தொகுப்பு

Posts Tagged ‘paramour’

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி பிரவசத்திற்குப்பின் கைது

திருநெல்வேலி : தினமலர் – செப்டம்பர் 10, 2011 :: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=310751

நெல்லை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி இரு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

நெல்லை அருகே குறிச்சிக்குளம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாபு(35). டயர் கம்பெனியில் பணியாற்றினார். இவர் மனைவி உச்சிமாகாளி என்ற உமா(28). கடந்த ஜூலையில் பாபு வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தினர். பாபு சாவில் மர்மம் இருப்பதாக அவர் உறவினர்கள் கூறினர். பாபு உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. மூச்சு திணறி பாபு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் பாபுவின் மனைவி உமாவிற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உமாவிற்கும், தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்த லாரிஷெட் உரிமையாளர் நல்லசாமிக்கும் இடையே “கள்ளத்தொடர்பு’ இருந்துள்ளது. பாபு ஊரில் இல்லாத நாட்களில் இருவரும் ஜாலியாக இருந்தனர். இதை பாபு கண்டித்தார். இதுதொடர்பான தகராறில் சம்பவத்தன்று பாபுவின் முகத்தில் தலையணையை அமுக்கி நல்லசாமியும், உமாவும் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் நல்லசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். கணவன் உடலை படுக்கையில் போட்டு விட்டு எதுவும் தெரியாதது போல உமா கதறி நாடகமாடியுள்ளார்.

இச்சம்பவத்தின் போது உமா கர்ப்பிணியாக இருந்தார். சில நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை போலீசார் உமாவை கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் உமா கொக்கிரக்குளம் பெண்கள் சிறையில் தன் குழந்தையுடன் அடைக்கப்பட்டார். நல்லசாமியை போலீசார் தேடி வருகின்றனர். உமாவிற்கு சொந்த ஊர் மானூர்.

கள்ளக்காதலுக்காக தன் குழந்தையையே கொன்ற தாய்

mother-kills-her-child-for-being-a-hindrance-to-adulteryசிவகாசி: ஜூன் 16,2011,23. செய்தை: தினமலர்.

தொட்டிலில் தூங்கிய குழந்தையை, கள்ளக் காதல் மோகத்தால்,கொலை செய்த தாய், கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மதுரை பாண்டிக்கும், அனுப்பங்குளம் நயினார் மகள் துர்காதேவிக்கும், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. துர்காதேவி கர்ப்பிணியான நான்கு மாதத்தில், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கோரி, கணவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு சம்மதிக்காத துர்காதேவி, சேர்ந்து வாழ்வதாக கூறி, பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், துர்காதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பேச்சு வார்த்தைக்கு பின், 9 மாத குழந்தை முகேஷ் பாண்டியுடன், துர்காதேவி, கணவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். மாலையில் வீடு திரும்பிய கணவர், தொட்டிலில் தூங்கிய மகனை தூக்கினார்.பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.பரிசோதித்த டாக்டர்,”குழந்தை இறந்துவிட்டது’ என்றார். சந்தேகம் அடைந்த மதுரை பாண்டி, சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார், துர்காதேவியிடம் விசாரித்தனர்.

விசாரணையில், திருமணத்திற்கு முன் அனுப்பங்குளத்தை சேர்ந்த குமாருடன் துர்காதேவிக்கு ஏற்பட்ட பழக்கம், திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்தது தெரிய வந்தது.மேலும், கணவருடன் வாழப் பிடிக்காமல், தந்தையுடன் வசித்த துர்காதேவியை, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ, குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்; “குழந்தை உயிருடன் இருப்பதால் தானே, கணவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்துகின்றனர்…’ என நினைத்த துர்காதேவி, தொட்டிலில் தூங்கிய குழந்தையை, மூச்சு திணறடித்து கொலை செய்தார் என்றும் தெரிந்தது.இதையடுத்து, துர்காதேவியை போலீசார் கைது செய்தனர்.

ஜோதிடம் மீது பழி போட்ட தாய்:

பெற்ற மகனை கொலை செய்த தாய், மகன் இறந்ததை நினைத்து அழுவது போல் நடித்தார். அப்போது,”அப்பாவிற்கும், மகனுக்கும் ஜாதகம் சரியில்லை; அப்பாவும், மகனும் நேருக்கு நேர் பார்த்தால் யாராவது ஒருவர் உயிருடன் இருக்க மாட்டார் என, ஜோதிடர் கூறியது, பலித்து விட்டதே’ எனக் கூறி, அழுது புலம்பினார்.

ஆனால், பச்சிளம் குழந்தையை கொலை செய்த அவர், சிறைக்கு போகும் முன், போலீசார் வாங்கி கொடுத்த மதிய உணவை ருசித்து சாப்பிட்டபடி, எந்தவித பதட்டமும் இல்லாமல் காணப்பட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=258917

கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவர் கொலை :கூலிப்படையினருடன் மனைவியும் கைது

இப்போதெல்லாம் நம் நாட்டில் கள்ளக்காதல் குடிசைத் தொழில் அன்றாடம் ஜாம்ஜாமென்று நடந்தேறுகிறது. இதே ரீதியில் போனால் அனைத்து நாளிதழ்களும் “கள்ளக்காதல் சிறப்பு இதழ்கள்” தினந்தோறும் வெளியிடும் நிலை சீக்கிறமே வரலாம்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை போட்டுத் தள்ளும் கலையில் நம் பெண்குலத் திலகங்கள் முழுத் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம். மேலும் நம் பெண்ணியவாதிகள் இதை ஒரு மாபெரும் வெற்றியாகக் கூட கொண்டாடலாம்!

இதோ ஒரு லேட்டஸ்ட் செய்தி (நன்றி: தினமலர் – ஏப்ரல் 29, 2011 – சுட்டி):

wife kills husband for obstructing illicit relationshipதிருவள்ளூர்:கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கழுத்தறுத்துக் கொலை செய்த பாசக்கார மனைவியை, கூலிப் படையினருடன் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(45); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி(38). இவர்களுக்கு திருமணமாகி அபிலாஷ்(15), அஜீத்(12) என இரண்டு மகன்களும், பிரீத்தா(10) என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை செல்வகுமார் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஜோதி செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை திருவள்ளூர் எஸ்.பி., வனிதா அமைத்தார். விசாரணையில், செல்வகுமாரின் சொந்த ஊரான பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்த தைரியநாதன், அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றதும், செல்வகுமாரின் இறுதிச்சடங்கில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டுச் சென்றதும் தெரிந்தது.

மேலும்,தைரியநாதன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை செல்வகுமாருக்கு கடன் கொடுத்திருந்ததும், அதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததும், இங்கு வந்து செல்லும்போது செல்வகுமார் மனைவி ஜோதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும் தெரிந்தது.செல்வகுமார் மனைவி ஜோதியை கைது செய்து விசாரித்தபோது, தைரியநாதனுடன் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாலும், கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், தைரியநாதன் உதவியோடு கணவரை கொலை செய்ய முடிவு செய்ததாக, அவர் போலீசாரிடம் கூறினார்மேலும் செல்வகுமாரை கொலை செய்வதற்காக தைரியநாதன், புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினரிடம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி, ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, செல்வகுமார் மனைவி ஜோதி ஒத்துழைப்போடு 20ம் தேதி இரவு வேப்பம்பட்டு அம்பேத்கர் நகர் வந்தனர்.
அன்று இரவு செல்வகுமார் கீழ் தளத்தில் படுத்துறங்கியதும், வீட்டின் தெரு கதவை திறந்து வைத்துவிட்டு, பிள்ளைகளுடன் மாடியில் படுத்துக் கொண்ட ஜோதி, தைரியநாதனுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அங்கு கூலிப்படையுடன் வந்த தைரியநாதன், தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தியால் கழுத்தை அறுத்தும், முதுகு, வயிற்றுப் பகுதியில் அறுத்தும் கொலை செய்ததாக தைரியநாதன் போலீசாரிடம் கூறினார்.இதையடுத்து தைரியநாதன் அடையாளம் காட்ட, சென்னையில் பதுங்கியிருந்த கூலிப்படையினரான அகரம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(24), ஜானகிராமன்(24) ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேலு, தங்கமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலை நேரில் பார்த்த கல்லூரி மாணவியை எரித்துக் கொலை செய்த தாய்

Mother murders daughterகடையநல்லூர்: தாயின் கள்ளக் காதலை கண்டித்த கல்லூரி மாணவியை தாயாரும், அவரது கள்ளக் காதலனும் சேர்ந்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.

கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன் இவரது மனைவி செண்பகவல்லி இவர்களது மகள் பத்மினி (18).என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினி மர்மமான முறையில் உடல் கருகி இறந்தார்.

இது தொடர்பாக அவரது தாயார் செண்பகவல்லியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கள்ளக்காதலனான கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்த சுந்தரையா என்பவருடன் சேர்ந்து பத்மினியை தீவைத்து எரித்துக் கொன்றது தெரியவந்தது.

சுந்தரையா செண்பகவல்லியின் உறவினரும் ஆவார். செண்பகவல்லியின் கணவர் இல்லாத சமயத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை பத்மினி நேரில் பார்த்து பலமுறை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொன்று பின்னர் அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர்.

போலீசாரிடம் பத்மினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினர். போலீசார் விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டனர்.

சுந்தரையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி: தட்ஸ்தமிழ்.

English summary
Mother and her lover were arrested for murdering daughter for opposing their illicit relationship in Kadayanallur town

கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

சாணார்பட்டி – ஏப்ரல் 02,2011 : கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமேடையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(40).விவசாயக்கூலி. இவரது மனைவி வெள்ளையம்மாள்(40).இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வெள்ளையம்மாளுக்கும், இதே ஊரைச்சேர்ந்த ஆரோக்கியசாமிக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்தது. வெள்ளைச்சாமி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற வெள்ளைச்சாமியை, வெள்ளையம்மாளும் கள்ளக்காதலன் ஆரோக்கியச்சாமியும் சேர்ந்து கொலை செய்து, உடலை சிறுமலை அடிவாரம் பகுதியில் ஒரு பள்ளத்தில் மூடி, விட்டனர். பின், வெள்ளையம்மாளே சாணார்பட்டி போலீசில் தனது கணவர் வெள்ளைச்சாமி காணவில்லை என புகார் செய்தார்.போலீசாருக்கு வெள்ளையம்மாள் மீது சந்தேகம் ஏற்பட்டது. வெள்ளையம்மாளை விசாரித்ததில், அவர், “நானும் எனது கள்ளக்காதலன் ஆரோக்கியசாமியும் சேர்ந்து வெள்ளைச்சாமியை கொன்றோம்,” என ஒப்புக்கொண்டார்.

இறந்த வெள்ளைச்சாமி உடல் மதுரைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. போலீசார் வெள்ளையம்மாள், ஆரோக்கியசாமியை கைது செய்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=217101

தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்; பிளஸ்-2 மாணவி தூக்கு போட்டு சாவு

Girl commits suicide because of mother's adulteryகடலூர், மார்ச். 12, 2011செய்தி: மாலைமலர்

பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் அஞ்சாபுலி(வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி(34). இவர்களது மகள் ஆனந்தி (17). இவர் பேர்பெரியான்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இதற்கிடையே செல்விக்கு வேறு ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செல்வி கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை செல்வி முத்தாண்டிக் குப்பத்துக்கு வந்தார். அப்போது செல்வியை மீண்டும் வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என ஆனந்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அதனை மீறி செல்வி கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தி நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையில் முடிந்த “மிஸ்டு கால்” கள்ளக்காதல்

வடமதுரை அருகே பெண் இன்சூரன்ஸ் ஏஜன்ட் கொலையில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

செய்தி: தினமலர் (சுட்டி). நாள்: பிப்ரவரி 24,2011

மிஸ்டு கால் கள்ளக்காதல்திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கொம்பேறிபட்டியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் முருகேசன் மனைவி தனலட்சுமி(33). எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் ஏஜன்ட். கடந்த மாதம் 4ம் தேதி காந்திகிராமம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அய்யலூர் தீத்தாகிழவனூர் பாலத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை காணவில்லை. வாகனத்தில் கொண்டு வந்த பிணத்தை உருட்டிவிட்டதற்கான அடையாளம் சம்பவ இடத்தில் இருந்தது. தேர்தலுக்கான போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதால் எரியோடு இன்ஸ்பெக்டர் முத்துபாண்டியிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

அவரது தலைமையிலான தனிப்படையினர் விசாரணையில், நான்கு மாதங்களுக்கு முன் தனலட்சுமியின் தவறுதலான “மிஸ்டு கால்’ மூலம் அறிமுகமானவர் திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டைச் சேர்ந்த குமரேசன்(26). இவரது தந்தை மாரியப்பன் திண்டுக்கல் தாட்கோ அலுவலக உதவியாளர். 9ம் வகுப்பு வரை படித்த குமரேசன், தனது தந்தை வேலை செய்யும் அலுவலகம் அருகில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

தனலட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பினால், அவரது மனைவி பாத்திமா, இரண்டு குழந்தைகளும் குமரேசனிடம் கோபித்து கொண்டு சென்று விட்டனர். சம்பவத்தன்று குமரேசனுடன் தனலட்சுமி காரில் சுற்றி வரும் போது, தனலட்சுமி மொபைலுக்கு வேறொரு ஆண் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த குமரேசன், தனலட்சுமியின் மொபைலை பறிக்க முயற்சிக்க, அவர் தரமறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் தனலட்சுமியை காரினுள் வைத்து கொலை செய்து, அவரது நகைகளை எடுத்து கொண்டு அய்யலூர் பாலத்தில் பிணத்தை தள்ளிவிட்டு சென்றது தெரிந்தது.

இதனையடுத்து குமரேசனை கைது செய்த போலீசார் தனலட்சுமியின் நகைகளை மீட்டு, கொலைக்கு பயன்படுத்திய இண்டிகா காரையும் பறிமுதல் செய்தனர்.

மொபைலில் கணவர், அருகில் கள்ளக்காதலருடன் ஜல்ஸா – பூங்காவில் “தவித்த” அபலைப் பெண்!

கள்ளக்காதல்கள்ளக்காதலருடன் மேட்டூர் அணை பூங்காவுக்கு வந்த பெண்மணியை, கணவர் மொபைலில் தொடர்பு கொண்டு அழைத்தார். எங்கு செல்வது என, தெரியாமல் பரிதவித்த பெண்மணியை, செக்யூரிட்டிகள் வெளியேற்றினர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மற்றும் பூங்காவில் முன்னாள் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விடுமுறை நாளில் தமிழகம் முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மேட்டூர் அணை பூங்காவை சுற்றி பார்ப்பது வழக்கம்.

நேற்று, பூங்காவுக்கு 40 வயது பெண்மணி ஒருவரும், 32 வயது ஆண் ஒருவரும் ஜோடியாக வந்தனர். இருவரும் கைகோர்த்தவாறு பூங்காவில் வலம் வந்துள்ளனர். அப்போது, திடீரென பெண்ணின் மொபைலுக்கு அழைப்பு வந்துள்ளது. மொபைலை எடுத்த பெண்மணி, வெகுநேரமாக ஒரே இடத்தில் நின்று பேசியுள்ளார்.

உடன் வந்த ஆண், அந்த பெண்ணிடம் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு, தன்னுடன் வரும்படி சைகை செய்துள்ளார். ஆனால், மொபைலில் கணவருடன் காரசார வாக்குவாதத்தில் பெண்மணி ஈடுபட்டுள்ளார்.வெகுநேரம் மொபைலில் பெண் பேசி கொண்டிருப்பதையும், அருகில் நிற்கும் ஆண் சைகை மூலம் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் படி வற்புறுத்துவதும், ரோந்து பணியில் ஈடுபட்ட செக்யூரிட்டிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, செக்யூரிட்டி அருகில் சென்று, இருவரையும் விசாரித்துள்ளார். அதில், அந்த பெண்மணி கட்டுமான தொழிலுக்கு செல்பவர். கணவரிடம் கட்டுமான தொழிலுக்கு செல்வதாக கூறி விட்டு, அந்த பெண்மணி கொத்தனார் வேலை செய்யும் வாலிபருடன் பூங்காவுக்கு வந்ததுள்ளார். அப்போது, மொபைலில் பேசிய கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இருவரும் வெகுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக கள்ளக்காதலர், பெண்மணி இருவரையும் செக்யூரிட்டி பூங்காவில் இருந்து வெளியேற்றினார்.இந்த சம்பவம் பூங்கா ஊழியர்கள், செக்யூரிட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி: தினமலர். பிப்ரவரி 14,2011

சீதைக்கும் முருகனுக்கும் கள்ளக்காதல், முடிவு என்ன?

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கள்ளக்காதலியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலகுமிழங்குளத்தை சேர்ந்தவர் நாகேஷ் (41). இவரது மனைவி சீதை (32). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன்(28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதில் இருவரும் வெளியூருக்கு ஓடி விட்டனர்.

சில மாதங்களில் சீதை ஊர் திரும்பினார். முருகனும் ஊர் திரும்பி, வேறு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2007 ஜூன் 6ம் தேதி முருகனை சீதை சந்தித்தார். முருகன், “எனக்கு திருமணம் ஆகி விட்டது, நீ மருந்து குடித்து செத்து தொலை” எனக் கூறினார்.

வீடு திரும்பிய சீதை, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வழக்கில் முருகனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து அருப்புக்கோட்டை சப் கோர்ட் நீதிபதி ஜெசிந்தா மார்டின் தீர்ப்பளித்தார்.

செய்தி: தினமலர்
: பிப்ரவரி 10,2011

இதோ இன்னொரு தெய்வீக கள்ளக்காதல்!

கள்ளக்காதல் விவகாரம் : இளம் பெண் தற்கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்காதல் பிரச்னை காரணமாக இளம் பெண் தற்கொலை செய்து இறந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையத்தைச் சேர்ந்தவர் சாந்தி (27) , இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த 6 மாதங்களாக சாந்தி , அம்மம்பாளையத்தில் இருக்கும் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

அதே பகுதியில் இருக்கும் சண்முகம் என்பவருடன் சாந்திக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சாந்தியின் பெற்றோர்கள் அவரை கண்டித்தனர்.

இந்நிலையில் சாந்தி நேற்று அவர் படித்த கல்லூரிக்குச் சென்று வருவதாக சொன்னார். ஆனால் வீடு திரும்பவில்லை. தேடிப்பார்த்த போது சாந்தியும் , சண்முகமும் சென்னிமலை பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தனர். அரளி விதையை அரைத்து குடித்திருந்தனர். இருவரும் மருத்துவ‌மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சண்முகம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமலர் – பிப்ரவரி 09,2011