைவி இறந்து போன பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோரோ, அல்லது ஒன்றுவிட்ட மாமனின் மைத்துனன் மகளோ, “அவள் வரத்ட்சணைக் கொடுமையால்தான் இறந்தாள் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று புகார் கொடுத்தால் போதும்!

சாதாரண சொத்து விவரம் வெளியிடுவதற்கே அது தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்று பயப்படுவதாகச் சொல்லி அந்த விவரங்களை வெளியிடத் தயங்கும் நீதிபதிகள், இந்த 304-B, 498A சட்டங்கள் எல்லாவித விதிவிலக்குகளும் செய்யப்பட்டு தவறாகப் பயன்படுத்துவதற்கென்றே கட்டமைக்கப்பட்டுள்ளதை ஏன் மாற்றச் சொல்லக்கூடாது!

அதிருக்கட்டும், கள்ளக் காதல்கள் பெருகிவிட்ட தற்காலத்தில் கள்ளக் காதலனுடன் “உல்லாசமாக” இருக்கும் வேளையில் அல்லது அவனுடன் ஏற்படும் பிணக்கினால் இறந்தால் எப்படி வரதட்சனை வழக்கு போடுவது? பிரச்னைதான். ஆனால் சொல்ல முடியாது, இந்தச் சட்டங்கள் கள்ளக் காதலனுக்கும் பொருந்தும்படியான மாற்றங்கள் வந்தாலும் வரும்.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:

ஸ்டவ்’ கசிந்து தீப்பிடித்ததால் கள்ளக்காதலன் வீட்டில் சமையல் செய்த பெண் கருகி சாவு

அம்பத்தூர், ஆக.26- 2009. செய்தி – தினத்தந்தி

கள்ளக் காதலன் வீட்டில் சமையல் செய்தபோது `ஸ்டவ்’ கசிந்து தீப்பிடித்ததால் பெண் கருகி செத்தாள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொளத்தூர் பொன்னியம்மன்மேடு லட்சுமியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணு. இவர் துணிப்பின்னல் (எம்பிராய்டரி) வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பாரதி (வயது 35). சித்தாளாக வேலை பார்த்து வந்தாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

பாரதி வேலை பார்த்த இடத்தில் மேஸ்திரியாக இருந்தவர் ரவி (42). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இவர் அம்பத்தூர் சூரப்பேடு கிராமத்தில் வசித்து வருகிறார்.

கடந்த 2 வருடங்களாக ரவிக்கும், பாரதிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. கொளத்தூர் அம்பேத்கார் நகர் 3-வது தெருவில் தனியாக வீடெடுத்து பாரதியுடன், ரவி குடும்பம் நடத்தி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் அங்கு சென்றனர். அங்கு தங்கி இருந்து மது அருந்தினார்கள். பின்னர் சமையல் செய்தபோது `ஸ்டவ்’ கசிந்து வீட்டில் தீப்பிடித்தது.

இதில் பாரதி தீக்காயம் அடைந்தாள். அவளை காப்பாற்ற சென்ற ரவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. கருகிய நிலையில் பாரதி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதி பரிதாபமாகச் செத்தாள்.

இது குறித்து கொளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஓடிப்போன மனைவியின் கைச்சிலவுக்காக கிட்னியை விற்கும் கணவன்!

சினிமாவைப் பார்த்து லவ் பண்ணி, கைக்காசெல்லாம் காதலிக்காக சிலவு செய்து ஒருபாடாக அவளைத் திருமணம் செய்துகொண்டு விடுகிறீர்கள். “ஆகா, என் மனத்தைக் கவர்ந்த காரிகையையே மணம் புரிந்து கொண்டேன், எனக்கு நிகர் இப்பாரில் யார் உளர்” என்று இறுமாந்து நிற்கிறீர்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியின் காலக்கெடு ஓரிரு மாதங்களே. காதல் மனைவியின் உள்ளக் கிடக்கை எது என்பது ஆண்களால் அறிய முடியாத புதிர். தன்னிஷ்டப்படி நடக்க கணவன் இடைஞ்சலாக இருந்தான் என்பதனால் சல்லி பெறாத விஷயத்திற்காக கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுகிறாள் அந்த வீராங்கனை. அங்கு சென்றவுடன் அவள் அறிவுரை கேட்பது சகுனி மாமாக்களிடமும் பெண்ணிய வாதம் பேசும் கிழக் கோட்டான்களிடமும்தான்.

“திரும்பியும் அவன் கிட்ட போய் நிக்க மாட்டேன்! அவனைப் பார்த்து விடணும் ஒரு கை!” என்பாள். உடனே அவர்கள், “சட்டங்கள் எல்லாமே உன் பக்கம்தான். எனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவர் இருக்கிறார். போலீசிடமும் மேலும் நீதி மன்றத்திலும் மிகுந்த செல்வாக்குள்ளவர். அவர் மூலம் ஒரு டஜன் கேசுகளை ஒண்ணு மேல ஒண்ணா போட்டு, ஜீவனாம்சம் (alimony), பராமரிப்புத்துகை (maintenance) என்று பல வகையில் தீட்டிப்பிடலாம் தீட்டி. அவனை ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவில் நிக்க வைத்து விடலாம். கவலைப் படாதே!” என்று கூறும் அறிவுரைகளினால் ஞானம் பெற்று, “ஆகா! பார்க்கிறேன் ஒரு கை!” என்று அடுக்கடுக்காக கேசுகளைப் போடத் தொடங்குகிறாள் அந்த புரட்சிப் பெண் திலகம்.

இப்படித்தான் முடிகின்றன 90%-க்கு மேற்பட்ட திருமணங்களும் (காதல் ரூட்டில் வந்தவை உட்பட).

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்தியாவின் திருமணம் சார்ந்த சட்டங்களின் அடிப்படையில் தன்னிச்சைப்படி கணவனை விட்டு ஓடிப்போன மனைவியின் லிப்ஸ்டிக் சிலவுக்கும், செல்ஃபோன் சிலவுக்கும், அவள் தன்னிஷ்டப்படி உல்லாச வாழ்வு வாழ்வதற்கான சிலவுக்கும் சேர்த்து அந்தக் கண்வன் மாதாமாதம் பணம் கொடுத்து அழவேண்டும். அது அவன் கடமை.

ஆனால் அவனுக்கு அந்த மனைவியிடம் ஏதேனும் உரிமை இருக்கிறதா? ஒன்றும் கிடையாது. “சரீய்யா, அதான் மாசாமாசம் பணம் கொடுக்கிறேனே, இன்னமும் சட்டப்படி அவள் மனைவிதானே, ஒரு இரவு படுக்கை சுகத்தையாவது நான் கொடுக்கிற காசுக்கு கூலியா கொடுக்கக்கூடாதா” என்று கேட்டால், உடனே உங்களை “மனைவியை ரேப் பண்ண முயற்சித்தான்” என்று சொல்லி உள்ளே போட்டுவிடுவார்கள். நான் சும்மா சொல்லவில்லை. சட்டங்களும் அவற்றின் அடிப்படையில் அமைந்த தீர்ப்புக்களும் இப்படித்தான் சொல்கின்றன.

திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்களில் இதுபோன்று ஓடிப்போன மனைவிகள் பல சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மையிண்டெனன்ஸ் கேட்கலாம். அதாவது:

  1. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection of Women against Domestic Violence Act) – இது போன்ற முட்டாள்தனமான சட்டம் உலகத்திலேயே கிடையாது. இதுதான் “பெண்குலம் வன்முறையே செய்யாது. ஆண்கள் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவார்கள்” என்று இருபாலரிடையே பிளவு செய்து வரையறுக்கிறது. இந்த சட்டத்தின்படி வீட்டை விட்டு ஓடிப்போன மனைவி புகார் கொடுத்தால் அவளுடைய கணவனும் அவனுடைய பெற்றோரும் தங்களுக்குச் சொந்தமான வீட்டைவிட்டே ஓடிவிடவேண்டும். கேசு போட்ட ராணியம்மா தன் மனத்துக்குகந்தவர்களுடன் அங்கு குடியேறி “உல்லாசமாக” வாழ்ந்து கொண்டிருக்கலாம்!
  2. Sec 125 of CrPC (இது மிகக் கொடுமை. பணம் கொடுக்காவிட்டால் உடனே கைதுதான்)
  3. Sec 24 of Hindu Marriage Act (உங்கள்மேல் கேசு போட அவளுக்கு நீங்களே பணம் கொடுக்கவேண்டும்!)
  4. Under Hindu Adoptions and Maintenance Act

இப்படிப் போட்டுப் பிரட்டிப் பிரட்டி செத்த பாம்பு அடிப்பதுபோல் அடித்து விடுவார்கள். “ஐயா எசமான்களே, இப்போ பொருளாதார நிலை சரியில்லை. மூணு மாசமா எனக்கு சம்பளமே வரல்ல. அப்படி இனிமே வந்தாலும் பாதி சம்பளம்தான் கிடைக்கும் போல இருக்கு. மெயிண்டனென்சை ரத்து செய்ங்க, அல்லது குறைச்சுப் போடுங்க” என்று அந்தப் புருஷன் கதறினால்கூட நீதிபதிகள் செவி சாய்க்கமட்டார்கள். “எப்படியாவது அந்தப் பெண் கேட்கிற பணத்தைக் கொடுத்துப்போடு. இல்லாவிட்டால் ஜெயிலுக்குப் போ” என்று ஆணையிட்டு விடுவார்கள். பிறகென்ன, அந்த முட்டாள் கணவன் தன் கிட்னியைத்தான் விற்க வேண்டும்!

ஆகையினால் மகா ஜனங்களே, நீங்களோ உங்கள் பையன்களோ திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன்னால் இந்தச் சட்டங்களைப் பற்றிய அறிவைப் பெறுங்கள். சீக்கிறமே எங்கள் அமைப்பு (Save Indian Family Foundation) ஒரு சட்ட விழிப்புணர்வுப் பட்டறையை நடத்தவிருக்கிறது. அது பற்றிய அறிவிப்பு விரைவிலேயே இங்கு வெளிவரும்.

இனி மேலே இடது பக்கத்தில் இருக்கும் செய்தியைப் படித்துவிட்டு இரண்டு சொட்டு கண்ணீர் விடுங்கள். வேறு என்ன செய்ய முடியும் நம்மால்!

ஆண்கள் ஆசிட் வீசினால் என்கவுண்டர். பெண்கள் வீசினால்?

சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் இரு பெண்கள் மீது ஆசிட் வீசியதற்காக மூன்று ஆண்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளினார்கள் போலீசார். உடனே பல பெண்கள் இயக்கத்தினரும், பெண்ணிய வியாதிகளும், “பெண்” என்ற சொல்லைக் கேட்டவுடனேயே ஜொள்ளு விட்டு ஸ்கலிதமாகும் வெத்துவேட்டு ஆண்களும், “அவர்களை அப்படித்தான் கொல்ல வேண்டும். அநியாயமாக பெண்கள்மேல் ஆசிட் வீசியதற்கு அந்த ஆண்களை அப்படித்தான் கேள்வி முறையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று கிரீச்சென்று கூக்குரலிட்டுக் கூத்தாடினார்கள்.

ஆனால் நேற்று ஒரு பெண், ஒரு போலீஸ்காரர் மீதே கலெக்டர் ஆபீசில் ஆசிட் ஊற்றினாளே, அவளை ஏன் என்கவுண்டரில் போடச் சொல்லிக் கேட்கவில்லை? எங்கே போனீங்க பெண்ணியவியாதிகளே! அன்று டை அடித்த தலையை பரப்பி வைத்துக் கொண்டு லிப்ஸ்டிக் போட்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு டிவி சேனலில் “அப்படிதான் ஆண்களை கொல்லவேண்டும். அதுதான் மிகவும் சரியான தண்டனை” என்று கோஷம் போட்ட பெரிய இடத்துப் பெண்மணிகள் எங்கே போனார்கள் இப்போது?

இந்த நாட்டில் வெகு சிக்கிறமே ஆண் குழந்தைகளை கருவிலேயே கொன்று விடுவார்கள். அல்லது கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருக்கிறான் என்று வளர்ந்த பிறகு கொன்று விடுவார்கள் நம் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்.

சீ, வெட்கங்கெட்ட சமுதாயமடா இது!

இனி படியுங்கள் அந்த கண்றாவி செய்தியை:

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்

திருவள்ளூர் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு போலீஸ் காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி கைது

திருவள்ளூர், ஆக. 26-

‘திருமணம் செய்ய மாட்டேன்’ என்று கூறிய காதலனின் முகத்தில் ஆசிட் வீசிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரி முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சாந்தினி (எ) புவனேஸ்வரி (30). சென்னையில் உள்ள தனியார் ஏற்றுமதி கம்பெனியில் வேலை செய்கிறார். தினமும் பஸ்சில் வேலைக்கு செல்லும்போது சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரவணன், சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். பஸ்சில் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்ளும்படி சாந்தினி வற்புறுத்தி வந்தார். திருமணத்துக்கு மறுத்த சரவணன், சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழித்துவந்தார். ஆத்திரமடைந்த சாந்தினி, இதுபற்றி திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமாரிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்க சமூகநலத் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி, சமூக நல அலுவலர் லதா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சாந்தினி, சரவணனிடம் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது சாந்தினிக்கும் சரவணனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. கோபத்தில் எழுந்த சாந்தினி, கைப்பையில் மறைத்து வைத்திருந்து ஆசிட்டை எடுத்து சரவணன் முகத்தில் வீசினார். முகம் வெந்து வலியால் துடித்த அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரவணன் கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் நகர போலீஸ் எஸ்ஐ லட்சுமிபதி வழக்குபதிவு செய்து சாந்தினியை கைது செய்தார். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(செய்தி: தமிழ் முரசு. 27-08-2009)

கணவனென்னடா குழந்தையென்னடா கள்ளக்காதல் உலகினிலே!

வெட்கக்கேடு. இந்த லட்சணத்தில் காதல் கல்யாணம் வேறு!

ஆனால் ஒரு ஆறுதல். அந்தக் குழந்தை ஒரு கள்ளக் காதல் சூழலில் வளராது. கணவனும் வரதட்சணை பொய் வழக்கிலிருந்து தப்பித்தான்!

பசை இருந்தால்தானே காதல் ஒட்டும்!

அயனாவரம் : காதலுக்கு, “குட்பை’ சொல்லியும், ஏற்க மறுத்து தகராறு செய்த காதலனை போலீசார் ஈவ்-டீசிங் வழக்கில் கைது செய்தனர். (செய்தி: தினமலர் – 2009 ஆகஸ்டு 25)

சென்னை ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த டேரிக் யூட்டஸ் மகன் லியாநாத் யூட்டஸ்(27); ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் கடந்த 14 ஆண்டுகளாக வசித்தவர் எட்வர்டின் மகள் ஷெரீல்(26). கடந்த ஓராண்டாக இருவரும் காலித்தனர். லியாநாத் சம்பாதிக்கும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தில், பாதி பணம் காதலிக்கு செலவழித்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் லியாநாத் வேலை இழந்தார். இதையறிந்த ஷெரீல், வீட்டை அண்ணா நகருக்கு மாற்றிவிட்டார். அண்ணாநகர் வீட்டிற்கு அடிக்கடி சென்று காதலை ஏற்கும்படி லியாநாத் கூறினார்.

இதற்கிடையே, அயனாவரம் வெள்ளாளர் தெருவில் உறவினர் வீட்டிற்கு வந்த ஷெரீலை, லியாநாத், நடுரோட்டில் கையை பிடித்து இழுத்தார். இதனால், காதல் ஜோடியிடையே தகராறு ஏற்பட்டது. ஷெரீல் கொடுத்த புகாரின் பேரில், அயனாவரம் இன்ஸ்பெக்டர் எட்வர்டு, ஈவ்-டீசிங் வழக்கில் லியாநாத்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்தார்.

————— ——————

சுத்த விவரம் புரியாத ஆளய்யா, இவரு! இன்னொரு இலவச ஏ.டி.எம் மெஷினைத் தேடிப் போயிருப்பாள்(ர்) அந்தக் காதல் இளவரசி என்பது அறியாமல் பழைய டயலாகையெல்லாம் நம்பிப் போய் கையைப் பிடித்திருக்கிறார். சட்டம் தெரியாதவங்க!!

விட்டில் பூச்சிகள் பிழைப்பது எங்கே!!

கள்ளக்காதலை கண்டித்த கணவன் தலையை கல்லால் நசுக்கி கொலை

கள்ளக் காதல் பத்தினிகள் கணவனைக் கொலை செய்து கண்டம் துண்டமாக வெட்டும் அலை ஓயவில்லை. உண்மையில் அந்தக் கலை மேன்மேலும் வளர்ச்சி கண்டிருக்கிறது.

கள்ளக் காதல் செய்யும் பெண்குலத்திலகங்கள் தனியாகவோ கள்ளக் கூட்டாளியுடன் சேர்ந்தோ இதுபோல் கொலை செய்வது ஒரு ரகம். அவர்களை விட அதிபுத்திசாலிகள் தங்கள் கைகளை கொலை செய்து அழுக்காக்கிக் கொள்ளாமல் காக்கிகளுக்கு ஃபோன் செய்து விடுகிறார்கள். அவர்கள் அந்தக் கணவனை கவனிக்க வேண்டியபடி கவனித்து சுபாரி போட்டு விடுகின்றனர். யாராவது கூக்குரலிட்டால் விசாரணைக் கமிஷன் போட்டால் போகிறது. இது நல்லாயிருக்கே!

சரி இப்போது லேட்டஸ்ட் கொலையைப் பற்றிப் படியுங்கள்:

செய்தி: தினமலர்.

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி வாத்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் தோப்பில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி நீலாவதி (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பட்டுக்கோட்டை சாக்கு வியாபாரியான செந்தில் (32), வாத்தலைக்காடு பகுதிக்கு வியாபார ரீதியாக அடிக்கடி வந்து சென்றபோது, நீலாவதிக்கும், செந்திலுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. பல நாட்களாக நீடித்தது. இவர்களின் கள்ளத்தொடர்பு மாரிமுத்துவுக்கு தெரியவர, அவர் இருவரையும் கண்டித்தார்.

இதில், ஆத்திரமடைந்த செந்தில், நீலாவதி ஆகியோர் நேற்று முன்தினம் (15ம் தேதி) அதிகாலை ஐந்து மணியளவில் தூங்கி கொண்டிருந்த மாரிமுத்துவின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டு த லையை நசுக்கி கொன்றனர். பின் பிணத்தை சாக்குப்பையில் கட்டி வீட்டுக்குள் வைத்து விட்டனர்.

இரவு பத்து மணிக்கு மேல் டி.வி.எஸ்., 50 பைக்கில் மாரிமுத்துவின் உடலை எடுத்துச் செ ன்று தூரத்தில் வீசிவிட்டு வரலாம் எனக்கருதி செந்தில், நீலாவதி ஆகியோர் புறப்பட்டனர். வழியில், தில்லங்காடு பகுதியில் நின்ற கிராமமக்கள், “சாக்கு பையில் என்ன,’ என விசாரித்தனர். இவர்கள் இருவரின் தடுமாற்றமான பேச்சில் சந்தேகமடைந்து, சாக்கு மூடையை பிரித்து பார்த்தனர். சாக்கில் கொலை செய்யப்பட்ட ஒருவரது உடல் இருப்பதை அறித்து, இருவரையும் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பேராவூரணி போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட மனைவி மீது வழக்கு

புதுடில்லி : கண்டபடி திட்டினாள் மனைவி; பொறுத்துப் பார்த்த கணவன், கோர்ட்டுக்குப் போய் விட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி; பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் சிறிய அளவில் அவ்வப்போது மோதல் வரும். ஆனால், அப்போதே சரியாகிவிடும். சில சமயம், பெரிதாக வெடித்துவிடும். இப்படித்தான் கடந்தாண்டு ஒரு நாள் சாதாரண விஷயம், பெரிதாகி இவர்களிடையே மோதலை அதிகப்படுத்தியது.

“பள்ளிக்கு நேரமாகி விட்டது; காரில் இறக்கி விடுங்கள்’ என்று மனைவி கூறியிருக்கிறாள். ஆனால், “எனக்கும் வேலை இருக்கிறது; என்னால் முடியாது’ என்று கணவன் கூறி விட்டார். இது தான் நடந்தது. ஆனால், இது பெரிதாகி இருவரிடையே மோதல் வெடித்தது. “சரி, என் தந்தை உன்னைக் காரில் போய் இறக்கி விடுவார்’ என்று கணவர் சொல்ல, “என்னை இறக்கி விட உங்களால் முடிந்தால் சரி; மாமனார் உதவியை நான் கேட்கவில்லை’ என்று கணவனைக் கண்டபடி திட்டியிருக்கிறாள் மனைவி.

இது மட்டுமின்றி, தன் குடும்பத்தினரை அழைத்துச்சென்று, கணவரையும், அவர் தந்தையையும் தாக்க முயற்சி செய்துள்ளார் மனைவி. அறையில் அடைத்து சில ரவுடிகளை வைத்தும் தாக்க முயற்சி நடந்துள்ளது. மாமனாருக்கு சில அடிகளும் விழுந்துள்ளது. இதனால், வெறுத்துப்போன அவரது கணவர், கோர்ட்டில் மனைவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். “ஸ்ருதி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. அதனால், அவர் மீது விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்’ என்று மாஜிஸ்திரேட் ரவீந்தர் சிங் தெரிவித்தார்.

செய்தி – தினமலர் – 20.08.2009

பிரிவுகள்:பொய் வழக்கு குறிச்சொற்கள்:, , , ,

ஆணின் உயிர் ஒரு செல்லாக்காசு!

ஒரு பெண் புகார் கொடுக்கிறார் என்றால் அதை உடனே கவனிக்கவேண்டியது நம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் விதிக்கப்பட்ட கடமையல்லவா!

அதுவும் தன் கணவன்மேல் புகார் கொடுத்தால் அதை தலைபோகிற அவசரமாகக் கருதி அந்தப் பெண்பாவையின் துயர் துடைக்க காவல்துறை அதிவேகமாக – அது இரவு நேரமாக இருந்தாலும் சரி – விரைந்து சென்று அந்த குற்றவாளியை (அதுதான் கணவன் – சட்டத்தின் கண்முன் ஒவ்வொரு மணமான ஆணும் குற்றவாளிதானே!) கைது செய்து அவனைச் செவ்வனே “விசாரணை” செய்து அந்தப் பெண்ணுலத் திலகத்தின் மனத்தில் மகிழ்ச்சியூட்ட வேண்டாமா! இதுதானே நம் சமூகத்தின் கடமை. அதற்காகத்தானே அடுக்குமேல் அடுக்காக பல ஆணழிப்புச் சட்டங்களை உருவாக்கி பழி வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது செய்தி:

முதலில் இன்றைய (ஆகஸ்டு 19, 2009) தினமலரில் வெளிவந்தது:

நீலாங்கரை: மனைவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நீலாங்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யார் அடுத்த பாலூரை சேர்ந்த நந்தன் என்பவரின் மகன் ரமேஷ் (34). இவரின் மனைவி உஷாராணி (32).கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் இறால் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, உடன் வேலை பார்த்த உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின், கொட்டிவாக்கம், வெங்கடேசபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, பிரியதர்ஷினி (12) என்ற மகளும், கீர்த்திவாசன் (9) என்ற மகனும் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.

ரமேஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, உஷாவுடன் தகராறு ஏற்பட்டது.இதில், மனைவியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 108 எண்ணுக்கு போன் செய்த உஷா, தன்னை கணவர் கொலை செய்ய முயற்சிப்ப தாக புகார் செய்தார்.இது தொடர்பாக, நீலாங் கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இரவுப் பணி பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் மூன்று போலீசார், வெங்கடேசபுரம் சென்று தகராறில் ஈடுபட்ட ரமேஷை நீலாங்கரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.பின், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரை விசாரித்தனர்.

விசாரணை முடிந்ததும் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கி, வீட்டிற்கு அனுப் பினர். போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறிய ரமேஷ், திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென் றனர். அங்கு மருத்துவர்கள் கை விரித்து விட்டதால், அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு ரமேஷை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரமேஷ் இறந்த தகவலறிந்து அவரின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களை போலீசார் சமாதானப் படுத்தினர். பின், ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இச்சம்பவம் குறித்து ரமேஷின் உறவினர்கள் கூறுகையில்,”நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வந்தனர்.

வீட்டிற்கு அருகிலேயே ரமேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றனர். அங்கும் ரமேஷை போலீசார் தாக்கினர்.போலீசார் அடித்ததால் தான் அவர் இறந்தார். எனவே, ரமேஷை கண்மூடித்தனமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அவரின் உடலை பெற்றுக் கொள்வோம்,’ என்றனர்.இது குறித்து, துரைப்பாக்கம் உதவிக் கமிஷனர் முரளி கூறுகையில்,அவரின் உடலில் எந்தவித காயமும் இல்லை. இதயகோளாறு காரணமாக அவர் இறந்ததாக கூறப் படுகிறது.இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்,’ என்றார். ரமேஷ் மரணம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
————————————-
Times of India Reports:

Ramesh’s relatives had a different version about the whole incident. According to them he had been staying away from his wife and was living with his sister. He was caught by a vehicle checking team when he was riding a two-wheeler and his bike was seized as he had no documents to support them. He had told the police that he would produce the papers for the two-wheeler and had gone to the house in Kottivakkam only to pick up the vehicle documents. His wife Usha thought that he had come to torture her and called the police, his relatives alleged. They said Ramesh had no history of any illness.

Ramesh had married Usha after a brief courtship, around
16 years ago. Police said the couple used to have regular fights and that they had been staying separately for a few months.

———————————

அடுத்து தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தி:-

ஆலந்தூர், ஆக.19-

குடும்ப தகராறில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காதல் திருமணம்

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவரது சொந்த ஊர் செய்யூர் அருகே உள்ள பாலூர் கிராமம் ஆகும்.

இவருடைய மனைவி உஷாராணி (32). இவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ரமேஷ்-உஷாராணி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தகராறு

உள்ளகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ரமேஷ் வேலை பார்த்து வந்தார். ரமேஷ் மது அருந்தி விட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் கடந்த ஒரு வாரமாக ரமேஷ் வீட்டிற்கு வராமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. உடனே இது பற்றி உஷாராணி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

உடனே நீலாங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், 4 போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

சாவு

குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்த ரமேசை போலீசார் வீட்டின் முன் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மயங்கி விழுந்தார்.

உடனே போலீசார் ரமேசை தூக்கிக் கொண்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.

இதையடுத்து போலீசார் தங்கள் காரில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.

மறுப்பு

இது பற்றிய தகவல் கொட்டிவாக்கம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. ரமேசின் உறவினர்கள் அடையாறில் உள்ள மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து விட்டதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அடையாறு துணைக்கமிஷனர் திருஞானம், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று சமரசம் பேசினார்கள். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து இருப்பதால் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின் தனியார் மருத்துவமனையில் இருந்த ரமேஷ் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

நடவடிக்கை

இது பற்றி போலீசார் கூறுகையில், “குடிபோதையில் ரமேஷ் இருந்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். சிறு வழக்கு போட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறினோம். ஆனால் ரமேஷ் போலீஸ் நிலைய வாசலில் மயங்கி விழுந்தார். உடனே போலீசார் ரமேசை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டதால் ரமேஷ் இறந்து இருக்கலாம்” என்று தெரிவித்தனர்.

ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ரமேசின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த நிலையில் ரமேசின் மர்ம சாவு பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்திட சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிவின் அறிக்கை பெற்றபிறகு தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் கொட்டிவாக்கம், நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.