தொகுப்பு

Archive for 2009-08-09

ஆணாகப் பிறந்த குற்றம்!

சில்மிஷத்தில் ஈடுபட்டது ஆணும் பெண்ணும் – முழுதும் இஷ்டப்பட்டு திருட்டுத்தனமாக. ஆனால் கைதாவது ஆண் மட்டும்தான். பெண்ணைக் கண்டித்து வீட்டு அனுப்பி விடுவார்களாம். ஆணை மட்டும் சிறையில் தள்ளுவார்களாம். ஏனெனில் அவன் ஆணாகப் பிறந்து விட்டானாம்!

இதுபோன்ற ஒருதலைப் பட்சமான கண்ணோட்டம் சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறது. இது போன்ற ஆணெதிர்ப்பு அணுகுமுறையும், அவனை மட்டும் தண்டிக்கும் போக்கும் மாறாமல் இந்தத் தவறான போக்கு தொடருமேயானால் சீக்கிறமே ஆண்களில் பலர் வெறுப்பு மேலோங்கி சீரியல் கில்லர்களாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது!

இனி செய்தி:-

நெல்லை, ஆக.9- 2009. செய்தி – தினத்தந்தி

நெல்லை சந்திப்பு மீனாச்சிபுரத்தை சேர்ந்த இஸ்ரேல் மைசன் பீட்டர்(23), ஜெபராஜ் ஆகிய வாலிபர்கள் நேற்று முன்தினம் பாளை. பஸ் நிலையம் பகுதிக்கு காரில் வந்தனர். அங்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த தங்களுக்கு தெரிந்த 2 மாணவிகளிடம் பேசி தங்களது காரில் ஏறும்படி கூறினார்கள். இதன்படி இஸ்ரேல் சைமன் பீட்டர் தனது காதலியுடன் சொகுசு காரில் முன்சீட்டிலும், ஜெபராஜ் தனது காதலியுடன் காரின் பின்சீட்டிலும் ஏறிக்கொண்டார்.

பின்னர் காரை மெதுவாக ஓட்டி இலந்தகுளம் கரை அருகே உள்ள ஒதுக்குப்புறமான சாலை ஓரத்தில் நிறுத்தினார்கள். அங்கு 2 வாலிபர்களும் மாணவிகளிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டு உள்ளனர். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து பாளை. போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று 2 வாலிபர்கள் மற்றும் மாணவிகளை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

2 பேர் கைது

பின்னர் மாணவிகளின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாணவிகளை கண்டித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை ஒருவர் பாளை. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பாளை. போலீசார் ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு செய்து இஸ்ரேல் மைசன் பீட்டர், ஜெபராஜ் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கார் மற்றும் 1 ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பிரிவுகள்:கள்ளக்காதல் குறிச்சொற்கள்:, , , , ,